வாட்ஸ்அப் அக்கப்போர்; மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு; ஆப்க்கு ஆப்பு?

03 June16 Whatsapp - 2026

இந்தியாவின் மிகப் பெரும் நியூசன்ஸ் என்று பேர் எடுத்திருக்கிறது வாட்ஸ்அப். அதனால் ஏற்படும் பயன்களைக் காட்டிலும், சமூகத்தை சீரழிக்கும் அல்லது பதற்றத்துக்கு உள்ளாக்கும் செயல்பாடுகள்தான் அதிகம்!

காரணம், பார்வர்ட் செய்திகள். கண்ணால் கண்ட அனைத்தையும் அடுத்தவர்க்கு பார்வர்ட் செய்து, பொய்களைப் பரப்புவதில், வாட்ஸ்அப் முன்னோடியாகத் திகழ்கிறது. இது மத்திய அரசுக்கு கவலை அளிக்கும் ஒரு விஷயம்!

இதனால் ஒரு முடிவு எடுத்த மத்திய அரசு, ஒரு செய்தி எங்கிருந்து முதலில் அனுப்பப்பட்டது என்பதைக் கண்டறிய நவீன தொழில்நுட்பத்தைக் காணுமாறு கூறியது. ஆனால், இந்தியாவின் கோரிக்கையை வாட்ஸ் ஆப் நிறுவனம் நிராகரித்துள்ளது.

வாட்ஸ் அப்பில் பொய்ச் செய்திகள், வதந்திகள் பெருமளவில் பரவி, குழந்தை கடத்துபவர்கள், பசுவதை செய்பவர்கள் என்பது தொடர்பாக மக்களின் படங்களைப் பரப்பி விட்டு, அவர்களை கும்பல் படுகொலை செய்வது வரை விஷமம் பரவிக் கிடக்கிறது. இதைத் தடுக்க வதந்தி மற்றும் பொய்ச் செய்திகளை முதலில் அனுப்பியவர் யார் எனக் கண்டுபிடிப்பதற்கு, ஒரு தொழில்நுட்பத்தைக் கண்டறியுமாறு வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் இந்திய அரசு கேட்டுக் கொண்டது.

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஆனால், இந்தக் கோரிக்கையை வாட்ஸ் ஆப் நிறுவனம் நிராகரித்துவிட்டது. செய்தியை முதலில் அனுப்பியவர் யார் என்பதைக் கண்டுபிடிப்பது, பயனாளர்களின் தனியுரிமைப் பாதுகாப்பை பாதிக்கும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது.

இதனிடையே, வாட்ஸ் ஆப் உள்ளிட்ட ஆப்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக புகார்கள் எழுந்த போதும், குறுஞ்செய்திகளை ஒட்டு மொத்தமாக தடை செய்யும் திட்டம் ஏதும் இல்லை என்று தொலைத் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.

பெருவாரியான சமூக நல ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று,  வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகளுக்கு கட்டுப்பாடு கொண்டு வரப்படலாம் என்று தகவல் வெளியான நிலையில், அவ்வாறு குறுஞ்செய்திகளுக்கான ஆப்-களை ஒட்டுமொத்தமாக தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தொலைத்தொடர்பு செயலர் அருணா சுந்தர்ராஜன் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் உறுதி கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories