நேபாளத்தில் இந்தியாவின் மீட்புப் பணிகள்: அமெரிக்க தூதர் பாராட்டு

Published:

புதுதில்லி: நில நடுக்கத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் மீட்புப் பணிகளை அமெரிக்கத் தூதர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். புது தில்லியில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்டு வெர்மா, அண்மைக் காலங்களில் இந்தியா தனது உலகளாவிய தலைமைத்துவத்தை நிரூபித்துள்ளது. முதலில் ஏமனில் மீட்புப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்ட இந்தியா தற்போது நேபாளத்திலும் அதைச் சிறப்பாக செய்துள்ளது. இதற்காக நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இந்தியாவின் மீட்புப் பணிகளால் நாங்கள் (அமெரிக்கா) மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளோம். எங்கள் ஒத்துழைப்பு விரிவடைந்து வருவதால் இந்தியா சி-17எஸ், சி-30எஸ் ரக ஹெலிகாப்டர்களை மீட்புப் பணிகளில் பயன்படுத்தி வருகிறது. நமது உறவுகள் வளர்ந்து வருவதால், நாம் மேலும் ஒன்றிணைந்து சிறப்பாகச் செய்ய முடியும் என்றார்.

Related articles

Recent articles

spot_img