February 22, 2026, 5:59 AM
25.4 C
Chennai

ஜனநாயகத்தை சீர்குலைக்கும் திமுக., விசிக.,; துணை போகும் போலீஸார் மீது நடவடிக்கை தேவை!

kadeswara subramaniam hindu munnani - 2026

ஜனநாயகத்தை சீர்குலைக்கும் திமுக., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் அராஜகத்துக்கு, துணைபோகும் காவல்துறை மீது தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கை:

தேசிய வாக்காளர் பேரவை சார்பில் தேர்தலில் 100% வாக்குகளை செலுத்தவும், நல்லவர்களை தேர்ந்தெடுக்கவும் வலியுறுத்தி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிதம்பரம் நகரம் விளங்கி அம்மன் கோவில் தெருவில், நேற்று 05/04/24 காலை 11:30 மணியளவில் திண்ணை கூட்டம் நடத்துவதற்காக ஆர்.எஸ்.எஸ் மாநில பொறுப்பாளர் குரு. சுப்ரமணியம் மற்றும் அவருடன் சென்ற பொறுப்பாளர்களான அன்பரசன். ராகவன், சஞ்சய் ஆகியோர் மீது திமுக கவுன்சிலர்கள் C.K.ராஜன் மற்றும் ஜெய்ஸ் விஜயராகவன், பேட்டை பாலு பாலசுப்ரமணியம், அப்பு சந்திரசேகர் ஆகியோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள் வன்முறை வெறியாட்டம் ஆடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல். அடிப்பட்டவர்களை விசாரணை என்னும் பெயரில் மாலை 06:30 மணி வரை காவல் நிலையத்தில் வைத்து மிரட்டி தகாத வார்த்தைகளை பேசி அச்சுறுத்தியுள்ளனர். திமுக கவுன்சிலர்களுக்கு ஆதரவாக மாவட்ட துணை கண்காணிப்பாளர் ரகுபதி மற்றும் அவர் தலைமையிலான காவல் துறை அதிகாரிகள் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டுள்ளனர்.

ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதால்தான் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கண்ட DSP ரகுபதி தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்களாட்சி நடைமுறையில் வாக்குகளை செலுத்துங்கள், நூறு சதவீத வாக்கு பதிவு ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கும், ஓட்டிற்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என அரசாங்கம் தனது செலவில் பிரச்சாரம் செய்கிறது

இதே கருத்துடன் நல்லாட்சி அமைவதற்கு உங்கள் வாக்குகளை அவசியம் பதிவு செய்யுங்கள் என்று வீடுவீடாக அரசியல் சார்பு இல்லாமல் தேசிய வாக்காளர் பேரவை சார்பாக எடுத்துக்கூறி வருகின்றனர். இந்நிலையில் இத்தகைய பிரச்சாரம் செய்தவரை தாக்குவது சமூக விரோத செயல்.

ஓட்டிற்கு பணம் கொடுத்து ஆசை தூண்டி வாக்குகளை பெற முயற்சி நடப்பதாக பல புகார்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது கூறப்படுகிறது. இத்தகைய நேர்மையான, ஜனநாயக ரீதியிலான கருத்தால் மக்கள் விழிப்படைந்து ஊழல் முறைகேடு சாதிய வன்முறைக்கு எதிராக வாக்களித்து விடுவார்கள் என்ற பயத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

பல இடங்களில் தமிழக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் வாகனங்களை முறையாக சோதனையிடாமல் அனுப்பிய அதிகாரிகள் பற்றி நடுநிலை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதன்பிறகு தமிழக அரசு அதிகாரிகள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதிலிருந்து தமிழக அரசு அதிகாரிகளில் உள்ள கருப்பு ஆடுகள் எப்படி செயல்படுகிறது என்பதை நேர்மையான தேர்தல் அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முறையாக அமைதியாக நடைபெற வேண்டுமானால் ஒருதலைப்பட்சமாக செயல்படும் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

எனவே சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வன்முறையில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிந்து அவர்களின் பதவி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.

மேலும் திமுக கூட்டணி கட்சிகள் வன்முறை வெறியாட்டம் நடக்க சாத்தியம் உள்ள இடங்களில் மத்திய பாதுகாப்பு படையை பாதுகாப்பிற்காக நிறுத்த வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு தேர்தல் அமைதியான முறையில் நடைபெறும் என்று இந்து முன்னனி சார்பில் கேட்டுக்
கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories