ஆந்திர என்கவுண்டர்: 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு

andhra-high-court ஹைதராபாத்: ஆந்திர வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, நேற்று ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆந்திர போலீசார் வழக்கு விசாரணைக் கோப்புகளை அளித்தனர். அதில், ஏப்.14 ஆம் தேதிக்குப் பின்னர் வழக்கு விசாரணையில் முன்னேற்றம் எதுவும் இல்லாதது கவலையளிப்பதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், விசாரணை நடத்தும் போலீசார், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளின் ஆலோசனை பெறாமல், சுதந்திரமாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர். காவல்துறை அதிகாரி ரவிசங்கர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு ஏன் விசாரணையைத் தொடங்கவில்லை என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு அரசுத் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால், அடுத்த 60 நாட்களுக்குள் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட ஹைதராபாத் உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories