கார்சியாவுக்கு ஒரு கடிதம்

thought provoking - 2026

அண்மையில் வேதாந்த கேசரி ஆங்கில இதழில் படித்த கட்டுரையின் தலைப்பு இது.

கார்சியாவுக்கு ஒரு கடிதம் என்பது ஒரு குறியீடு. “வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருவான்” என்பார்களே, அதைவிடப் பன்மடங்கு சிறப்பான பணித் திறன்.

அமெரிக்காவுக்கும் ஸ்பெய்ன் தேசத்துக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்தது. அமெரிக்க அதிபருக்கு க்யூபா நாட்டில் உள்ள ஓர் ஊடுருவல்காரனுடன் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. அவசியம். அவசரம். ஆனால் அந்த கார்சியா க்யூபாவில் எங்கு இருக்கிறான் போன்ற எந்த விவரமும் தெரியாது. என்ன செய்வது?

அதிபரின் காதில் ஒருவர் கிசுகிசுத்தார். அமெரிக்க ராணுவத்தில் உள்ள ரோவான் என்பவர் மட்டுமே இதைச் சாதிக்க வல்லவர்.

ரோவானைத் தருவித்து அதிபர் தேவையைச் சொன்னார்.

மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான் என்று இப்படிச் சொன்ணால் என்ன செய்வது?
க்யூபாவில் அவருக்கு நெருக்கமானவர் யார் என்று ஒரு பெயராவது தெரியுமா?
அவர் சார்ந்த உளவு நிறுவனத்தின் பெயர் என்ன?
உத்தேசமாக எந்தப் பகுதியில் இருப்பார் என்றாவது சொல்ல முடியுமா?
என்றெல்லாம் அவர் கேள்வி எழுப்பவில்லை.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

கடிதத்தை வாங்கி, தண்ணீர் படியாத ஒரு உறையில் இட்டு சீல் வைத்துக்கொண்டு, மார்பில் இறுக்கிக் கட்டிக்கொண்டு புறப்பட்டார். திறந்த தோணியில் பயணித்து, யாருக்கும் தெரியாமல் க்யூபாவின் காட்டுப்பகுதிக்குள் தேடி அலைந்து கார்சியாவைச் சந்தித்துக் கடிதத்தைக் கொடுத்து விட்டு, மூன்று வாரங்கள் அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டுச் சுற்றி வேறு வழியாக க்யூபாவை விட்டு விலகி வெளியே வந்தார். பசியா? தாகமா? தூக்கமா? யாருக்குத் தெரியும்?

இத்தகைய செயல்பாட்டின் குறியீடுதான் கார்சியாவுக்கு ஒரு கடிதம்.

இதற்கு நேர்மாறான ஒரு செயல்பாட்டையும் கட்டுரை குறிப்பிடுகிறது.

தலைவர் ஒரு “எக்ஸ்” என்கிற பணியாளரைக் கூப்பிட்டு, “என்சைக்ளோபீடியாவிலிருந்து, கரஸ்கோவ் என்பவரைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதிக்கொண்டு உடனே வா” என்கிறார்.
எக்ஸ் கேட்பது:
எந்த என்சைக்ளோபீடியா?
எங்கிருக்கும்.?
நூலகர் விடுப்பில் இருக்கிறாரே?
அவர் இல்லாதபோது புத்தகத்தை எடுத்தால் பிரச்சினை ஆகி விடுமே?
ஏற்கனவே எங்கள் துறைக்கும் அவரது துறைக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கிறது..
அது சரி,இந்த கரஸ்கோவ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? எந்த்த் துறையில் வல்லவர்?
குறிப்பெடுப்பதெல்லாம் சார்லசுடைய வேலையாயிற்றே? என் வேலை இல்லையே?

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

இத்தனைக்கும் தலைவர் பொறுமையாக பதில் சொல்கிறார்.

எக்ஸ் அரைமணி நேரம் யார் யாரையோ உதவிக்கு வைத்துக்கொண்டு தேடி அலைந்து விட்டு வந்து, ”கரஸ்கோவ் என்று யாருமே இல்லை சார்” என்று பதில் சொல்கிறார்.

தலைவர் புன்னகைக்கிறார்.
கரஸ்கோவை சி என்ற முதல் எழுத்தைக்கொண்டு தேட வேண்டும்; கே யில் அல்ல என்று சொல்ல அவர் மெனக்கெடவில்லை.
நாம் தலைவராக இருந்தால் ஒரு பணிக்குத் தேர்ந்தெடுப்பது ரோவான் போன்றவரையா? எக்ஸ் போன்றவரையா?

நாம் பணியாளராக இருந்தால் ரோவான் போல இருப்போமா? எக்ஸ் போல இருப்போமா?

  • வேங்கட ரமணி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories