நீதிமன்றம் பதில் தர வேண்டியதில்லை என்ற வாதம், அது பதில் தந்துவிடக் கூடாதே என்ற கவலையின் வெளிப்பாடு!

governor and president - 2026

அரசியல் அமைப்பு பற்றிய விளக்கங்களை சுப்ரீம் கோர்ட்டிடம் கேட்கும் அதிகாரத்தை அரசியல் சட்டம் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. அதன்படியே அவர் 14 கேள்விகளைக் கேட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பரிசீலனையில் இருந்த மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டே ஒப்புதல் அளித்ததாலும், அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்படாத காலக்கெடுவை அவருக்கும் கவர்னருக்கும் சுப்ரீம் கோர்ட் நிர்ணயித்ததாலும், இக்கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியைப் பொறுத்த வரை இது உரிமைப்பிரச்னை.

இதற்கு சுப்ரீம் கோர்ட் பதிலளிப்பதற்கு முன்பாகவே தமிழக முதல்வர் பதில் அளித்துள்ளார்.

‘ சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து முடிந்து போன விவகாரத்தில், ஜனாதிபதியின் மூலமாக மத்திய அரசு விளக்கம் கேட்கிறது. இது அரசியல் அமைப்பையே நிலைகுலைய வைக்கும் செயல். இதிலிருந்தே, கவர்னரை மாநில அரசுக்கு எதிராக பாஜக தூண்டுவது தெரிகிறது. மத்திய பாஜக அரசின் தீய எண்ணம் வெளிவந்துள்ளது… ‘என்ற வகையில் அவர் கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வெளியானபோதே, ‘ இது சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தன் அதிகார வரம்பை மீறியுள்ளதோ என்ற சந்தேகம் உருவாகும் வகையில் உள்ளது. மத்திய அரசு திருத்த மனு போட்டால்தான் தெளிவாகும் என்று எழுதியிருந்தேன்.

மத்திய அரசு திருத்த மனு போடவில்லை. ஜனாதிபதியே விளக்கம் கேட்டுள்ளார்.

எந்த மசோதாவும் ஜனாதிபதி அல்லது கவர்னர் ஒப்புதல் அளித்த பிறகே சட்ட அந்தஸ்தைப் பெறும். சுப்ரீம் கோர்ட்டே அதைச் செய்தது புதிய முறையாக உள்ளது. எனவேதான் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி எப்படி மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படுகிறாரோ, அப்படி கவர்னர்கள் மாநில அரசின் பிரதிநிதியாக செயல்பட வேண்டும் என்று மாநில அரசுகள் எதிர்பார்க்கின்றன. ஆனால், உண்மையில் கவர்னரும் மத்திய அரசின் பிரதிநிதிதான்.

மாநில அரசு தவறான திசையில் செல்வதாகத் தோன்றினால் அதைத் தடுப்பது அவரது கடமையாகிறது.

மத்திய அரசுக்கு முரண்பாடான மசோதாக்களை மாநில அரசு அனுப்பினால் அவற்றை கவர்னர் எப்படி ஏற்க முடியும்? மாநில அரசிடம் கேட்டுப் பார்ப்பார். முடியாவிட்டால் ஜனாதிபதிக்கு அனுப்பி விடுவார். அவ்வளவுதான் ஒரு கவர்னர் செய்ய முடியும்.

இது புரியாமல், ‘ கவர்னர் ஒரு போஸ்ட்மேன். கையெழுத்து போடுவதுதான் அவருடைய வேலை ‘ என்று மாநில அரசு கூறும்போது சிக்கல் ஏற்படுகிறது.

ஜனாதிபதி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க அரசியல் சட்டப்படி சுப்ரீம் கோர்ட் கடமைப்பட்டுள்ளது. அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது என்பது சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியாமல் இருக்க முடியாது.

சுப்ரீம் கோர்ட் பதில் தர வேண்டியதில்லை என்ற வாதம், அது பதில் தரக்கூடாதே என்று கவலைப்படுபவர்களின் எண்ணம்.

ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முழுமையாக விசாரித்து பதில் அளித்தால், முந்தைய தீர்ப்பு மாற்றப்படும் வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories