கண்ணன் திரௌபதிக்கு கருணை காட்டிய காரணம்..?

draupadi - 2026

பல சந்தர்ப்பங்களில் ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களின் துணைவியான திரௌபதியை இழிவுகளிலிருந்து பழி ஏற்படாமல் காப்பாற்றி வந்தார். கிருஷ்ணர் திரௌபதிக்கு காண்பித்த கருணையின் காரணத்தை சத்யபாமாவும் ருக்மணியும் அறிய ஆர்வம் கொண்டனர்.

கிருஷ்ணர், அவர்களது சந்தேகங்களைத் தீர்த்து வைக்க, ஒரு நாள் இருவரையும் தன்னுடன் திரௌபதியின் அரண்மனைக்கு அழைத்து சென்றார். அவர்கள் அங்கு சென்ற போது,  திரௌபதி தனது குளியலை முடித்து விட்டு கூந்தலை சீவிக் கொண்டிருந்தாள்.

கிருஷ்ணர், ருக்மிணியையும் சத்யாபாமாவையும் திரௌபதியின் கூந்தலை சீவிவிடுமாறு கூறினார். சற்று கோபமாக இருந்தாலும், இருவரும் கிருஷ்ணரின் ஆணைக்கு இணங்கினர்.

திரௌபதியின் கூந்தலை அவர்கள் சீவும் பொழுது, ஒவ்வொரு உரோமத்திலிருந்தும் “கிருஷ்ணா” என்ற ஒலி வருவதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். கிருஷ்ணரின் மீது திரௌபதி கொண்ட பக்தியை புரிந்து கொண்டனர்; அவள் மீது  கிருஷ்ணர் பொழியும் அருளுக்கு திரௌபதி முற்றிலும் தகுதியனவள் என்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள்.

கிருஷ்ணர் மீது இருந்த அன்பு, ஈடுபாடு மற்றும் பக்தி, திரௌபதியின் உடலின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்திருந்தது; கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்த திரௌபதி, பக்தியின் உச்சத்தில் இருந்தாள்.

முழு மனதோடு வணங்கும் பக்தையின் வேண்டுதல்களை கிருஷ்ணர் அங்கீகரிக் காமல் இருப்பாரா? “நாம ஜபம்” என்ற எளிய சாதனை மூலம் இறைவனின் பரிபூரண அனுக்ரஹத்தை திரௌபதி பெற்றாள்.

நீதி:

கலியுகத்தில், கடவுளின் நாமத்தை தொடர்ந்து உச்சரிப்பதே சிறந்த ஆன்மீக வழிமுறையாகும். இடையீடற்ற நாம ஜபம் செய்து வந்தால், கடவுளின் பரிபூரண கருணை மற்றும் அன்பை உறுதியாக அடையலாம்.

விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே .

பொருள் : கர்ம வினையின் அடிப்படையில் இயங்குகிறது இந்த உலகம். விதியின் வழியில் வாழ்ந்தால் முழுமையான இன்பம் இல்லாத வாழ்க்கையே கிடைக்கும். ஜோதி வடிவான இறைவனை நித்தமும் துதிப்பவர்க்கு சூரியனாக இருந்து கர்ம வினையைக் கடக்க புத்தம் புதுவழியை காட்டுவான்…

  • குட்டி வேணுகோபால்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories