சமஸ்கிருதம் செத்துப் போன மொழியா… உதயநிதி?

stalin udhayanidhi - 2026
#image_title
  • முரளி சீதாராமன்

சமஸ்கிருதம் செத்துப் போன மொழியா துணை முதல்வர் உதயநிதி அவர்களே?

தமிழகத்தில் அடிக்கடி சமஸ்கிருதத்துக்கு எதிராக முழங்குவது, எளிய அரசியல் உத்தியாகத் தொடர்கிறது. இது திராவிட மாடல் அடிக்கடி கையில் எடுக்கும் துருப்பிடித்த ஆயுதம்!

சமஸ்கிருதம் நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சொற்களில் – தமிழோடு கலந்தே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது!

நிதி, நீதி, விதி, வீதி, நியாயம், தர்மம், அக்கிரமம், அராஜகம், மனம் (மனஸ்), க்ராமம், நகரம், பந்தம், சம்பந்தம், சம்பத்து, மரியாதை, சன்மானம், பாபம்,

புண்யம், காரணம், விசேஷம், பாக்யவான், பாக்கியம், அதிர்ஷ்டம், துரதிருஷ்டம், திருஷ்டி, பாதம், சிரசாசனம், பாகம், பாத்யதை…

காரியம், பலன், சுபகாரியம், மங்களம், சகுனம், ஸ்தாவர ஜங்கமம் (சொத்து) கீதம், வாசனை, பதவி, (மூன்று) போகம், யோகம், சாந்தி, குணம், கோபம், ரகசியம், சந்தோஷம், துக்கம், ஜனனம், மரணம், ஜன்மம், புனர் ஜன்மம், பூர்வ ஜன்மம்…

பழம் (फल), ரசம், வர்ணம், ஆகாசம், அவகாசம், அவசரம், அற்புதம், அதிகம், ஆதி, இஷ்டம், உற்சாகம், உத்வேகம், உத்யோகம், உதயம், ஏகம், ஏகாந்தம், ஐக்கியம், பஞ்சபூதம், மூலம், மூலாதாரம், பலம், குணம், லாபம், நஷ்டம், பலாபலன், சிந்தனை (சிந்தனா) கற்பனை (கல்பனா), ரௌத்ரம், சாந்தம்,

ஆச்சரியம், உபயோகம், பிரயோகம், பிரயத்தனம், தனம், தானம், லட்சியம், கணிதம், சாஸ்திரம், சரித்திரம், சம்பவம், சாதகம், பாதகம்,

சதுரங்கம், சமர்த்து, சாமர்த்தியம், சேனை, சேனாபதி, உதார குணம், மூர்த்தி, முஹூர்த்தம், மௌனம், மோகம், காமம், கஷ்டம், கவனம், கணம், கோஷ்டி, கோஷம், கோ தானம், பாதம், பங்கஜம், ஸ்தூபம், தீபம், அக்னி, தவம் (தபம்), தாபம், பிரதாபம், புஸ்தகம், போஜனம், விரதம், வியர்த்தம், விஸ்வரூபம், விசேஷம்…

தைரியம், பயம், பீதி, சௌக்கியம், சௌகரியம், சுந்தரம், சுந்தரி, சௌந்தர்யம், சொப்பனம்,

நதி, சமுத்திரம், பூலோகம், லோகம், நட்சத்திரம், சூரியன், சந்திரன், கிரகம்,

வாசம், வசனம், உச்சம், நீசம், மத்தி, மத்யமம், மத்ய, புஷ்பம், பீஜம், விருட்சம்,

புத்தி, ஆலோசனை, அபிப்ராயம், ஆதி, அந்தம், ஜன்மம், புனர் ஜன்மம், தோஷம், தீரம், லட்சணம், உதரம், சிரம், அங்கம்,

உத்தமம், அந்தரங்கம், பகிரங்கம், பிரியம், தாம்பத்யம், சயனம், சாபம், சங்கீதம், குசலம், போஷணம், பட்சணம், பட்சி, பாலகன், நடனம், நாட்டியம், சலனம், நிஸ்சலனம், நிர்வாணம், நேத்ரம், கதி, அதோகதி, ஸ்தானம், சாமான்யம்…

சித்தாந்தம், தத்துவம், கதை (கதா), கவிதா (கவிதை), காவியம், நாடகம், நிதர்சனம், தத்ரூபம், தாட்சண்யம், தனநாசம், நாசம், விருத்தி, அபிவிருத்தி…

தேகம், தேசம், தெய்வம், தேவாலயம், துஷ்ட, ஜந்து, அல்பம், ஆரோக்கியம், அலங்காரம், அவதாரம், அஞ்சனம்,

சரம், சஞ்சலம், சந்தேகம், நிவாரணம், நிர்மூலம், பரிபாலனம், பூர்ணம், போதனை, பரிசோதனை, பரிவர்த்தனம்,

முக்தி, பக்தி, வியாபாரம், வியாபாரி, மோட்சம், விமோசனம், ஸ்வதந்திரம் (சுதந்திரம்), சுயதரிசனம், விஸ்வாசம்,

பூமி, பிரபஞ்சம், மேகம், பூலோகம், சொர்க்கம், நரகம், பாதாளம், பவித்ரம்,

இப்படி நம்மையும் அறியாமல் நாம் பேசும் சமஸ்கிருதச் சொற்கள் ஆயிரக்கணக்கில்!

போதுமா துணை முதல்வர் அவர்களே?

இதெல்லாம் எந்த ஞானமும் – அடடே இதுவும் சமஸ்கிருதம்! – இல்லாத கும்பல்தான் தமிழை அழித்துவிடும் என்று புலம்புகிறார்கள்!

இத்தனை சொற்கள் – இவை உதாரணம்தான் – (உதாரணம் – இதுவும் சமஸ்கிருதம்தான்!) கலந்ததால் தமிழ் என்ன அழிந்தா போயிற்று?

அதே சமயம்,

“என் டாட்டரை ஸ்கூல் என்ட்ரன்ஸ் கிட்ட டூவீலர்ல கொண்டு ட்ராப் பண்ணிட்டேன்!”…

“என் ஹஸ்பெண்ட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என்ட்ரன்ஸ்ல டென் மினிட்ஸ் வெயிட் பண்ணினால் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்னு மெஸேஜ் கொடுத்திருக்காரு!”

– என்பது மாதிரி ‘தங்கிலீஷை’ வேண்டுமென்றே ஊக்குவிக்கிறார்கள்!

இந்த “தங்கிலீஷை” பிரபலப்படுத்தியது யார் தெரியுமா துணை முதல்வர் அவர்களே?

உங்கள் குடும்பத் தொலைக்காட்சியான “சன் டிவி” தொகுப்பாளினிகள்தான்!

“ஹாய் வியூவர்ஸ்! ப்ரோக்ராம் பார்த்து என்ஜாய் பண்ணீங்களா? உங்க ஃபீட்பேக்கை ….. நம்பருக்கு அனுப்பி ஷேர் பண்ணுங்க பை..”- என்ற ரீதியில் பேசுவதை நடைமுறையாக்கி தமிழை சாகடிப்பதற்கு முதல் விதை போட்டதே உங்கள் குடும்பத் தொலைக்காட்சி தொகுப்பாளினிகள்தான்!

நமது குழந்தைகள் தமிழில் எழுதாமல், ஆங்கில எழுத்துகளைக் கொண்டு டிரான்ஸ்லிட்டேஷன் (TRANSLITERATION) முறையில் எழுதத் தொடங்கி இருக்கிறார்கள்.

தமிழ் அழிவதும் – அழியப் போவதும்…

சமஸ்கிருதத்தால் அல்ல,

ஆங்கிலத்தால்!

எனவே சமஸ்கிருதத்தை “செத்த மொழி” என்று உண்மை நிலவரம் தெரியாமல் பேசுவதை விட்டு விட்டு – ஆங்கிலத்திடம் இருந்து தமிழைக் காப்பாற்ற புறப்படுங்கள் துணை முதல்வர் அவர்களே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories