December 5, 2025, 7:03 PM
26.7 C
Chennai

யாஷிகா ஆனந்தின் கார் மோதி இளைஞர் படுகாயம்!

Yashika Anand - 2025

சனிக்கிழமை நள்ளிரவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது மோதியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

2016ம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் பிரபலம் ஆனார்.

அதன்பின்னர் தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் பிரபலம் ஆனார். தற்போது இவன் தான் உத்தமன், ராஜா பீமா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் நண்பர்களுடன் சனிக்கிழமை நள்ளிரவில் சொகுசுகாரில் சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் வந்து கொண்டிருந்தார். நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையோரத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் உணவை டெலிவரி செய்யும் ஊழியரான பரத் என்பவர் மீது மோதியதுடன் அங்கிருந்த கடை ஒன்றின் மீதும் மோதியது.

yashika - 2025

இதில் ஊழியர் பரத் படுகாயம் அடைந்தார். அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .இதையடுத்து கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையின்ர வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள்.

இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்தும் காரில் இருந்ததாகவும், விபத்து நிகழ்ந்தவுடன் அங்கிருந்து அவர் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் காரில் இருந்தவர்கள் மது அருந்தியிருந்ததாகவும் சொல்கிறார்கள்.காரை ஓட்டிவந்தது யாஷிகா ஆனந்த்தா அல்லது வேறு யார் என்பது குறித்து உறுதியாக தகவல்கள் வெளியாகவில்லை. இதேபோல் யாஷிகா மதுஅருந்தி இருந்தாரா என்பது குறித்த தகவலும் இதுவரை தெரியவரவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories