இலங்கையில் இஸ்லாமியர்கள் புர்கா அணிந்து முகத்தை மறைக்க தடை!

burka - 2026

இலங்கையில் முகத்தை மறைப்பதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இசுலாமியர்களின் ஆடைக் குறியீடாக தற்போதைய அடிப்படைவாத இயக்கங்களால் அறிவுறுத்தப் படும் புர்கா அணிந்து செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.

இலங்கையில், அண்மைக் காலமாக இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள், இலங்கை நாட்டு கலாசாரத்தை நீக்கி விட்டு, அரபு நாட்டுக் கலாசாரத்தை இஸ்லாமியர்களிடம் வலுக்கட்டாயமாக திணித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இஸ்லாமியராக மத மாற்றம் செய்யப்பட்ட பின்னர் பெண்களுக்கு முகத்தை மறைக்கும் வகையில் கறுப்பு அங்கியான புர்கா அணிந்து வெளியில் செல்வது கட்டாயம் ஆக்கப் பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஏப்.21ஆம் தேதி இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளால் நிகழ்த்தப் பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களை அடுத்து, இலங்கை அரசு இது போன்ற மத பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இஸ்லாமியர்களிடம் இருந்து பயங்கரவாதிகளை இனம் கண்டு அவர்களை அப்புறப் படுத்துவதற்கான பணிகளை இலங்கை அரசு தொடங்கியுள்ளது.

மேலும், இஸ்லாமிய பெண்களும் பயங்கரவாத இயக்கங்களில் இணைந்து மனித வெடிகுண்டாக செயல்பட்டு உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருப்பதால், இனி இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைத்துக் கொண்டு புர்கா அணிந்து வெளியிடங்களில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்நிலையில், இதை அரசு அறிவிப்பாக நேற்று வெளியிட்டது. அதன்படி, இன்று முதல் புர்கா அணிந்து முகத்தை மூடுவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

இது குறித்த இலங்கை ஜனாதிபதி மைத்ரீபால சிறீசேன வெளியிட்டுள்ள அறிவிப்பில்…

நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாக அமையும் வகையில் முகத்தை மறைப்பது நாளை முதல் தடை செய்ய நடவடிக்கை

தேசிய மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாகவும் அமையக்கூடிய அனைத்து வகையான முகத்திரைகளை பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாளை முதல் அவசரகால கட்டளையின் கீழ் தடை செய்வதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்

அடையாளத்தை உறுதிப் படுத்துவதில் அடிப்படை அளவீடாக உள்ள நபர் ஒருவரின் முகத்தை தெளிவாக காணக்கூடியதாக இருப்பது அவசியமாகும் என்பது இந்த உத்தரவின் மூலம் மேலும்  தெளிவுபடுத்தப்பட்டுள்ளது

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்த ஒரு சமூக பிரிவையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்காத வகையில் அமைதியும் நல்லிணக்கமும் மிக்க சமூகம் ஒன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதி அவர்களால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

  • என்று இலங்கை ஜனாதிபதி சிறீசேன பெயரில் ஊடகப் பிரிவு வெளியீடாக 28ஆம் தேதியிட்டு வெளியான ஊடக வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

srilanka order - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories