December 6, 2025, 4:08 PM
29.4 C
Chennai

இலங்கையில் இஸ்லாமியர்கள் புர்கா அணிந்து முகத்தை மறைக்க தடை!

burka - 2025

இலங்கையில் முகத்தை மறைப்பதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இசுலாமியர்களின் ஆடைக் குறியீடாக தற்போதைய அடிப்படைவாத இயக்கங்களால் அறிவுறுத்தப் படும் புர்கா அணிந்து செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.

இலங்கையில், அண்மைக் காலமாக இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள், இலங்கை நாட்டு கலாசாரத்தை நீக்கி விட்டு, அரபு நாட்டுக் கலாசாரத்தை இஸ்லாமியர்களிடம் வலுக்கட்டாயமாக திணித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இஸ்லாமியராக மத மாற்றம் செய்யப்பட்ட பின்னர் பெண்களுக்கு முகத்தை மறைக்கும் வகையில் கறுப்பு அங்கியான புர்கா அணிந்து வெளியில் செல்வது கட்டாயம் ஆக்கப் பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஏப்.21ஆம் தேதி இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளால் நிகழ்த்தப் பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களை அடுத்து, இலங்கை அரசு இது போன்ற மத பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இஸ்லாமியர்களிடம் இருந்து பயங்கரவாதிகளை இனம் கண்டு அவர்களை அப்புறப் படுத்துவதற்கான பணிகளை இலங்கை அரசு தொடங்கியுள்ளது.

மேலும், இஸ்லாமிய பெண்களும் பயங்கரவாத இயக்கங்களில் இணைந்து மனித வெடிகுண்டாக செயல்பட்டு உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருப்பதால், இனி இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைத்துக் கொண்டு புர்கா அணிந்து வெளியிடங்களில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்நிலையில், இதை அரசு அறிவிப்பாக நேற்று வெளியிட்டது. அதன்படி, இன்று முதல் புர்கா அணிந்து முகத்தை மூடுவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

இது குறித்த இலங்கை ஜனாதிபதி மைத்ரீபால சிறீசேன வெளியிட்டுள்ள அறிவிப்பில்…

நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாக அமையும் வகையில் முகத்தை மறைப்பது நாளை முதல் தடை செய்ய நடவடிக்கை

தேசிய மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாகவும் அமையக்கூடிய அனைத்து வகையான முகத்திரைகளை பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாளை முதல் அவசரகால கட்டளையின் கீழ் தடை செய்வதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்

அடையாளத்தை உறுதிப் படுத்துவதில் அடிப்படை அளவீடாக உள்ள நபர் ஒருவரின் முகத்தை தெளிவாக காணக்கூடியதாக இருப்பது அவசியமாகும் என்பது இந்த உத்தரவின் மூலம் மேலும்  தெளிவுபடுத்தப்பட்டுள்ளது

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்த ஒரு சமூக பிரிவையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்காத வகையில் அமைதியும் நல்லிணக்கமும் மிக்க சமூகம் ஒன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதி அவர்களால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

  • என்று இலங்கை ஜனாதிபதி சிறீசேன பெயரில் ஊடகப் பிரிவு வெளியீடாக 28ஆம் தேதியிட்டு வெளியான ஊடக வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

srilanka order - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories