இஸ்லாமிய மத பயங்கரவாதிகளின் கொடூரத்தால்… பாதிக்கப்படும் வெகுஜன முஸ்லிம்கள்!

muslims srilanka conference - 2026

சிரியாவை மையமாகக் கொண்டு சில காலம் உலகையே அச்சுறுத்தி வந்த இஸ்லாமிக் ஸ்டேட் – ஐஎஸ் அமைப்பின் கொடூரமான செயல்களால், மற்ற நாடுகளில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப் பட்டு வருகின்றனர். இது, இலங்கை விவகாரத்திலும் வெளிப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் வெகுஜன முஸ்லிம்கள், தங்களுக்கும் பயங்கரவாத கருத்து கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.

கடந்த ஞாயிறு அன்று, இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி 300க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றொழித்த தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் உடல்களை தாங்கள் பெறப் போவதில்லை என்றும், அதற்கு இலங்கை முஸ்லிம்கள் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இன்று அந்த அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்த பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட குறிப்பிட்ட (என்டிஜே) பயங்கரவாத குழுவின் தலைவர் குறித்து, 2017ஆம் ஆண்டே இலங்கை முஸ்லிம்கள் தகவல் வழங்கியிருக்கிறோம். இந்நிலையில் அந்த அமைப்பின் மீது எங்கள் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் விட்டவர்களே, இந்தச் சம்பவங்கள் குறித்து பதிலளிக்க வேண்டும்! இப்போது, நாட்டின் பல இடங்களிலும் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன! இந்த நிலையில் முகத்தை மூடிக் கொண்டு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்குகிறோம் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

இதனிடையே, வரகாபொலயில் மீட்கப்பட்ட சந்தேகத்துக்குரிய வேன் ஒன்று தொடர்பாக, ஹெம்மாதகமயில் கைது செய்யப்பட்ட மௌல்வியை மேலும் இரு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கவுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். அந்த வேன் இரு வாரங்களுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது என்றும், துபையில் இருந்து வந்த குழு ஒன்று, காத்தான்குடி, நீர்கொழும்பு, சிலாபம், கண்டி ஆகிய பகுதிகளுக்கு அந்த வேனில் சென்று வந்துள்ளதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ALSO READ:  மெட்ரோ அரசியல்!

இந்தக் குழுவினர் 20, 21ஆம் தேதிகளில் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர். எனவே, இந்த ஏற்பாட்டின் பின்னணி குறித்து அந்த மௌல்வியிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

pakistan muslims srilanka - 2026

இதனிடையே, இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களின் உதவி இருந்தது என்றும், ஒரு தாமிர தொழிற்சாலையில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பட்டு குறித்த அமைப்பிடம் வழங்கப் பட்டதாகவும் செய்திகள் வெளியானதால், பாகிஸ்தானில் இருந்து இலங்கை வந்து புகலிடம் பெற்றிருக்கும் சமூகத்தினர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து இலங்கை வந்து புகலிடம் கோரியிருக்கும் மக்கள் சுமார் 600 பேர், திருப்பி அனுப்பப்படுவதற்காக காத்திருக்கும் நிலையில் அவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளனர். இதற்குக் காரணம், வெளி நாட்டு ஊடகங்களில், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப் படுகிறது என்று உண்மைக்கு மாறான தகவல்கள் பரவி வருவதால், அவர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் புகலிடம் மறுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இன்று நீர்கொழும்பு அருகிலுள்ள அஹமதியா மையம் ஒன்றுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories