காத்மாண்டு: இயற்கைப் பேரழிவான நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் உடனடி மீட்புப் பணி மற்றும் சீரமைப்புக்காக இந்தியா செய்துவரும் உதவிகள் நிரப்பப்படாத காசோலை – ப்ளாங் செக் – போல் நீண்டு கொண்டே செல்கிறது என்று உருக்கமாகக் கூறியுள்ளது நேபாளம். இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 5,057 பேர் பலியானதாகத் தெரிந்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.

