December 6, 2025, 11:51 AM
26.8 C
Chennai

இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்! ஐ.எஸ். பொறுப்பேற்றதாக ’ராய்ட்டர்ஸ்’ தகவல்!

srilanka funeral - 2025

இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளுக்கு இஸ்லாமிக் ஸ்டேட் என்ற ஐஎஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஏசு உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டா் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுகளில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்ற நேரத்தில், தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. மக்கள் அதிகம் கூடியிருக்கும் சர்ச்சுகள், நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் தொடா் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டது. இந்தத் தாக்குதலில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 321-ஆக உயா்ந்துள்ள நிலையில், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் குறித்து பல்வேறு அனுமானங்கள் கூறப் பட்டு வந்தன.

இந்த வெடிகுண்டுத் தாக்குதலில், இந்தியா, போர்ச்சுக்கல், துருக்கி, ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பயணிகளும் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் கிறிஸ்துவர்கள், வெளிநாட்டவரைக் குறிவைத்து நடத்தப் பட்ட இந்தத் தாக்குதலுக்கு, பல்வேறு நாடுகளும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.

இந்தத் தாக்குதல் குறித்து தகவல் அளித்த இலங்கை அரசு, தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்திய அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு, உள்ளூர் இஸ்லாமிய அமைப்பான நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் காரணம் என்றும் கூறியது. அதன் அடிப்படையில் இலங்கை அரசு விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மிகக் கொடூரமான, திட்டமிட்ட, பெருமளவில் உயிர் குடிக்கும் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்தச் சதிச் செயலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அமேக் நிறுவனத்தை மேற்கோள்காட்டி இந்தத் தகவலை ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இலங்கை தொடர் குண்டுவெடிப்பு, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் தொடர்பு இல்லாமல் சாத்தியமில்லை என்று இலங்கை உளவு அமைப்புகள் கூறி வரும் நிலையில், சர்வதேச ஊடக நிறுவனமான அமேக், இதற்கு ஐஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகக் கூறியுள்ளது.

அமேக் நிறுவனத்தின் தகவலை மேற்கோள் காட்டி ராயட்டர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ளது. அமேக் நிறுவனம் தனது செய்தியில், இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் 42 பேர் கடந்த 2016ம் ஆண்டு, ஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்துள்ளதாக இலங்கை அரசு தகவல் வெளியிட்டது. இப்போது அதனைச் சரிபார்க்க வேண்டும் என்று அமேக் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories