January 25, 2025, 9:47 PM
25.3 C
Chennai

NCERT பாடத் திருத்தங்களுக்கு நன்றி பிரதமர் மோடி ஐயா!

  • செல்வ நாயகம்

தேர்தல் சமயத்தில் மேலும் ஒரு குண்டு போட்டிருக்கிறது மோடிஅரசு. கதறுவார்களா இந்துக்களின் எதிரிகள்?

11 மற்றும் 12 வகுப்புகளுக்கான (Political Science) புத்தகங்களில் சில மாற்றங்களை அறிவித்திருக்கிறது தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (National Council of Educational Research and Training-NCERT).

இண்டியா டுடே ஊடகம் இது குறித்து கதறியபடி, “பாபர் கட்டிட இடிப்பு, குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் கொலை உள்ளிட்ட பல விவகாரங்களை மாற்றியிருக்கிறது NCERT” என்கிறது.

அதே இண்டியா டுடே ஊடகம், என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டுள்ளது இந்தக் கட்டுரையில். இதில் மோடி அரசு செய்தது சரியா அல்லது முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்தது சரியா என்பதை கவனிக்கவும்.

1. யுபிஏ புத்தகத்தில், ‘2002 குஜராத் கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பெரும்பாலோர் முஸ்லிம்கள், கொல்லப்பட்டனர்’ என்று இருந்திருக்கிறது. அதை இப்போது, ‘2002 குஜராத் கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்’ என்று மாற்றியிருக்கிறது . (அனைத்து மதத்தவரும் பாதிப்படைந்தனர். குறிப்பிட்ட மதத்தவர் மட்டுமல்ல).

ALSO READ:  மக்களுக்கான டிஜிட்டல் பயன்பாட்டை முழுமை பெறச் செய்வோம்: மனதின் குரலில் மோடி!

2. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி யுபிஏ காலத்தில், “அந்தப் பகுதியை இந்தியா தன்னுடையது ‘என்கிறது’. பாகிஸ்தான் தன்னுடையது என்கிறது” என்றிருந்திருக்கிறது புத்தகத்தில். அதை இப்போது, “பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது. அதை சட்டவிரோதமாக பாக். ஆக்கிரமித்துள்ளது” என்று மாற்றியிருக்கிறார்கள். (யுபிஏ படி, ‘அந்தப் பகுதி இருவருக்கும் சொந்தமாக இருக்கலாம்’).

3. மணிப்பூர் பற்றி யுபிஏ காலத்தில், “மணிப்பூர் மஹாராஜாவை மணிப்பூரின் சட்டமன்றத்தை கேட்காமல் இந்தியாவுடன் வெற்றிகரமாக 1949இல் இணைய வைத்தது இந்திய அரசு” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதை இப்போது, “”மணிப்பூர் மஹாராஜாவை இந்தியாவுடன் வெற்றிகரமாக 1949இல் இணைய வைத்தது இந்திய அரசு” என்று மாற்றியிருக்கிறார்கள். யுபிஏ புத்தகம் சிண்டு முடித்து விடுகிறது, ‘சட்டமன்றத்தை கேட்காமல் மஹாராஜா தன்னிச்சையாக முடிவெடுத்தார். எனவே, அது மக்களின் முடிவல்ல’ என்று. அதை சரி செய்திருக்கிறது மோடி அரசு.

4, ராம் மந்திரை இடித்து பாபர் கட்டிய கட்டிடம் பற்றி யுபிஏ காலத்தில், “ராம் ஜன்மபூமி இயக்கமும், பாபர் கட்டிட இடிப்பும், அதன் அரசியல் விளைவுகளும்” என்றிருந்த அத்தியாத்தை, “ராம் ஜன்ம பூமி இயக்கம் எதைப் பற்றியது?” என்று மாற்றியிருக்கிறார்கள் இப்போது.

ALSO READ:  தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

5, மேற்சொன்ன அத்தியாத்தில் யுபிஏ, “பாபர் கட்டிட இடிப்பால் பாஜகவும் இந்துத்துவமும் வளர்ந்தது” என்று அரசியல் பேசியிருந்ததை, “ராம ஜன்ம பூமி இயக்கம் பாரதத்தில் பல அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக அமைந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, அயோத்தியில் ராம் மந்திர் கட்டப்பட்டது” என்று மாற்றியிருக்கிறார்கள்.

தேசத்தின் எதிரி காங்கிரஸ் என்பதை, அவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகங்களிலிருந்தே தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது!

தேர்தல் சமயத்தில் இந்த மாற்றங்கள் வெளிவந்திருப்பதால், இதையும் அரசியல் செய்து கதறுவார்கள் இந்து விரோதிகள். இந்து விரோதிகள் இந்துக்களுக்கு செய்த துரோகத்தை அவர்களே பிரசாரம் செய்வார்கள். உறங்கிக் கொண்டிருக்கும் நடுநிலை இந்துக்கள் சிலர் விழித்துக் கொள்வார்கள்.!

NCERT திருத்தங்களுக்கு நன்றி மோதி ஜி!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

தமிழகத்தைப் பற்றிய பல்வேறு கவலைகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்து அவர் வெளியிட்ட கவலைகள் பெரும் கவனத்துக்கு உரியவை.

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்