December 5, 2025, 12:07 PM
26.9 C
Chennai

காலையில் ஒரு பேச்சு; மாலையில் ஒரு பேச்சு! பெரியண்ணன் ட்ரம்ப்பின் ‘ஸ்டிக்கர்’ அட்ராசிட்டி!

modi and trump - 2025
#image_title

– ஜி.எஸ்.பாலமுருகன்.

நான் ஆட்சிக்கு வந்தால், உலகில் இனி போர்கள் இருக்காது என்று அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் உறுதியளித்தார் ட்ரம்ப். சொன்னது போலவே வெற்றி பெற்று முதல் உரையில் பேசியபோது, ஒரு வாரத்தில் போர்களுக்கு முடிவு கட்டப்படும்; இது போருக்கான காலம் அல்ல என்று சூளுரைத்தார்.

அட, ட்ரம்ப் முன்னப் போல இல்லப்பா… அதிரடியா பேசுறேனு எதையாவது உளறி வைக்காம, நல்லா முதிர்ச்சியா பேசுறாரு… வெல்டன்னு உலக முழுவதும் பாராட்டு…

ஆனால் என்ன நடக்கிறது? 6 மாதங்கள் ஆகப் போகிறது… ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்கிறது, இஸ்ரேல் – காஸா பற்றி எரிகிறது, அமெரிக்கா – சீனா இடையே வணிகப் போர் ஏற்பட்டுள்ளது… இதுதான் ட்ரம்ப்… நம்மூர் ‘நீட் ரத்து ரகசியம்’ போல… நீட்டும் தொடருது… போரும் நடந்துகிட்டுதான் இருக்கு!

இப்போ திடீர்னு இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தம்பட்டம் அடித்து கொள்கிறார் பெரியண்ணன் ட்ரம்ப். ஆபரேஷன் சிந்தூர்ல மத்திய பாஜக அரசு மீது குறை சொல்ல முடியாம இருந்த எதிர்க்கட்சிகளின் வாய்க்கு அவல் போட்டது போல ஆகிட்டு ட்ரம்பின் அறிவிப்பு… அது எப்படி அமெரிக்கா தலையிடலாம்னு நம்ம தலைவர்கள் கொதித்து போய்விட்டார்கள்…

அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையினால்தான் இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். மே 10 ஆம் தேதி ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு இது…

> “அமெரிக்கா நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதைக் அறிவிக்க நான் மகிழ்ச்சியடைகிறேன். இரு நாடுகளும் அறிவும் மிகுந்த புத்திசாலித்தனமும் பயன்படுத்தியதற்காக வாழ்த்துகள்.”

ஆனால், மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என்று, ட்ரம்ப் அரசின் வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்தது…

> “மோடி, ஷெரீஃப் ஆகிய இரு பிரதமர்களின் ஞானம், அறிவு, மற்றும் அரசியல் முதிர்ச்சியை நாங்கள் பாராட்டுகிறோம். அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்தது அவர்களின் திறமையின் சான்று. எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மோதல்களை தவிர்க்க, பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த அமெரிக்கா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும்.”

இப்படி காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு கணக்காக, நேற்றிரவு மீண்டும் ட்ரம்ப் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அது… 

> “பாகிஸ்தானும் இந்தியாவும் போரை நிறுத்தவில்லையெனில் வணிகம் இல்லை என நான் விடுத்த எச்சரிக்கையால் தான், இரு நாடுகளும் உடனே இசைவாக சமாதான ஒப்பந்தத்திற்கு வந்தன. அணு ஆயுத போருக்கு வாய்ப்பு இருந்த நிலையை தடுக்க அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது.”

ஆனால், இந்தியாவின் பிரச்சினையில் மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என்ற வெளியுறவு கொள்கையின் உறுதிபாட்டை நேற்றிரவு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி மீண்டும் உறுதி செய்தார்.

> “இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், தப்பிக்கப் பார்த்த பாகிஸ்தான், உலக நாடுகள் தலையிட கெஞ்சியது. கடந்த 10ம் தேதி நம் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரை தொடர்பு கொண்ட பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை கோரியது. இனி ராணுவ சேட்டைகள், பயங்கரவாத செயல்கள் இருக்காது எனக் கூறியது. இந்தியா அதனை பரிசீலித்து தற்போதைக்கு நாம் தாக்குதலை நிறுத்தியுள்ளோம்.”

ஆனால் பாருங்க… ட்ரம்ப் என்னவெல்லாம் கதை விடுகிறார். (நல்லா புரியனும்னா, கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாரு பாருங்க மொமண்ட்…😀) ட்ரம்பும் அவரது வெளியுறவுத் துறையும் தான் மாற்றி மாற்றி பேசுகிறது. அட இன்னும் நான்தான்பா பெரியண்ணன் என்ற மனநிலையிலேயே, ஏதாவது சொல்லி ‘ஸ்டிக்கர்’ ஒட்டிக்க பார்க்கிறார்.

நண்பன் மோடி ஒத்துக்கணும்னு நினைச்சி பேசுகிறார். ஆனால் ”வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என்று பேசுவதையெல்லாம் பிரதமர் மோடியும் கேட்கிற ஆளா என்ன? சரி, இப்படிலாம் விமர்சித்து நாம எழுதினாலும், பாகிஸ்தான ஏதோ ஒரு வகையில இந்தியாவும் அமெரிக்காவும் வச்சு செய்கிறது என்ற கருத்தோட்டமும் இதில் அடங்கியிருக்கு! புரிஞ்சவங்க பிஸ்தா!!

  • ’செய்திக்கதிர்’ வாட்ஸ்அப் குழுவில் …

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories