December 6, 2025, 8:27 AM
23.8 C
Chennai

எங்களை கேவலமாக திட்டாதீர்கள் ப்ளீஸ்: பொதுமக்களிடம் கெஞ்சும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்!

IMG 20190617 WA0004 - 2025

இந்திய அணியுடனான தோல்விக்குப் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அந்த நாட்டு மக்களைப் பார்த்து, எங்களை கேவலமாக திட்டாதீர்கள் ப்ளீஸ் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் மொஹம்மத் ஆமீர் ரசிகர்களிடம் விடுத்த வேண்டுகோளில், வீரர்களைக் கேவலமாகத் திட்டாதீர்கள் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையில் மிக மோசமாக விளையாடியது. இதை அடுத்து அந்த அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது சக வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

உலகக் கோப்பைத் தொடரில் மிகவும் எதிர் பார்க்கப்பட்ட போட்டியான இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றி கொண்டது. இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை ஆட்டங்களில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையை இந்தியா தக்க வைத்துள்ளது.

இதன் மூலம் தொடர்ந்து 7 முறையாக உலகக் கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானை வென்றுள்ளது இந்திய அணி. இந்த வெற்றியால் பாகிஸ்தான் அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

IMG 20190617 WA0001 - 2025இந்திய அணியுடனான தோல்வி மட்டுமல்லாமல் இந்த தொடர் முழுவதுமே மோசமாக விளையாடிய பாகிஸ்தான் 9 ஆவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளில் வென்றாலும் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவது கடினம்தான் என்று கூறப் படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பாகிஸ்தான் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ‘இது போல மோசமாக விளையாடினால் மக்கள் நம்மை நாட்டுக்குள் விடமாட்டார்கள். மோசமான விளையாட்டைக் கைவிட்டு நாம் சிறப்பான ஆட்டத்தை விளையாட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பாகிஸ்தான் அணி மோசமாக தோல்வி அடைந்த போது நேரடியாக பாகிஸ்தானுக்கு செல்லாமல் வெளிநாடுகளில் தங்கி பின்னர் தாமதமாக ஒவ்வொருவராகத்தான் பாகிஸ்தான் திரும்பினர்.

இந்நிலையில் தற்போதும் அதே சூழல் எழுந்தால் பிரச்னை என்று குறிப்பிட்டுள்ளார் சர்ப்ராஸ். அதே நேரம் ஆல் ரவுண்டரான ஷோயப் மாலிக் குறிப்பிடுகையில், வீரர்களின் குடும்பங்களை தொடர் விமர்சனங்களில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளனர் பாகிஸ்தான் அணி வீரர்கள். முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கூறுகையில், பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமத் கேப்டன்ஸி ஒரு மூளைகெட்ட தனமாக உள்ளது என்று சாடியுள்ளார்.

ஷோயப் மாலிக் டக் அவுட் ஆன போது, இந்திய டென்னிஸ் வீராங்கனையும் ஷோயப்பின் மனைவியுமான சானியா மிர்ஸாவுடன் இரவில் வலம் வந்த வீடியோ புயல் போன்று சுழன்றடித்து வைரலானது. தொடர்ந்து மாலிக் ஒரு டிவீட் செய்தார். முன்னாள் வீரர்களான மொஹம்மத் யுசுப் உள்ளிட்டோர், ஷோயப் மாலிக் இந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவது நல்லது என்று காட்டமுடன் விமர்சித்துள்ளனர்.

பாகிஸ்தான் தனது அடுத்த போட்டியில் ஜூன் 23 அன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories