வெள்ளை அறிக்கை எனும் கோமாளித்தனம்!

white report
white report

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2 லட்சத்தி 63 ஆயிரம் கடன் உள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட்டு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்துள்ளார்.

“தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்கள் 1,743 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஒரு நாள் வட்டியாக 87.31 கோடி ரூபாயை செலுத்துகிறது.

1200 கோடி ரூபாய் மின்வாரியம் மாநகராட்சிகளுக்கு செலுத்தாமல் உள்ளது.

போக்குவரத்துத் துறையில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 59 ரூபாய் இயக்குவதற்கான செலவில் நஷ்டம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

போக்குவரத்துத்துறை மின்சாரத்துறை, மின்சார பகிர்மான கழகத்தால் மட்டும் அரசாங்கத்தில் 2 லட்சம் கோடி கடன்” என்றார்.

குறிப்பு;2011ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் திமுக விட்டுச் சென்றிருக்கிறது என்று கூறினார். ஆனால் 2021 இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பன்னீர்செல்வம் கடன் தொகை ரூ. 5 லட்சம் கோடி என்று அறிவித்தார்.

ALSO READ:  விஜயின் வெற்றி - அதிர்ஷ்டமா? ஆளுமையா?

எனவே கடந்தகால அறிக்கைகளை தேடி எடுத்து ஆய்வு செய்து பார்த்தால் திமுக – அதிமுக இடையில் தமிழ்நாட்டின் கடனை அதிகரிப்பதில் ஒரு போட்டி இருந்தது தெளிவாகிறது.. தமிழ்நாட்டின் கடன் சுமையை பெருக்குவதில் திமுக -அதிமுக ஆகிய 2 கட்சிகளின் இலவசத் திட்டங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இதை மறுக்கவும் முடியாது.. மறைக்கவும் முடியாது..

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை கொடுத்து கருணாநிதி இலவசத் திட்டங்களுக்கு வழிகாட்டினார் என்றால் அதில் ஜெயலலிதா புதிய வரலாறு படைத்துவிட்டார்.. இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி என்று ஒவ்வொரு தேர்தலிலும் இலவசங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

இலவசமாக இருசக்கர தானியங்கி வாகனமும் கொடுத்தாகி விட்டது . இனி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆல்டோ கார் தான் இலவசமாக தர வேண்டும்.

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் அவர்களே, தேவையானவர்களுக்கு, தகுதியானவர்களுக்கு, மட்டுமே இலவசங்களை கொடுங்கள். உதவி செய்தால் போதும். இலவசங்கள் வேண்டாம். வேலைவாய்ப்பை ஏற்படுத்துங்கள்..

ஒவ்வொரு இலவச திட்டத்தையும் மறு ஆய்வு செய்யுங்கள். இனியும் இலவசம், இலவசம் என்று சகட்டுமேனிக்கு அறிவிப்புகளை வெளியிட்டால் இனியும் பொருளாதாரம் அதல பாதாளத்திற்குதான் செல்லும்.

ALSO READ:  திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

வாய்க்கு வந்த படி தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, அதை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கும் இந்த சூழலில், வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக கூறிமக்களை ஏமாற்றாதீர்கள்.

ஒட்டுக்காக இலவசங்களை அறிவித்து அப்பாவி மக்களின் ஒட்டுக்களை பெற்று ஆட்சியை பிடித்தப்பின் வெள்ளை அறிக்கை என்ற பெயரில் மக்களை முட்டாளாக்கி,அதிமுக ஆட்சியை குற்றம் சொல்லி தப்பிக்க நினைக்கும் நீங்கள்;போக்குவரத்துத் துறையில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 59 ரூபாய் இயக்குவதற்கான செலவில் நஷ்டம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

போக்குவரத்துத்துறை மின்சாரத்துறை, மின்சார பகிர்மான கழகத்தால் மட்டும் அரசாங்கத்தில் 2 லட்சம் கோடி கடன் என கூறும் உங்களுக்கு அறிவு இருந்தால் பெண்கள் அனைவருக்கும் இலவச பயணம் என அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன..?புத்தியுள்ள முதல்வரோ,நிதி மந்திரியோ செய்யும் வேலையா இது..?

உங்கள் கோமாளிதனத்தால் தமிழகமக்கள் தலையில் கடனை சுமத்திவிட்டு இதில் வெள்ளை அறிக்கை ஒரு கேடு..

  • ராஜப்பா தஞ்சை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories