கொலீஜியம் அனுப்பிய 20 கோப்புகளை திருப்பி அனுப்பிய மத்திய அரசு!

supreme court of india - 2026

கொலீஜியம் அனுப்பிய 20 கோப்புகளை ஏற்காமல் கொலீஜியத்துக்கு திருப்பி அனுப்பியிருக்கிறது மத்திய அரசு!

இதில் 9 பெயர்கள் ஏற்கனவே மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டவை. இருந்தாலும் மீண்டும் அனுப்பியிருக்கிறது கொலீஜியம். மீண்டும் நிராகரிப்பு.

நீதிபதிகள், “நானே ராஜா நானே மந்திரி” என்ற முறையில் நீதிபதிகளை நியமிப்பது உலகத்தில் இந்தியாவில் மட்டும் தான். “அரசாங்கத்தை நீதிபதிகள் நியமனத்தில் தலையிட விட மாட்டோம்” என்று அடம் பிடிக்கிறார்கள்.

எனவே….. அவர்களாகவே பெயர்களை – “உறவினர், நண்பர்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதில்லை” – என புகார் இருந்தும் தேர்ந்தெடுத்து அரசுக்கு அனுப்புகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பின்புலத்தை இண்டலிஜென்ஸ் ப்யூரோ உள்ளிட்டவற்றைக் கொண்டு அரசு ஆராய்கிறது. ஐ.பி அறிக்கையில் குறைபாடுகள் இருந்தால் நிராகரிக்கிறது அரசு.

ஐ.பி அறிக்கையை கொலீஜியத்திடம் பகிர்வதில்லை அரசு – அவர்களுக்கு அது தேவையில்லை என்பதால்.

கொலீஜியமும் “எப்படி குறிப்பிட்ட நபர்களை தேர்ந்தெடுத்தோம்?” என்ற பிரம்ம சூத்திரத்தை யாருக்கும் பகிர்வதில்லை.

கொலீஜியத்தின் ‘நமக்கு நாமே’ முரண்டால், அரசு – கொலீஜியம் செயல்பாடுகள் இரு தீவுகளாக (island) இருக்கின்றன.

இதில் நம் கேள்வி: ஐ.பி அறிக்கை ஒருவரை ‘சரியில்லை’ என்று குறிப்பிட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா? அவர் மேலும் அதே பஞ்சாயத்து பணியில் தொடர்வது நீதிக்கு இழுக்கில்லையா? குறிப்பிட்ட நபர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் இம்பீச்மெண்ட் / தகுதிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற வேண்டும். அது கடினம். ஆனால், கொலீஜியம் நடவடிக்கை எடுக்கலாம். எடுப்பதில்லை. இந்த ஓட்டைகளால் நமக்கு நீதி கிடைப்பதில் பல இடர்பாடுகள்…!

பூனைக்கு மணியை கட்டுங்க மோடி ஜி. உங்களை விட்டால் எங்களுக்கு கதி இல்லை!

  • மக்கள் வரிப்பணத்திலிருந்து சம்பளம் வர வேண்டும் ‘அவர்களுக்கு’. அவர்கள் மக்களுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ பதில் சொல்ல கடமைப் பட்டவர்களில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories