ராகுலால் POKஐ மீட்க முடியுமா? ஏன் இந்தக் கதை?

jugalbandi rahul yatra - 2026
  • பாலாஜி வெங்கட்ராமன்

காங்கிரஸ் கட்சி 2008-2014 காலகட்டத்தில் ஆறு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகள் நடத்தியதாகக் கூறியுள்ளது. அவர்கள் குறிப்பிடும் ஆறு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகளில், 6 ஜனவரி 2013 அன்று நடந்த ஒரு நிகழ்வுக்கு மட்டுமே சில ஆதாரங்கள் உள்ளன, ஆனால் அது கூட முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. மற்ற ஐந்து நிகழ்வுகளுக்கு (19 ஜூன் 2008, 30 ஆகஸ்ட்-1 செப்டம்பர் 2011, 27-28 ஜூலை 2013, 6 செப்டம்பர் 2013, 14 ஜனவரி 2014) தெளிவான ஆதாரங்கள் இல்லை.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் (MoD) RTI அறிக்கைகள், 2016-க்கு முன்பு இதுபோன்ற சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகள் நடந்ததற்கு ஆதாரம் இல்லை என்று கூறுகின்றன.

பொய்யே உன் பெயர் காங்கிரஸ் என்பது போல இருக்கு,.

இதுல தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) இந்தியாவால் திரும்பப் பெறப்பட்டிருக்கும்” என்று அடிச்சி விடுறார்.

ஆனால், உண்மையில் அது சாத்தியமா என்றால் வரலாற்று பின்னணி பார்த்தால் PoK 1947-ல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது உருவானது. இந்தியாவும் பாகிஸ்தானும் இப்பகுதியை தங்கள் பகுதியாகக் கருதுவதால், இது ஒரு நீண்டகால மோதல் பிரச்சனையாக உள்ளது.

ALSO READ:  இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

இராணுவ மற்றும் அரசியல் சவால்கள்: PoK-ஐ மீட்பது என்பது இராணுவ நடவடிக்கைகள், பன்னாட்டு உறவுகள், மற்றும் உள்நாட்டு அரசியல் ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிக்கலான செயல்முறை. இதற்கு வலுவான தலைமை, துல்லியமான உத்தி, மற்றும் பன்னாட்டு ஆதரவு தேவை. இந்த நிலையில் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் நிலை, மற்றும் அதன் தலைவர்கள் யாரும் வலுவானவர்கள் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

இதில் பாகிஸ்தான் PoK-ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, மேலும் இது சீனாவின் செல்வாக்கு உள்ள பகுதியாகவும் உள்ளது (சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்). இதனால், PoK-ஐ மீட்பது இராணுவ ரீதியாக மட்டுமல்லாமல், பன்னாட்டு அரசியல் ரீதியாகவும் சவாலானது என்பது நிதர்சனம்.

இந்த நிலையில் ராகுல் காந்தி , அவரது தலைமையில் இந்தியா PoK-ஐ மீட்கும் திறன் இருக்குமா என்பது விவாதத்திற்குரியது. மேலே காங்கிரஸ் கட்சி கூறிய உண்மைக்கு மாறான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகளில் அதாவது மன்மோகன் சிங் முந்தைய ஆட்சி காலமான 2004-2014 காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, PoK-ஐ மீட்பதற்கு எந்தவொரு தீவிர முயற்சியும் மேற்கொள்ளப் படவில்லை. என்பது புலனாகிறது, தற்போது ராகுல் காந்தியின் தலைமையில் இதற்கு வாய்ப்பு இருந்திருக்குமா என்ற கேள்விக்கு பதில் , நிச்சயமாக இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

ALSO READ:  அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

PoK-ஐ மீட்பது என்பது ஒரு தனி நபரின் தலைமைத்துவத்தை மட்டும் சார்ந்தது அல்ல. இது இராணுவ, பொருளாதார, மற்றும் பன்னாட்டு உறவுகளை உள்ளடக்கிய ஒரு பன்முகப் பிரச்சனை. தற்போதைய சூழல் மற்றும் பாஜக அரசின் நிலைப்பாடு மத்திய இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், PoK மக்கள் தாமாக இந்தியாவுடன் இணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறியுள்ளார். இது, தற்போதைய அரசு PoK பிரச்சனையை தீர்க்க பிரச்சனையை கவனமாக கையாளுகிறது.

2025 மே மாதம் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதல் (Operation Sindoor) PoK-இல் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்டது, ஆனால் அது PoK-ஐ முழுமையாக மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை. இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது இப்பிரச்சனையின் சிக்கலையும், இராணுவ நடவடிக்கைகளின் வரம்புகளையும் மட்டுமே.

PoK-ஐ மீட்பது என்பது இராணுவ, இராஜதந்திர, மற்றும் உள்நாட்டு ஆதரவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியைப் பொறுத்தது, மேலும் இரண்டு நாடுகளிலும் ஆணு ஆயுதம் உள்ள நிலையில் இது எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் பெரும் சவாலாக இருக்கும்.

ALSO READ:  கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

ஆக, இவர்கள் கூறிய உண்மைக்கு மாறான ஆறு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகளில் மீட்க முடியாத PoK-ஐ மீட்பது என்பது ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தாலும், இதை சாதிக்க முடியுமா என்பது நிச்சயமற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories