ரகசியங்கள் பொது வெளிக்கு வருவது அவசியமல்ல!

indrajaal - 2026
  • சக்கரவர்த்தி மாரியப்பன்

பாகிஸ்தான் உக்ரைனுக்கு விற்று பணம் பெற்றதாகச் சொல்லப்படும் இரண்டு முக்கிய ஆயுதங்கள்.
● M109 Howitzers – ஹோவிட்சர்கள்
● BM 21 Grad – Boyevaya Mashina ராக்கெட் லாஞ்சர்கள்.

இவை இரண்டும் 1960-70 காலத்திய ஆயுதங்கள். இவை தவிர இதில் பயன்படுத்தும் 122 மி.மீ ராக்கெட்டுகள்.

ஹோவிட்சர்கள் பீரங்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் இரண்டிற்கும் இடைப்பட்ட வகையின என்று அழைக்கப்படுகின்றன.

M109 அமெரிக்க தயாரிப்பு. நீண்ட தூரம் சென்று தாக்கும் ராக்கெட்டுகளை அனுப்பும் வல்லமை கொண்டது. சுமார் 250 முதல் 300 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இவை 45° கோணத்தில் குறைந்த தூரம் மற்றும் நீண்ட தூரம் என்று இலக்கை திசை மாற்றிச் சுடும் வகையினது.

NATO நாடுகளுக்கு வடிவமைக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவை பழைய ஆயுதங்கள் என்றும் இவற்றின் நவீன வடிவங்கள் வந்துவிட்டன என்றும் தெரிந்து கொள்ளலாம்.

BM 21 – Combat Vehicle Hail என்று பொருள். ரஷ்யா தயாரிப்பான இந்த இயந்திரம் மிக வேகமாக ராக்கெட்டுகளை அனுப்பும் திறன் கொண்டது. துல்லியமான தாக்குதல் செய்வது இதனால் முடியாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இடைவிடாமல் குண்டு மழை பொழிய இது உதவும். ஒரு விசையில் 720 கணைகளை ஏவும் வல்லமை பெற்றது. காலம் காலமாக எதிரிகளை பயமுறுத்தும் ஆயுதம்.

இந்த போர்க் கருவிகளை மட்டுமே பாகிஸ்தான் விற்றதாகத் தகவல்கள் உள்ளன. அதே வேளையில் துருக்கியிடம் இருந்து டிரோன்களும், சீனாவிடம் இருந்து பெரும்பான்மையான ஆயுதங்களையும் அது இறக்குமதி செய்துள்ளது. போர் நடந்தால் நான்கு நாட்களுக்கு மட்டுமே ஆயுதங்கள் அதனிடம் உள்ளன என்பது சரியான வாதம் இல்லை.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ரஷ்யா ஆயுதங்களையே பாகிஸ்தான் வழங்கியது மற்றும உக்ரைனைக்கு ஆதரவான ஐ.நா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது இரு தரப்பு உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான நிலை என்பதை துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் எடுத்துள்ளன. OIC எனப்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு நமக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளது. சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை நாம் நம்ப முடியாது. #OperationSindoor விபரங்களை பொது வெளியில் ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று அரசு அறிவித்துள்ள நிலையில் பாக்.கின் பாதிப்பு என்ன என்பது தெரியாமல் இங்கு பலர் நாம் பின் வாங்கி விட்டோம் என்று நினைக்கிறார்கள்.

இரகசியங்கள் பொது வெளிக்கு வருவது அவசியமல்ல.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

Entertainment News

Popular Categories