
ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து சமூகத் தளங்களில் வெளியான சில கருத்துகள்!
கவர்னருக்கு எதிரான நேற்றைய தீர்ப்பு மத்திய அரசுக்கு Temporary Setback தான். சர்வ நிச்சயமாக இந்த விஷயத்தை மத்திய அரசும், காங்கிரசும் விடாது.
நீதி மன்றத் தீர்ப்பில் ஏற்றுக் கொள்ள இயலாத பகுதி இதுதான்.
1. நீதிபதிகளே பத்து மசோதாக்களையும் அவர்களே தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்ததுதான்.
காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டுமா என்றால் நிச்சயம் காலக்கெடு அவசியம் என்று தான் நான் சொல்வேன். அதையும் நீதி மன்றம் Guide Line ஆக மட்டுமே கொடுக்கலாம்.
மற்றபடி காலக்கெடுவை தீர்மானிக்க வேண்டிய இடம் பாராளுமன்றம். காரணம் ஏற்கனவே அவருக்கான காலக்கெடு குறிப்பிடாமல் As soon as Possible என்று இருப்பதைக் கால வரையறையுடன் பாராளுமன்ற சட்டத் திருத்தம் மூலமாகவே மாற்ற வேண்டும். நீதிபதிக்கு அந்த வேலை கிடையாது என்பதே எனது கருத்து.
இட ஒதுக்கீடு விஷயத்தில் உச்ச நீதி மன்றத் தீர்ப்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதற்கு என்னால் இரு உதாரணங்களை மேற்கோள் காட்ட இயலும்.
இந்திரா ஷானி அளித்த பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு தீர்ப்பில் மூன்று விஷயங்கள் சட்ட மன்றம், பாராளுமன்றம் மூலமாக நிராகரிக்கப்பட்டது. ஆனால் அப்போது அதை ஒரு Land mark Judgement என்றும், இனி இதைப் பின்பற்றியே இட ஒதுக்கீடு இருக்கும் என்று கொண்டாடித் தீர்த்தனர்.
ஆனால் நடந்தது என்ன?
1. ஷானி தீர்ப்பின் படி, 50% க்கும் மேலாக இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது. மீதி 50% பொது என்று அளித்தார்.
ஆனால் தமிழகம் 69% வழங்கி வருகிறது. தமிழக சட்டமன்றம் சட்டம் நிறைவேற்றி பாராளுமன்ற ஒப்புதலுடன் நடைமுறையில் உள்ளது. This case is challenged in court and SC is sleeping on this case.
2. ஷானி தீர்ப்பின் படி SC/ST இட ஒதுக்கீடு பதவி உயர்வில் வழங்கப்படக் கூடாது.
இதை மன்மோகன் அரசாங்கம் பதவி உயர்வு வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வந்தது.
3. ஷானி தீர்ப்பின் படி, இட ஒதுக்கீட்டில் பொருளாதாரம் ஒரு Consideration ஆக இருக்கக் கூடாது என்றது.
ஆனால் மோடி அரசு பொதுப் பிரிவில் உள்ள 50% லிருந்து 10% EWS மூலமாக வழங்கப்படும் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதை எதிர்த்து போட்ட வழக்கில் மோடி அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இட ஒதுக்கீடு தீர்ப்பு வந்த போது ஆ… ஊன்னு ஒவ்வொரு தரப்பும் கொண்டாடியது. நான் மேலே குறிப்பிட்ட சட்டத் திருத்தங்களை வைத்துப் பார்க்கும் போது ஷானி தீர்ப்பு இன்று எந்த நிலையில் உள்ளது என்று பாருங்க.
ஆகையால் நேற்றைய தீர்ப்புக்காக நாம் தேவைப்படாமல் குழம்பிக் கொள்ள வேண்டாம். நிச்சயமாக இந்தத் தீர்ப்பு மத்திய அரசால் நீதி மன்றம் மூலமாக Challenge செய்யப்படும் அல்லது காங்கிரசின் உதவியுடன் பாராளுமன்றத்தில் சில திருத்தங்களுடன் சட்டமாக்கப்படும்.(உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலைக் கணக்கில் கொண்டோ… கொள்ளாமலோ) .
இந்தத் தீர்ப்பை காங்கிரசின் மத்திய தலைமை வரவேற்றுள்ளதா என்று தெரியவில்லை.
நடைமுறையில் இந்தத் தீர்ப்பால் எதிர்காலத்தில் அதிகம் குழப்பமும் மத்திய் அரசுக்கும் மாநில அரசுக்கும் பிரச்சினை வரும் சட்டமாக நான் பார்ப்பது, Con currrent List ல் உள்ள ஏரியா தான். ஏனெனில் மத்திய அரசு நீட் போல ஒரு சட்டத்தைக் கொண்டு வரும். மாநில அரசு இதுபோல சட்டமியற்றும். சட்டத்தில் பாராளுமன்றம் கொண்டு வரும் சட்டமே Prevail ஆகும் என்று சொன்னாலும் மாநில அரசுகள் நீதி மன்ற படிக்கட்டுக்கள் ஏறும்.
நாட்டை பெரியண்ணன் போல அதாவது இந்தத் தீர்ப்பில் நடந்து கொண்டது போல உச்ச நீதிமன்றம் நடந்து கொள்ளும். அதை நாம் அனுமதிக்கலாகாது.
பி.கு: நான் எப்போதும் சொல்வது போல நீதிபதிகள் மீது எனக்கு பெரிய அபிப்பிராயம் எல்லாம் கிடையாது, அது நமக்கு சாதகமான தீர்ப்புகளை வழங்கினாலும், வழங்காவிட்டாலும். நாம் வேண்டுமானால் நமக்கு சாதகமாக வந்தால் கொண்டாடலாம். பாதகமாக வந்தால் திட்டலாம். நீதிபதிகளின் இலட்சணத்தை வெளியே சொல்ல முடியாது, அவ்வளவுதான் நம்மால் சொல்ல முடியும்.
- லக்ஷ்மண பெருமாள்
கவர்னருக்கு காரியம் தத்திக்கு வீரியம்?!
நேற்று உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பில் ஆட்டுக்கு இனிமேல் தாடி தேவையில்லை என்பதை உறுதி செய்துவிட்டார்கள், கவர்னர் பதவிக்கு காரியம் செய்துவிட்டது தளபதியின் திமுக என்றளவிற்கு புரோக்கர் மீடியாவும், உபிஸ்களும் கொண்டாடினார்கள்.
ஆனால் அதே நேரம் இரண்டு வேறு வழக்குகளில் தத்தி அரசுக்கு விழுந்த செருப்படியை, அது அடிடாஸ் ஷீவில், திமுகவின் முதுகில் இருந்த பூச்சியைத்தான் அடித்தார்கள் என்று சத்தியம் செய்தார்கள் கொத்தடிமைகள்.
அது சரி, ஆனால் சங்கிகள் எல்லாம் முடிந்துவிட்டது போல அதற்கு இணையாக முட்டுக் கொடுக்க முடியாமல் தின்றினார்கள். ஏனென்றால் எமோஷனல் ஆகிவிட்டால், சங்கிகள் Angry Bird ஆகி தங்களைத்தானே அழித்து கொள்வதில் வல்லவர்கள்.
நாம் அதைக்கொஞ்சம் உடனே நீ ஜெர்க் ரியக்ஷன் செய்யாமல், நியாயமாக அலசினால், அது இந்த கறை ஜனநாயகத்துக்கு நல்லது என்பது புரியும்.
அண்ணல் அம்பேத்கார் சட்டத்தை பிரிடிஷ் சட்டத்தின் அடிப்படையில் வடிவமைத்தபோது ஆட்சியில் இருப்பவர்கள் நல்லவர்கள், சேவை செய்ய வந்தவர்கள், தவறு செய்ய மாட்டார்கள் என்று அன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப வடிவமைத்தனர்.
ஆனால் கேடுகெட்ட கிரிமினல்களும், இத்தாலி மாஃபியாவும், அடிப்படை புரியாத தத்திகளும், ஆட்சியில் அமர்வார்கள் என்று அன்று யோசிக்கவில்லை. இன்று இந்த கிரிமினல் திராவிஷ அரசு ஏற்படுத்தும் ஒவ்வொரு முன்மாதிரியும், சட்டத்தை ஆட்சியாளர்கள் தவறானவர்களும் இருப்பார்கள் என்பதை கணக்கில் கொண்டு வடிமவைக்க வேண்டும் என்பதற்கு தத்தி, மமதா போன்றவர்கள் நல் உதாரணத்தை ஏற்படுத்துகிறார்கள்.
அதனால் அதற்காக அசிங்கப்படவோ, பயப்படவோ தேவையில்லை. 2027 ல் தொடங்கும் அடுத்த 30 ஆண்டுகள் பாரதத்திற்கு மிகவும் நல்லது என்பதை இன்று நடக்கும் நிகழ்வுகள் எவ்வளவு நல்லது என்பதை அடுத்த 10 ஆண்டுகளில் உணரும் இந்த பாரதம்.
அதாவது இத்தாலி மாஃபியாவால் மத்தியில் ஒரு கேடுகெட்ட ஆட்சி அமைந்ததால்தான், இந்தியாவிற்கு மோடி என்ற பெரிய தலைவர் கிடைத்தார். அதே போல இங்கே கோல்மால்புரம் செய்கிற அறிவில்லாத செயல்களால், தமிழகத்திற்கு ஒரு நல்விடியல் கிடைக்கும் என்பதால் நாம் தத்திகளுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டவர்களாகிறோம்..
இனி விஷயத்திற்கு வருவோம்.
🔥 தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழ(ல)கங்களுக்கு சான்சிலர் கவர்னர். அதன் வைஸ் சான்சிலரை நியமிப்பபதில் கவர்னருக்கு அதிகாரம் இருப்பதால், அந்த 10 பல்கலைக்கழகங்களுக்கு முதல்வர்தான் சான்சிலர் என்றும், அவர்தான் வைஸ் சான்சிலரை நியமிப்பார் என்ற ஒரு சட்டத்தை தமிழக தத்தி அரசு இயற்றியது. அதற்கு காரணம் அது பணம் காய்க்கும் மரம் என்பதே!
Note: அது எவ்வளவு தவறானது என்று அன்றே விரிவாக எழுதியிருக்கிறேன், படிக்கவும்
அதை கவர்னர் ஏற்க மறுக்க, அதே சட்டத்தை மீண்டும் சட்டசபையில் பாஸ் செய்து, கவர்னருக்கு மீண்டும் அனுப்பியது. அப்படி அனுப்பினால் அதை கவர்னர் ஏற்றுத்தான ஆகவேண்டும் என்பது நடைமுறைச்சட்டம்!
அப்படி ஏற்றிருந்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல சார்கள் பல்கழைகக்ழக வேந்தர்களாக நியமிக்கப் பட்டிருக்கலாம் என்பதால் அதை கவர்னர் தாமதபடுத்தினார். இன்று அது கவர்னரின் நடவடிக்குக்கு எதிராக போனலும், அந்த தாமதத்தால் தவறு தடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் காவ்ர்னர் அப்படி எல்லையின்றி தாமதப்படுத்தி அதற்கென கால அளவு என்ற ஒரு வரையரை இல்லாததால், அந்த வழியை கவர்னர் பயன்படுத்தினார், நோக்கம் சரியாக இருந்தாலும், நடமுறைப்படி அது கவர்னரின் தவறுதான்!
அது தவறு என்று சொல்லும் தீயசக்தி திமுகவின் வாதமும் ஏற்கப்பட வேண்டும், ஏனெனில் ஒரு நல்ல அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தை, ஒரு மோசமான கவர்னர் அப்படி செய்திருந்தால், அப்போது அது தவறாகுமல்லவா? அது போல மோடியின் குஜராத் அரசுக்கும், பாஜக அரசுகளுக்கும், கர்நாடகாவில் ஹெக்டே அரசுக்கும் காங்கிரஸ் அரசால் பல முறை நேர்ந்தது உண்டு.
அதனால் தத்தி அரசு அதை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு சென்றது. அதன் காரணமாக கவர்னர் அதை தன்னிடம் வைத்துக் கொள்ளாமல், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். அவரும் அதை ஏற்கவோ, மறுக்கவோ இல்லை.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை விசாரித்து, கவர்னர் காலவரையின்று தாமதிக்க முடியாது, அந்த சட்டம் இரண்டாவது முறை இயற்றி அனுப்பியதால், அதை கவர்னர் ஏற்றிருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து அந்த சட்டம் அதன்படி அமுலுக்கு வருகிறது என்று சொல்லி இருக்கிறது.
உடனே எல்லாம் முடிந்துவிட்டது, நாடே நாசமாகிவிட்டது என்பது போல சங்கிகள் கோபக்கணைகளால் தற்கொலை செய்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அந்த கோபத்தில் கவனிக்கத்தவறிய சில விஷயங்கள், இது முடிவல்ல, ஒரு நல்ல மாற்றத்திற்கான ஆரம்பம் என்பதைத்தான்.
ஏனெனில் இது சட்டமாக சட்டசபையில் ஒப்புதல் தந்தாலும், மீண்டும் அதை கவர்னர் கையெழுத்து போட்டுத்தான் அனுமதிக்க வேண்டும். மணி பில் போன்றவை எப்படி கவர்னர் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டுமோ, அதுபோல இதையும் ஏற்கத்தான் வேண்டும்.
ஆனால் இந்த மாற்றம் அடிப்படை நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் என்பதால் இதை எதிர்த்து கவர்னர் தடை வாங்கலாம். அதாவது சுப்ரீம் கோர்ட் கொடுத்த தீர்ப்பு நடைமுறை சம்பந்தப்பட்டதுதானே தவிர அந்த சட்டத்தின் உள் இருக்கும் விஷயம் சரி அல்லது தவறு என்று சொல்லவில்லை என்பதால் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு போகலாம்.
ஏனென்றால், தத்தி அரசு, மமதை அரசு போன்ற கேடுகெட்டு அரசுகள் எதை வேண்டுமானாலும் சட்டமாக இயற்றினால் அதை கவர்னர் ஏற்றுத்தான் ஆகவேண்டுமா என்பதுதான் உங்கள் கேள்வியல்லவா?
உதாரணமாக, தமிழக அரசை தனி நாடாக பிரகனப்படுத்தியோ அல்லது தமிழக அரசில் இன்றுமுதல் மன்னராட்சி நடைமுறை படுத்துகிறோம், அதன்படி தேர்தல் இனிமேல் நடக்காது. கோல்மால்புர வாரிசுகளே ஆளும் என்பது போன்ற ஒரு சட்டத்தை தத்தி அரசு இயற்றினால், அதை கவர்னர் அப்படியே ஏற்றுத்தானே ஆக வேண்டுமா என்றால், ஆம் இந்த தற்போது இருக்கும் நடை முறையின்படி ஏற்றாக வேண்டும்.
ஆனால் அதற்கெதிராக சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்து அல்லது மாநிலத்தின் அதிகாரத்தை மத்திய அரசின் கீழ் குறைத்து மத்திய அரசு சட்டம் இயற்றி தடுக்கலாம். அதாவது கல்வியை மத்திய அரசின் கீழ் இந்திரா காந்தி கொண்டு சென்றதுபோல.
எனவே இது எல்லாம் முடிவடையவில்லை என்பது மட்டுமல்ல, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நடைமுறையை மட்டும் பார்க்காமல், மேற்சொன்னதுபோல சூழல்களையும் கருத்தில் கொண்டு அதை பெரிய பெஞ்சுக்கு சிபாரிசு செய்து, அதை முழுவதுமாக ஆராய்ந்து தீர்ப்பு சொல்லி இருக்க வேண்டும். அதை செய்யவில்லை என்பது நமது கோர்ட்டுகளின் தீர்ப்புகள் மேம்போக்காக அமைந்துவிட்டது என்பதையும் நினைவில் கொள்ளல் வேண்டும்.
அது ஏதோ இங்கே மட்டும் நடப்பதாக நினைக்க வேண்டாம், வக்ஃப் வாரிய சட்டம் இயற்றியபோது, அது அடிப்படை மனித உரிமை மீறல் கொண்ட ட்ராகானியன் ஏக்ட் என்று அதை ஏன் சுப்ரீம் கோர்ட் அன்று தடுக்கவில்லை?
சமீபத்தில் ஒரு நீதிபதியின் வீட்டில் கட்டுக்கட்டாக பண மூட்டை சிக்கியபோது அவருக்கு எதிராக எதையும் செய்ய முடியவில்லை என்பது போல பல கேள்விகளுக்கு விடை மத்திய அரசின் சட்ட திட்டங்களிலும், நம்மிடமும் இல்லை.
ஆனால் இதுபோன்ற தவறான சூழல்களே சட்டத்தை திருத்த இந்திய அரசுக்கு கிடைத்த நல்வாய்ப்பு என்று நாம் புரிந்துகொண்டால், இது தவறான குறுக்கு வழியில் நடந்த ஒரு நல்ல மாற்றத்திற்கான விதை என்பதை புரிந்தால் சங்கிகளும், திராவிஷ அரசுக்கு எதிரான மக்களும் Angry Bird ஆகி மாய்ந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. தவறான வழியில் ஒரு நல்ல மாற்றமே!
அடுத்த சனி பெயர்ச்சி 2027 ஆண்டு மேஷத்தில் தொடங்கும்போது அடுத்த 30 ஆண்டுகள் சனியின் ஆதிக்கம் கடகம் என்ற தாயுள்ளம் கொண்ட ஒரு நடப்பில் ஒரு பெரிய மாற்றம் நிகழும். அதற்கான நல்ல மாற்றத்திற்கான அறிகுறிகளே இந்த அடிப்படை அறிவில்லாத தத்திகளின் ஆட்சியும், அது இயற்றும் கேடுகெட்ட சட்டங்களும் என்றுதான் பார்க்க வேண்டும்.
அதே சமயம் காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற விஷயங்களை எந்த மாநில அரசும் செய்யவில்லையே என்ற கேள்வி உங்களுக்கு எழுவது நியாயம்தான். அன்று இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் இதை ஒரு முதல்வர் செய்திருந்தால், அடுத்த கனமே ஆட்சியை கலைத்து, ஆட்சியாளர்களை உள்ளே தள்ளியிருப்பார். ஆனால் மோடி அரசு அதை செய்யாது என்பதால் இவர்கள் ஆட்டம் எல்லையில்லாமல் போகிறது.
ஆனால் இவர்களின் லகான் வேறு வகையில் அதை சரி செய்ய முடியும். அதை இன்னும் மோடி அரசு செய்யாமல் காலம் கடத்தினால், கோபம் தத்தி அரசின் மீது வருவதைவிட, அது கைலாகத மோடி அரசின் மீதுதான் திரும்பும் என்பதையும் உணர்வார் அமித்ஷா!?
மேலும் இந்த சட்டத்தின்படி ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் வைஸ் சான்சிலர் பதவியை தீயசக்தி திமுக ஏலத்தில் விடும் எனும்போது அது இன்னும் மோசமான ஒரு அடியை எடுத்து வைக்கிறது என்பதை மக்கள் உணரவேண்டும்.
அதற்கு காரணம் தமிழக மாக்கள் ஓட்டை ₹200 க்கு விற்பதாலும், எல்லை மீறும் திமுகவின் ஆட்சியை நிரந்தர அழிக்கும் இவை பெருமளவில் உதவும் என்று மக்கள் உணராதவரையில், இதுபோன்றவைகள் நிகழ்வதை தடுக்க முடியாது!
கவர்னர் மீது விழுந்த இந்த கறை நல்லதற்கே!
🐶 Indhea