அந்த உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது?!

stalin kanimozhi - 2026

தமிழகம் பற்றி பேச உ.பி முதல்வருக்கு எவ்வித உரிமையும் இல்லை – திமுக எம்பி கனிமொழி – செய்தி.

(யக்கோவ் காஷ்மீர்- மணிப்பூர் வரை அமெரிக்கா – இலங்கை வரை நீங்க பேசலாம் ஆனா உபி முதல்வர் தமிழகம் பத்தி பேச உரிமை இல்லையா? என்னதான் உங்களுக்கு பாத சனியானாலும் பேச்சுல ஒரு நாயம் வேணாமாக்கா?)

தமிழகத்தை பற்றி உத்திரபிரதேச முதல்வர் பேசுவதற்கு எந்த வித உரிமையும் இல்லை என்று கனிமொழி பேசுவது நியாயம் எனில் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு எங்கிருந்து உரிமை வந்தது?.

மணிப்பூர் மாநிலம் அதன் அமைதி தேச பாதுகாப்பு பற்றிய விஷயங்களில் திமுக தலையிடவும் நாடாளுமன்றத்தில் தேவையற்ற கூச்சல் குழப்பம் ஏற்படுத்த கனிமொழிக்கு எங்கிருந்து உரிமை வந்தது.?

புது தில்லியில் நடந்த குடியுரிமை திருத்த சட்டம் எதிரான போராட்டம் – விவசாய மசோதா எதிர்ப்பு போராட்டம் பற்றி எல்லாம் ேசவும் அதை ஆதரிக்கவும் திமுகவிற்கு யார் உரிமை கொடுத்தது?

காஷ்மீரின் ஆசிஃபாவிற்கு நீதி வேண்டும் என்று வீதியில் இறங்கி கருப்பு சேலை மெழுகுவர்த்தி சகிதம் போராடுவதற்கு திமுக மகளிர் அணிக்கும் கனிமொழி எம்பிக்கும் யார் உரிமை கொடுத்தது.?

கேரள மாநிலத்தின் சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள், நாடு முழுவதும் இருந்த ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளுக்கு எதிராக எல்லா வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க வேண்டும் என்று பேசவும் போராடவும் திமுகவிற்கு யார் அதிகாரம் கொடுத்தது.?

லடாக் – லே – ஸ்ரீநகர் எங்கிருக்கிறது ? என்றே தெரியாமல் அந்த மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து விலக்கம் பற்றி பேசி லடாக் எம்பியிடம் செருப்படி வாங்கி தமிழகத்தை அவமதிக்கும் உரிமையை திமுக எம்பிக்களுக்கு யார் கொடுத்தது.?

கடந்த பத்து ஆண்டுகளில் அரசியல் ஆதாயம் தேடி காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளோடு கை கோர்த்து தினமும் நாடாளுமன்றத்தில் வீண் கூச்சல் குழப்பம் செய்து நாட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடித்து நாட்டை தலை குனிய செய்ய திமுகவிற்கு எங்கிருந்து உரிமை வந்தது?.

வடகிழக்கு மாநிலங்களின் மக்கள் நாய் கறி சாப்பிடுபவர்கள் என்று ஏளனமாக பேசுவதற்கு திமுகவின் ஆர் எஸ் பாரதிக்கு என்ன உரிமை இருந்தது?

வடமாநிலத்தவர்கள் நான்கு ஐந்து திருமணம் செய்பவர்கள். ஒழுக்கம் இல்லாதவர்கள். குளிக்காமல் நாற்றம் அடிப்பவர்கள் என்று பேசுவதற்கு திமுக அமைச்சருக்கு எங்கிருந்து உரிமை வந்தது.?

உத்திரபிரதேசத்தின் ப்ரயாகையில் பூர்ண கும்பமேளா நடைபெறும் போது அங்கு ஏற்பட்ட ஒரு சிறு விபத்தை காரணம் காட்டி அந்த விழாவையும் உத்தரபிரதேச அரசு நிர்வாகத்தையும் சிறுமைப்படுத்தி பேசுவதற்கு திமுக மற்றும் தமிழக அரசுக்கு எங்கிருந்து உரிமை வந்தது.?

திமுகவின் மும்மொழி கல்வி கொள்கை எதிர்ப்பை பற்றி உத்திரபிரதேச முதல்வர் பேசுவதற்கு உரிமை இல்லை எனில் அயோத்தி ராமஜென்ம பூமி பற்றி பேச திமுகவிற்கு எங்கிருந்து உரிமை வந்தது?

தமிழகம் பற்றி பேச உபி முதல்வர்களுக்கு உரிமை இல்லை எனில் கர்நாடகா தெலுங்கானா மேற்கு வங்கம் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்களை அழைத்து தொகுதி சீரமைப்பு எதிர்ப்பு என்ற பெயரில் இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி குழப்ப அரசியல் செய்வதற்கு திமுக தலைவருக்கு தமிழக முதல்வருக்கு எங்கிருந்து உரிமை வந்தது.?

தேசிய மும்மொழி கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்கு திமுகவிற்கு உரிமை உண்டு எனில் அதை ஆதரித்து பேசுவதற்கும் அந்த நிலைப்பாட்டில் திமுகவின் தவறுகளை துரோகங்களை சுட்டிக்காட்டுவதற்கும் உத்தரபிரதேச முதல்வருக்கு நிச்சயம் உரிமை உண்டு. இந்திய பிரஜையாக அது அவரின் தார்மீக கடமையாகிறது. அதைத்தான் உத்தரபிரதேச முதல்வர் செய்திருக்கிறார்.

உபி முதல்வர் உங்கள் தவறை சுட்டிக் காட்டி பேசுவது உரிமை மீறல் எனில் முன்மொழி கொள்கை பற்றிய தவறான புரிதலை விஷம பிரச்சாரமாக செய்து வரும் திமுகவின் அரசியலை பிரிவினைவாத அரசியல் செய்ய என்று கனிமொழி ஒப்புக் கொள்வதாகவே அர்த்தம்.

அப்படியானால் இந்த பிரிவினை அரசியல் – கல்வி உள்ளிட்ட முக்கியமான விஷயங்களில் விஷம பிரச்சாரம் என்ற காரணங்களை கொண்டு திமுகவின் மீது மத்திய அரசு சட்டபூர்வமான எதிர் நடவடிக்கைகளை நீதிமன்றம் மூலம் எடுக்கலாம் தானே.?

பாரதம் எனும் ஒன்றுபட்ட தேசத்தில் இருக்கும் ஒரு மாநிலம் தமிழகம் அதன் மாநிலஅரசு பொறுப்பில் இருக்கும் திமுகவிற்கு நாடு முழுவதிலும் இருக்கும் எந்த மாநிலத்தையும் பற்றி பேசவும் கேள்வி எழுப்பவும் விமர்சனம் செய்யவும் உரிமை இருக்கும். அதை பற்றி நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் எழுப்பி நாடாளுமன்றத்தில் தமிழகத்தை தலைகுனிய வைக்கவும் உரிமை இருக்கும். ஆனால் உங்களின் தவறுகளை சுட்டிக் காட்ட மட்டும் யாருக்கும் உரிமை இருக்காது. எனில் நீங்கள் எந்த வேற்றுநாட்டவர்களா? தமிழகம் தனி நாடு என்ற நினைப்பில் இருக்கிறீர்களா? அல்லது நீங்கள் கேள்வி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களா?.

நீங்கள் செய்யும் பிரிவினை அரசியலை சுட்டிக்காட்ட வேறு எந்த மாநில முதல்வருக்கும் உரிமை இல்லை. உங்களின் துரோகத்தை வெளிச்சம் போட்டு காட்ட வேறு எந்த மாநில அரசுக்கும் அதிகாரம் இல்லை. என்றால் உங்களின் தவறுகளை சுட்டிக்காட்ட வேறு யாருக்கு அதிகாரம் இருக்கிறது? மற்ற மாநிலம் சார்ந்த விஷயம் பற்றி பேச அவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அளவீடு மற்ற மாநிலங்களில் நடைபெறும் தேசிய மாநில அரசியல் நகர்வுகள் பற்றி பேசுவதற்கும் விமர்சனம் செய்வதற்கும் திமுகவிற்கு தமிழக அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.?

ஒரு தேசத்தில் ஒரு தேசிய கல்விக் கொள்கை பற்றி நாங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவோம். விஷம பிரச்சாரங்கள் போய் பிரச்சாரங்கள் மூலம் மலிவான பிரிவினை அரசியல் செய்வோம். ஆனால் அதன் உண்மை தன்மை பற்றி பேசவும் எங்களின் துரோகத்தை தோலுரித்து பேசவும் உத்திர பிரதேச முதல்வருக்கு உரிமை இல்லை என்று பேசும் திமுக கனிமொழிக்கு இலங்கை என்னும் வேறொரு நாட்டின் இறையாண்மை மீதும் அந்நாட்டின் உள் விவகாரம் பற்றி பேசுவதற்கும் எப்படி உரிமை வந்தது?

கனிமொழி கருணாநிதி ஸ்டாலின் திமுகவிற்கு இலங்கை பற்றி பேச உரிமை இருந்ததா?

தேசத்தின் வெளியுறவு கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் தேசத்தின் கேந்திரிய பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற குறைந்தபட்ச அக்கறை இல்லாமல் தேசிய இறையாண்மை மத்திய அரசின் வெளிவகார நிலைப்பாடு அத்தனையும் காற்றில் பறக்க விட்டு உங்களின் கட்சியின் மொழி அரசியல் உங்களின் இன அரசியல் மட்டுமே முக்கியம். அதன் மூலம் வரும் அரசியல் ஆதாயம் மட்டுமே முக்கியம் என்று இலங்கை விவகாரத்தை வைத்து நீங்களும் உங்களின் தந்தையாரும் அவரின் கட்சி கூட்டணி கட்சிகள் ஆதரவாளர்கள் எல்லாம் சேர்ந்து செய்த அராஜகம் மறந்து போனதா?அதற்கெல்லாம் திமுகவிற்கு எங்கிருந்து உரிமை வந்தது.?

உங்களுக்கு அரசியல் ஆதாயம் என்றால் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பற்றி பேசலாம். சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை எதிர்ப்பீர்கள். உங்களுக்கு அரசியல் ஆதாயம் இருக்கும் எனில் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் ஆதரவாகஅடிபொடிகள் மூலம் ஆட்டம் போடுவீர்கள்.

உங்களுக்கு மலிவான அரசியல் ஆதாயம் கிடைக்கும் எனில் இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் கூட நீங்கள் கருத்து சொல்லலாம். உங்களின் கட்சிக்காரர்கள் சேவ் பாலஸ்தீனம் என்று போராட்டம் கூட செய்யலாம். கேட்டால் அதெல்லாம் மனிதாபிமானம் என்று சொல்வீர்கள்.

ஆனால் உங்களின் பொய்யான மொழிப் பிரச்சாரத்தை மொழி – இனம் என்னும் செய்யும் பிரிவினை அரசியலை தேசிய கல்விக் கொள்கை பற்றிய விஷம பிரச்சாரத்தை ஒருவர் முறியடித்து உங்களின் துரோக அரசியலையும் தேசத்திற்கு மாணவர்களுக்கு நலன் சேர்க்கும் தேசிய கல்விக் கொள்கை பற்றியும் பொது வெளியில் பேசினால் அது உங்களுக்கு உரிமை மீறலாக தெரியுமா ?

அப்படி எனில் பிரச்சனை தேசிய முன்னோடி கல்விக் கொள்கையிலும் உத்தரபிரதேச முதல்வரின் பேச்சிலும் இல்லை. உங்களின் எண்ணம் – சிந்தனை – உங்கள் அரசியல் நிலைப்பாடு எல்லாவற்றிலும் சந்தர்ப்பவாதமும், பொய்யும் -புரட்டும் நயவஞ்சகமும், பிரிவினை அரசியலும் மட்டுமே நிறைந்திருக்கிறது என்று அர்த்தம்.

சுற்றுலா போன நாட்டில் தமிழ் தமிழர் என்று வீர வசனம் பேசி இனி இந்த நாட்டின் பக்கம் கூட திரும்பாதீர்கள் என்று கேவலப்பட்டு வந்த பிறகும் இன்று வரை தமிழ் தமிழர் என்று சொல்லி தமிழகத்தை உருப்படாமல் செய்வதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் தேசிய கல்வி கொள்கை பற்றிய உண்மையை பேச வேறு மாநில முதல்வருக்கு உரிமை இல்லை.

உங்களின் தவறுகளை நீங்கள் செய்யும் அராஜகங்களை தட்டிக் கேட்கவும் அதை மக்கள் மத்தியில் வெளிகொனரவும் யாருக்கும் உரிமை இல்லை எனில் நீங்கள் ஒன்றும் ஆகாயத்தில் இருந்து இறங்கி வந்தவர்கள் அல்ல. நீங்களும் உங்கள் கட்சியினரும் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர்களும் அல்ல.

உங்களைப் பற்றி யாரும் பேசவும் கேள்வி எழுப்பவும் உரிமை இல்லை என்றால் வேறொரு மாநிலத்தில் இருந்து நதிநீர் வேண்டும் என்று கேட்பதற்கு உங்கள் மாநிலத்திற்கு உரிமை இல்லை என்று அண்டை மாநிலங்கள் தமிழகத்தை பார்த்து பேச எவ்வளவு நேரம் பிடிக்கும்? அதைத்தான் எதிர்பார்க்கிறீர்களா? அதை வைத்து காவேரி பிரச்சனையில் ஒரு பெரும் கலகத்தை செய்து ஆதாயம் அடைந்து விடலாம் என்று அரசியல் கணக்கு போடுகிறீர்களா? உங்களின் அரசியல் கணக்குகள் எதுவும் கடந்த காலங்களில் பலித்திருக்கலாம். மோடி அமித்ஷாவிடம் பலிக்காது.

நீங்களும் உங்கள் கட்சிக்காரர்களும் நாடு முழுவதும் சொத்துக்களை வாங்கி குவிக்கலாம். உங்களின் குடும்ப தொலைக்காட்சிகள் நாடு முழுவதும் தொலைக்காட்சி சேனல்களை நடத்தலாம். கோடிகளில் புரளலாம். அதில் எல்லாம் உங்களுக்கு முழு உரிமை உண்டு. அதில் எல்லாம் இந்திய தேசிய சட்டம் இறையாண்மை போர்வையில் உங்களை பாதுகாத்துக் கொள்வீர்கள்.

ஆனால் உண்மைக்கு மாறாக தேசிய கல்விக் கொள்கை பற்றி நீங்கள் பேசும் விஷயத்தை தட்டிக் கேட்டு அதில் உங்களில் பொய் முகத்தை தோலுரிக்கும் உத்தர பிரதேச முதல்வரின் பேச்சு மட்டும் உரிமை மீறலா?

அப்படி எனில் இனி உங்களுக்கு தமிழகத்தை கடந்து வேறு எந்த மாநிலம் அதன் விவகாரம் பற்றி பேசவும் அருகதை இல்லை . உங்கள் அரசியல் ஆதாயத்திற்கு கூட தமிழகத்தில் இருக்கும் இதர கட்சிகளுடன் மட்டும் தான் கூட்டணி சேர முடியும் பரவாயில்லையா.

தேசிய கட்சியான காங்கிரசோடு எந்த உரிமையில் கூட்டணி சேர்கிறீர்கள்.? மற்ற மாநில கட்சிகளோடு எந்த உரிமையில் கூட்டம் போட்டீர்கள்?. நாடு முழுவதும் இருக்கும் பெண் அரசியல்வாதிகளை அழைத்து பெண்கள் உரிமை பாதுகாப்பு மாநாடு நடத்த உங்களுக்கு எங்கிருந்து உரிமை வந்தது? .

உங்களின் ஆதாயம் என்று வந்தால் மேற்குவங்க மம்தா உங்களுக்கு தீதி . புது தில்லியில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் உங்களுக்கு சகோதரர். கேரளத்தில் இருக்கும் சேட்டன்கள் உங்களுக்கு தோழர்கள். ஆனால் உங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் உபி முதல்வர் தமிழகத்தின் மீது உரிமையற்றவர்.

உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து பேசக் கூட வேறு மாநில முதல்வருக்கு உரிமை இல்லை எனில் பிரதமர் வருகையை எதிர்க்க உங்களுக்கு உங்கள் கட்சிக்கு எங்கிருந்து உரிமை வந்தது?

தமிழக முதல்வர் கருத்து பற்றி பேச உபி முதல்வர்களுக்கு உரிமை இல்லை எனில் பாரதத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என்று தீர்மானம் போடவும் அவர்களின் விடுதலைக்காக போராடி அவர்களின் விடுதலையை கொண்டாடி கொலை குற்றவாளிகளை கட்டி அணைக்க உங்களுக்கு எங்கிருந்து உரிமை வந்தது?

உங்களைவிட கேவலமான அரசியல் கட்சியும் உங்களை உங்கள் குடும்பத்தாரை விட கேடுகெட்ட ஜென்மங்களும் நிச்சயம் இந்த உலகத்தில் மட்டும் இல்லை வேறு எந்த கிரகத்திலும் கூட இருக்காது.

பாரதத்தின் தேசியக்கொடி இருக்க வேண்டிய இடத்தில் சீன கொடி இருந்ததனால் என்ன கெட்டுப் போய்விட்டது? என்று கேட்கும் உன்னை போல மலிவான நாலாந்தர அரசியல்வாதியிடம் தேசிய இறையாண்மை – ஒருமைப்பாடு பற்றிய அடிப்படை புரிதல் எள்ளளவும் இருக்காது இன்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகளில் தான் அப்பாவி மக்களுக்கு உங்களின் ஓநாய் முகம் தெரிய வரும். அவ்வகையில் நடப்பதெல்லாம் எங்களுக்கு நன்மையே.

இத்தனை காலம் மோடியை வம்பு இழுத்தோம் . அவரே நம்மை ஒன்றும் செய்யவில்லை. உத்தரப்பிரதேச முதல்வரை வம்பு இழுத்தால் என்னவாகி விட போகிறது? என்ற இறுமாப்பில் தான் இன்று யோகியை வம்பிழுக்கிறீர்கள்.
இதில் காவிகளுக்கு முழு மகிழ்ச்சி தான்.

ஏனெனில் மோடி தருமராஜனின் சாயல். இறுதிவரை பொறுமை காத்து முடிவில் தான் திருப்பி அடிப்பவர். ஆனால் யோகி பீமனின் சாயல். சீண்டிய அடுத்த கணம் தூக்கிப்போட்டு மிதிக்கும் ரகம். அதனால் இத்தனை காலம் நாங்கள் அனுபவித்த மனக்காயங்களுக்கு எல்லாம் யோகி உங்களை துவம்சம் செய்து எங்களுக்கு நல்மருந்தை வழங்குவார் என்று காத்திருக்கிறோம் .

ஜெய் ஹனுமான்! ஜெய் மாகாளி!

  • தேசிய பணியில் !
    ஜான்சி ராணி ஹிந்துஸ்தானி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories