ராகுலால் POKஐ மீட்க முடியுமா? ஏன் இந்தக் கதை?

jugalbandi rahul yatra - 2026
  • பாலாஜி வெங்கட்ராமன்

காங்கிரஸ் கட்சி 2008-2014 காலகட்டத்தில் ஆறு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகள் நடத்தியதாகக் கூறியுள்ளது. அவர்கள் குறிப்பிடும் ஆறு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகளில், 6 ஜனவரி 2013 அன்று நடந்த ஒரு நிகழ்வுக்கு மட்டுமே சில ஆதாரங்கள் உள்ளன, ஆனால் அது கூட முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. மற்ற ஐந்து நிகழ்வுகளுக்கு (19 ஜூன் 2008, 30 ஆகஸ்ட்-1 செப்டம்பர் 2011, 27-28 ஜூலை 2013, 6 செப்டம்பர் 2013, 14 ஜனவரி 2014) தெளிவான ஆதாரங்கள் இல்லை.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் (MoD) RTI அறிக்கைகள், 2016-க்கு முன்பு இதுபோன்ற சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகள் நடந்ததற்கு ஆதாரம் இல்லை என்று கூறுகின்றன.

பொய்யே உன் பெயர் காங்கிரஸ் என்பது போல இருக்கு,.

இதுல தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) இந்தியாவால் திரும்பப் பெறப்பட்டிருக்கும்” என்று அடிச்சி விடுறார்.

ஆனால், உண்மையில் அது சாத்தியமா என்றால் வரலாற்று பின்னணி பார்த்தால் PoK 1947-ல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது உருவானது. இந்தியாவும் பாகிஸ்தானும் இப்பகுதியை தங்கள் பகுதியாகக் கருதுவதால், இது ஒரு நீண்டகால மோதல் பிரச்சனையாக உள்ளது.

இராணுவ மற்றும் அரசியல் சவால்கள்: PoK-ஐ மீட்பது என்பது இராணுவ நடவடிக்கைகள், பன்னாட்டு உறவுகள், மற்றும் உள்நாட்டு அரசியல் ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிக்கலான செயல்முறை. இதற்கு வலுவான தலைமை, துல்லியமான உத்தி, மற்றும் பன்னாட்டு ஆதரவு தேவை. இந்த நிலையில் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் நிலை, மற்றும் அதன் தலைவர்கள் யாரும் வலுவானவர்கள் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

இதில் பாகிஸ்தான் PoK-ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, மேலும் இது சீனாவின் செல்வாக்கு உள்ள பகுதியாகவும் உள்ளது (சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்). இதனால், PoK-ஐ மீட்பது இராணுவ ரீதியாக மட்டுமல்லாமல், பன்னாட்டு அரசியல் ரீதியாகவும் சவாலானது என்பது நிதர்சனம்.

இந்த நிலையில் ராகுல் காந்தி , அவரது தலைமையில் இந்தியா PoK-ஐ மீட்கும் திறன் இருக்குமா என்பது விவாதத்திற்குரியது. மேலே காங்கிரஸ் கட்சி கூறிய உண்மைக்கு மாறான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகளில் அதாவது மன்மோகன் சிங் முந்தைய ஆட்சி காலமான 2004-2014 காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, PoK-ஐ மீட்பதற்கு எந்தவொரு தீவிர முயற்சியும் மேற்கொள்ளப் படவில்லை. என்பது புலனாகிறது, தற்போது ராகுல் காந்தியின் தலைமையில் இதற்கு வாய்ப்பு இருந்திருக்குமா என்ற கேள்விக்கு பதில் , நிச்சயமாக இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

PoK-ஐ மீட்பது என்பது ஒரு தனி நபரின் தலைமைத்துவத்தை மட்டும் சார்ந்தது அல்ல. இது இராணுவ, பொருளாதார, மற்றும் பன்னாட்டு உறவுகளை உள்ளடக்கிய ஒரு பன்முகப் பிரச்சனை. தற்போதைய சூழல் மற்றும் பாஜக அரசின் நிலைப்பாடு மத்திய இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், PoK மக்கள் தாமாக இந்தியாவுடன் இணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறியுள்ளார். இது, தற்போதைய அரசு PoK பிரச்சனையை தீர்க்க பிரச்சனையை கவனமாக கையாளுகிறது.

2025 மே மாதம் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதல் (Operation Sindoor) PoK-இல் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்டது, ஆனால் அது PoK-ஐ முழுமையாக மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை. இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது இப்பிரச்சனையின் சிக்கலையும், இராணுவ நடவடிக்கைகளின் வரம்புகளையும் மட்டுமே.

PoK-ஐ மீட்பது என்பது இராணுவ, இராஜதந்திர, மற்றும் உள்நாட்டு ஆதரவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியைப் பொறுத்தது, மேலும் இரண்டு நாடுகளிலும் ஆணு ஆயுதம் உள்ள நிலையில் இது எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் பெரும் சவாலாக இருக்கும்.

ஆக, இவர்கள் கூறிய உண்மைக்கு மாறான ஆறு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகளில் மீட்க முடியாத PoK-ஐ மீட்பது என்பது ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தாலும், இதை சாதிக்க முடியுமா என்பது நிச்சயமற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories