January 23, 2025, 5:52 AM
23.8 C
Chennai

தில்லியில் காலமான நேபாள முன்னாள் பிரதமரின் உடல் தகனம்

bahadur-thapa-nepal-former-pmபுது தில்லி நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சூர்ய பஹதூர் தாபா காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. நேபாளத்தில் 5 முறை பிரதமராகப் பதவி வகித்தவர் சூர்ய பகதூர் தாபா. புற்றுநோய் காரணமாககடந்த மார்ச் 29 இல் புது தில்லி அருகே குர்காவ்னில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 1990க்கு முன்னர் நேபாளத்தில் மன்னர் ஆட்சி முறை இருந்த போது, இவர் மூன்று முறை ரப்பர் ஸ்டாம்ப் பிரைம் மினிஸ்டர் என்ற அளவில் பதவி வகித்தார். 1990ல் பல கட்சி ஆட்சி கொண்டுவரப்பட்ட பிறகு, இவர் ராஷ்டிரீய பிரஜாதந்த்ரா கட்சியை உருவாக்கி, அதன் மூலம் இரு முறை பிரதமராகப் பதவி வகித்தார். இவருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள். இவரது மகன் சுனில் பஹதூர் தாபா, நேபாள வர்த்தக அமைச்சராக உள்ளார். தாபாவின் மனைவி சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் தில்லி மெடேந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி அவர் வியாழக்கிழமை நேற்று காலமானார். அவருக்கு வயது 87. இதையடுத்து அவரி்ன் உடல் விமானம் மூலம் நேபாளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. முன்னதாக, ஐந்து முறை பிரதமராக இருந்த சூர்ய பகதூர் தாபா மறைவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்திருந்தார். நேபாள அரசு இன்று இவரின் இறுதிச் சடங்கு நடைபெறுவதை ஒட்டி, அரசு முறை துக்கம் கடைப்பிடிப்பதாக அறிவித்திருந்தது.

ALSO READ:  வங்கதேசத்தில் இஸ்கான் செயலர் கிருஷ்ணதாஸ் கைது; இந்தியாவில் வலுக்கும் கண்டனங்கள்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.