கச்சா எண்ணெய் விலைக் குறைப்பு: பின்னணி அரசியலும் நடப்பு நிலையும்!

கச்சா எண்ணெய் உற்பத்தி: அமெரிக்கா, ஈரானை தோற்கடித்தது இப்படிதான்!

கச்சா எண்ணெய்  விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே.. அல்லது குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இது பெட்ரோல் விலை குறையக்கூடும் என்ற நமக்கான நம்பிக்கையை அதிகரித்துக் கொண்டே போகிறது.

ஆய்வாளர்கள் சொல்வது… கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை தற்போது 30 டாலர்கள். அது மேலும் 10 டாலர் வரை குறைய வாய்ப்புள்ளது. அப்படியென்றால் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால் ஒரு லிட்டர் இலவசம் வருமோ… என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் ஓடுவது இது நிஜம்.

ஆனால், நிஜத்தின் நிஜம்…?

கச்சா எண்ணெய் விலை சென்ற வருடத்தின் விலையைவிட 50% குறைந்து, கடந்த பதினோரு ஆண்டுகளில் இல்லாத ஒரு குறைந்த விலையில் தற்போது விற்க்கப்படுகிறது. ஆனால், கச்சாவிலிருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, முறையே 13% மற்றும் 23% மட்டுமே குறைந்துள்ளது.

இது எதை தெளியப்படுத்துகிறது?

கச்சா எண்ணெய்  விலை குறைப்பின் விளைவு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் முழுவதுமாக மாற்றப்படவில்லை. ஒரு பேரல் 120 டாலராக கச்சா எண்ணெய் விலை இருந்தபோது, பெட்ரோல் ரூ.82 வரை விலை ஏற்றப்பட்டது. தற்போதைய கச்சா எண்ணெய்  விலை 30 டாலர். ஆனால் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.59.77. ஆக நாம் வாங்கும் பெட்ரோல் விலையில் குறைப்பு முழு வீச்சில் இல்லை.

இப்படி நடப்பது சாத்தியமில்லை? மூலப்பொருள் விலை குறைக்கப்பட்டால், அதில் இருந்து தயாரிக்கப்படும் துணை பொருளின் (by product), விலையும் இறங்கத்தானே வேண்டும். இப்படி நடக்காமல் போனதற்கு என்ன காரணம்?

அரசாங்கம், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விகிதம் ஏற்றப்பட்டு, மூல விலை குறைந்தாலும், அதில் போடப்படும் வரிகளின் அளவால், நமக்கு கிடைக்கக்கூடிய விலை குறைப்பு கிடைக்காமல் போய்விட்டது. வரி விகிதம் டீசலுக்கு 18 சதவிகிதத்தில் இருந்து 38 சதவிகிதமாகவும், பெட்ரோல் மேல் 30 சதவிகிதத்தில் இருந்து 48 சதவிகிதமாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆக, இந்த வகையான பெட்ரோல் விலை நிர்ணயிப்பு, அரசாங்கத்தின் கையில் ஒரு கருவி. இதை வைத்துப் பார்க்கும்போது, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் குறிப்பிடத்தக்க விலை குறைப்பு இருக்காது என்றே தோன்றுகிறது. 10 டாலர் என்றே கச்சா எண்ணெய்  விலை இறங்கி வந்தாலும், அரசாங்கம் வரியை உயர்த்தி விலையை தற்போதுள்ள நிலையிலேயே விற்கக்கூடும்.

சரி, எதனால் கச்சாஎண்ணெய்   விலையில் இந்த சரிவு? இந்தக் காரணங்களை நாம் ஆராய்ந்தால், விலை குறைப்பு வருவதற்கு வழியில்லை என்பது புரிந்துவிடும்.

முதலில், அமெரிக்க நாட்டின் ஷேல் ஆயில் தயாரிப்பு. ஷேல் ஆயில் என்பது என்ன? ஆயில் ஷேல் கற்களிலிருந்து தயாரிக்கப்படும் செயற்கை கச்சா தான் அது. இறக்குமதியில் சில வருடங்கள் முன் வரை முதல் இடத்தில் நின்ற அமெரிக்கா, இன்று ஈரானையும் தோற்கடித்து முதலாவது கச்சா எண்ணெய்  ஏற்றுமதியாளராக மாறிவிட்டது. தற்போது ஏற்பட்டுள்ள Shale Oil boom அமெரிக்காவின் உற்பத்தி, சவுதி அரேபியாவைவிட அதிகமாக செய்ய வைத்துள்ளது. தற்போதைய கையிருப்பு இன்னும் இரண்டு வருடத்திற்கு தாராளமாக தாக்கு பிடிக்க முடியும்.

ஆனால், OPEC (Organization for Petroleum Exporting countries) இதை முறியடிக்கச் செய்வதுதான் இந்த கச்சா விலை குறைப்பு. அடி மாட்டு விலைக்கு ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, வெனிசூலா, இந்த நாடுகளின் கூட்டமைப்பு OPEC, கச்சா விலையை குறைத்தால் அதைவிடக் குறைந்த விலையில் விற்க முடியாமல் தற்போதுள்ள Shale Oil கம்பெனிகள் தங்கள் கடையை மூடிவிடும் என்ற கணிப்பு. முதலிலேயே சொன்னபடி Shale Oil இயற்கை எரிபொருள் அல்ல. அதைத் தயாரிப்பதற்கே 50 டாலர் வரை செலவாகும். எனில், 30 டாலருக்கு ஒரு பாரலை எப்படி விற்க முடியும்? ஆக OPEC நினைத்தபடி, அமெரிக்கா தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்ட பின், கச்சா விலை முன் போல் ஏற்றப்பட்டு விடும்.

இரண்டாவது, சீனாவின் பொருளாதார சரிவு. சீனா மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், தேவை மற்றும் இருப்பில் பொருத்தமில்லாமை உண்டாகிவிட்டது. கச்சா தேவைக்கு மேல் கிடைக்கிறது. வாங்க ஆளில்லாமல் விலை சரிகிறது. சவுதி அரேபியா தன் உற்பத்தியைக் குறைக்கலாம். ஆனால், செய்ய வில்லை. அமெரிக்காவை வெளியேற்றும் முயற்சியில் இந்த முடிவு. இதனால் சவுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. 750 பில்லியன் டாலர், ரிசர்வில் உள்ளது. அதைத்தன் குறுகிய கால நிதித்தேவைக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஆக, இந்த விலை குறைப்பு  அமெரிக்காவை நோக்கி என்பதால் எதிர்மறையான முடிவுகள் எடுக்கப்படலாம்.

மூன்றாவது, டாலர் இண்டெக்ஸ், இது கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் இல்லாத உயரத்தில் தற்போது நிற்கிறது. டாலர் ஏற்றம் எப்போதும் கச்சா விலை இறக்கத்தில் தான் முடியும். ஆனால், 50 டாலருக்கு கீழ் விற்க முடியாமல் Shale Oil கம்பெனிகள் மஞ்சள் கடுதாசி கொடுக்க ஆரம்பித்துவிட்டால் டாலர், தன் ஏறு முகத்தைவிட்டு இறங்கு முகமாக மாறிவிடும். இப்படி நடந்தால் கச்சா விலை ஏற ஆரம்பித்துவிடும்.

நான்காவது, நம் அரசாங்கத்தின் கொள்கை. கச்சா விலை ஏற்றத்தின்போது அரசாங்கம் அதன் விலையை ஒரு அளவில் வைக்க நிறைய மானியங்கள் கொடுத்தது. இந்த மானியங்களுக்கான பணம் எங்கிருந்து வந்தது? கடன் மூலமாகத்தான். அதனால், இந்த விலை குறைப்பை ஈடு செய்யும் விதத்தில் வரிகள் ஏற்றப்படுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் அந்தக் கடனை அடைக்க உபயோகப்படுத்தப்படுகிறது. இந்தக் காரணத்தினால் கடன் முழுவதும் அடைக்கப்படும் வரை, கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும், அதிக வரி வசூலிக்கப்பட்டு நமக்கு கொடுக்கப்படும் விலையில் அதிக மாற்றம் இருக்காது.

ஐந்தாவதாக, அரசாங்கம் அதிக வரி என்று போட்டு அதில் கிடைக்கும் வருமானம் ஒரு வித buffer ஆக உபயோகிக்கிறது. நாளை ஏதோ காரணங்களினால் கச்சா விலை அதிகமானால் விலையை ஏற்றாமல், கைவசம் உள்ள இந்த buffer-ஐ மானியமாக கொடுக்கலாம்.

கடைசியாக, விலை குறைக்காமல் இருக்க முக்கிய காரணம் வாகனங்களின் உபயோகம் அதிகமாகாமல் தடுப்பதற்காகவே. தற்போது உள்ள மாசு நிலைமையை எல்லோரும் அறிந்ததே. பெட்ரோல் விலை குறைந்தால் வாகனங்கள் மானாவாரியாக விற்கப்படும், வாங்கப்படும், ஓட்டப்படும். இதைத்தடுக்க பெட்ரோல், டீசல் விலை குறைப்பை அரசாங்கம் கொண்டு வராது.

ஆக, மேற்படி காரணங்களினால் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம், விலை குறைப்பு இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது!

கட்டுரை:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories