
சபரிமலையில் வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க விரைவு அதிரடிப் படை வீரர்கள் (RAF) வீரர்கள் சனிக்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை துவங்கி நடந்து வரும் நிலையில் இங்கு வரும் பக்தர்களுக்கு கேரளா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் முந்தைய ஆண்டுகளைப் போலவே, சபரிமலையில் விரைவு அதிரடிப் படை (RAF) குழு பாதுகாப்பை வழங்கியுள்ளது.
கேரளா கொல்லத்தைச் சேர்ந்த துணைத் தளபதி பிஜு ராம் தலைமையிலான 140 பேர் கொண்ட குழு சனிக்கிழமை சன்னிதானத்தில் பொறுப்பேற்றது. மத்திய படையான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கோயம்புத்தூர் அடிப்படை முகாமிலிருந்து வந்த குழு சபரிமலைக்கு வந்தது.
அவர்கள் தற்போது சன்னிதானம் மற்றும் மரக்கூட்டத்தில் பணியாற்றுகின்றனர். அவர்கள் மூன்று ஷிப்டுகளில் பணிபுரிகின்றனர். ஒரு ஷிப்டில் 32 பேர் இருப்பார்கள். கூடுதலாக, அவசரநிலைகளைச் சமாளிக்க 10 பேர் கொண்ட விரைவுப் பதிலளிப்பு குழு 24 மணி நேரமும் பணியில் இருக்கும்.
மண்டல மகரவிளக்கு சீசன் முடியும் வரை இந்தக் குழு சபரிமலையில் இருக்கும். பாதுகாப்பு மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதே அவர்களின் முக்கிய பொறுப்பு என்றும், காவல்துறையுடன் இணைந்து அவர்கள் செயல்படுவார்கள் என்றும் துணைத் தளபதி கூறினார்.தற்போது சபரிமலையில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய மேலும் கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டுள்ள தால் சிரமமின்றி தரிசனம் செய்து வருகிறார்கள்.





