[latest-news] குலசேகரப்பட்டி பஞ் தலைவருக்கு காசோலையில் கையெழுத்திடும் செக்பவர் அதிகாரத்தை மீண்டும் வழங்கி மாவட்ட ஆட்சி தலைவர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார் கீழப்பாவூர் யூனியன் குலசேகரப்பட்டி பஞ்சாயத்தில் பஞ் தலைவராக இளங்கோவும் துனை தலைவராக சுப்பிரமனியன் செயல்பட்டு வந்தனர் இந்நிலையில் பஞ் நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க மறுத்து வருவதால் துனை தலைவர் சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்கும் படி பஞ் வார்டு உறுப்பினர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் இதனை விசாரித்த உயர்நீதி மன்றம் பஞ் துனைத்தலைவர் மீது வட்டாட்சியர் முன்னிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் தோல்வியடைந்த பஞ் துனை தலைவர் சுப்பிரமணியனை பதவி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார் மேலும் பஞ்சாயத்தின் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான காசோலையில் கையெழுத்திடும் செக் பவர் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சியிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்ட கலெக்டார் கருணாகரன் வழங்கிய ஆணையில் கீழப்பாவூர் யூனியன், குலசேகரப்பட்டி பஞ் நிர்வாகத்தின் நலன் கருதி பஞ் தலைவருக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காசோலையில் கையெழுத்திடும் செக்பவர் அதிகாரத்தை மீண்டும் வழங்குவதாகவும், இரண்டாவது நபராக கையெழுத்திட பஞ் நிர்வாகத்தினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள குலசேகரப்பட்டி வார்டு உறுப்பினர் பேச்சிமுத்து என்பவருக்கு அனுமதி வழங்கியும் இதன் முலம் ஆணையிடப்படுகிறது. என மாவட்ட ஆட்சி தலைவர் கருணாகரன் கீழப்பாவூர் வட்டார வளார்ச்சி அலுவலர் மற்றும் குலசேகரப்பட்டி பஞ் தலைவர் இளங்கோவுக்கு ஆணை பிறப்பித்துள்ளார் செய்தி ;செ.பிரமநாயகம்-தென்காசி

