கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்! வருகிறது பயங்கரவாத தடுப்புச் சட்டம்!

srilanka parliament - 2026

தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி காரணமாக, இன்று அவசரமாக கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்! இதில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இயற்றப்படும் என்று தெரிகிறது.

நாட்டை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு குறித்து ஆலோசனை நடத்த அதிபர் சிறீசேன தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இலங்கையில் அவசரநிலையை பிரகடனம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலை அமலுக்கு வந்தது. இந்தச் சூழ்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று அவசரமாகக் கூடுகிறது. குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக இலங்கை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் நாடாளு மன்றத்தில் பேச உள்ளனர்.

இந்நிலையில், தொடர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு குழு ஒன்றை சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர் போல் அனுப்புகிறது. குண்டு வெடிப்பு நடைபெற்ற இடங்களை ஆய்வு செய்தல், வெடிகுண்டுகளை ஆய்வு செய்தல், பயங்கரவாத தடுப்பு, பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல் ஆகியவற்றில் சிறப்புத் திறன் பெற்றவர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பார்கள்.

இதனிடையே உளவுத் தகவல்கள் அதிபர் மைத்ரீபால சிறீசேனவுக்கு தெரிவிக்கப்பட்டும், உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதே இந்தத் தாக்குதல் நிகழக் காரணம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியிருந்தார். அரசியல் ரீதியாக கிறிஸ்துவ பின்னணி கொண்ட நபர் என்பதால் அவரது குற்றச்சாட்டு இலங்கை அரசியல் களத்தில் பெரிதாக பேசப்பட்டது. மேலும், அதிபருக்கும் பிரதமருக்கும் நிகழும் நிழல் யுத்தத்தின் ஒரு பகுதியாகவே இந்தக் குற்றச்சாட்டுகளை இலங்கை மக்கள் கண்டனர்.

மேலும் இந்த சதிச் செயலில், இஸ்லாமிய அடைப்படைவாத அமைப்புகள், சீனா, முன்னாள் அதிபர் ராஜபட்ச என முக்கூட்டு தொடர்புகள் இருக்கக் கூடும் என இலங்கையின் செய்தி நிறுவனங்கள் சில செய்திகளை வெளியிட்டன.

முன்னதாக, இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் அதிபர் சிறீசேன அவசர நிலையைப் பிரகடனம் செய்தார். குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைத்து, இரு வாரங்களில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், கொழும்பு நகரில் இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்!.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories