கார்சியாவுக்கு ஒரு கடிதம்

thought provoking - 2026

அண்மையில் வேதாந்த கேசரி ஆங்கில இதழில் படித்த கட்டுரையின் தலைப்பு இது.

கார்சியாவுக்கு ஒரு கடிதம் என்பது ஒரு குறியீடு. “வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருவான்” என்பார்களே, அதைவிடப் பன்மடங்கு சிறப்பான பணித் திறன்.

அமெரிக்காவுக்கும் ஸ்பெய்ன் தேசத்துக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்தது. அமெரிக்க அதிபருக்கு க்யூபா நாட்டில் உள்ள ஓர் ஊடுருவல்காரனுடன் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. அவசியம். அவசரம். ஆனால் அந்த கார்சியா க்யூபாவில் எங்கு இருக்கிறான் போன்ற எந்த விவரமும் தெரியாது. என்ன செய்வது?

அதிபரின் காதில் ஒருவர் கிசுகிசுத்தார். அமெரிக்க ராணுவத்தில் உள்ள ரோவான் என்பவர் மட்டுமே இதைச் சாதிக்க வல்லவர்.

ரோவானைத் தருவித்து அதிபர் தேவையைச் சொன்னார்.

மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான் என்று இப்படிச் சொன்ணால் என்ன செய்வது?
க்யூபாவில் அவருக்கு நெருக்கமானவர் யார் என்று ஒரு பெயராவது தெரியுமா?
அவர் சார்ந்த உளவு நிறுவனத்தின் பெயர் என்ன?
உத்தேசமாக எந்தப் பகுதியில் இருப்பார் என்றாவது சொல்ல முடியுமா?
என்றெல்லாம் அவர் கேள்வி எழுப்பவில்லை.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

கடிதத்தை வாங்கி, தண்ணீர் படியாத ஒரு உறையில் இட்டு சீல் வைத்துக்கொண்டு, மார்பில் இறுக்கிக் கட்டிக்கொண்டு புறப்பட்டார். திறந்த தோணியில் பயணித்து, யாருக்கும் தெரியாமல் க்யூபாவின் காட்டுப்பகுதிக்குள் தேடி அலைந்து கார்சியாவைச் சந்தித்துக் கடிதத்தைக் கொடுத்து விட்டு, மூன்று வாரங்கள் அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டுச் சுற்றி வேறு வழியாக க்யூபாவை விட்டு விலகி வெளியே வந்தார். பசியா? தாகமா? தூக்கமா? யாருக்குத் தெரியும்?

இத்தகைய செயல்பாட்டின் குறியீடுதான் கார்சியாவுக்கு ஒரு கடிதம்.

இதற்கு நேர்மாறான ஒரு செயல்பாட்டையும் கட்டுரை குறிப்பிடுகிறது.

தலைவர் ஒரு “எக்ஸ்” என்கிற பணியாளரைக் கூப்பிட்டு, “என்சைக்ளோபீடியாவிலிருந்து, கரஸ்கோவ் என்பவரைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதிக்கொண்டு உடனே வா” என்கிறார்.
எக்ஸ் கேட்பது:
எந்த என்சைக்ளோபீடியா?
எங்கிருக்கும்.?
நூலகர் விடுப்பில் இருக்கிறாரே?
அவர் இல்லாதபோது புத்தகத்தை எடுத்தால் பிரச்சினை ஆகி விடுமே?
ஏற்கனவே எங்கள் துறைக்கும் அவரது துறைக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கிறது..
அது சரி,இந்த கரஸ்கோவ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? எந்த்த் துறையில் வல்லவர்?
குறிப்பெடுப்பதெல்லாம் சார்லசுடைய வேலையாயிற்றே? என் வேலை இல்லையே?

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

இத்தனைக்கும் தலைவர் பொறுமையாக பதில் சொல்கிறார்.

எக்ஸ் அரைமணி நேரம் யார் யாரையோ உதவிக்கு வைத்துக்கொண்டு தேடி அலைந்து விட்டு வந்து, ”கரஸ்கோவ் என்று யாருமே இல்லை சார்” என்று பதில் சொல்கிறார்.

தலைவர் புன்னகைக்கிறார்.
கரஸ்கோவை சி என்ற முதல் எழுத்தைக்கொண்டு தேட வேண்டும்; கே யில் அல்ல என்று சொல்ல அவர் மெனக்கெடவில்லை.
நாம் தலைவராக இருந்தால் ஒரு பணிக்குத் தேர்ந்தெடுப்பது ரோவான் போன்றவரையா? எக்ஸ் போன்றவரையா?

நாம் பணியாளராக இருந்தால் ரோவான் போல இருப்போமா? எக்ஸ் போல இருப்போமா?

  • வேங்கட ரமணி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories