இலங்கை தலைநகர் கொழும்புவில் இரண்டு சர்ச்சுகளில் ஏற்பட்ட குண்டுவெடிப்பால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
இலங்கை கொச்சிக்கடை அந்தோணியார் கிறிஸ்தவ சர்ச் உள்ளிட்ட இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 80 பேர் வரை படுகாயம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நள்ளிரவு ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்துக்காக சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப் பட்டன. இதற்காக ஆயிரக் கணக்கில் கிறிஸ்துவர்கள் சர்ச்களில் கூடியிருந்தனர்.
அண்மைக் காலமாக இலங்கையில் கிறிஸ்துவ மதமாற்றம் அதிகரித்தும், போருக்குப் பிந்தைய இந்துக்களின் நிலங்களை போட்டியிட்டு கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் பௌத்தர்களும் அடித்துப் பிடுங்கி வருவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வந்தது. மேலும், இந்து, பௌத்தர்களின் வழிபாட்டிடங்களில் கிறிஸ்துவர்களின் ஆக்கிரமிப்பு களால் சமூகப் பதற்றம் அதிகரித்து வந்தது.