December 5, 2025, 8:40 PM
26.7 C
Chennai

பிரதமருக்காக போயிங் விமானம்! வசதியும் பாதுகாப்பும் உள்ளடங்கியது!

flight 1 - 2025

இந்தியப் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு போன்ற மிக முக்கிய தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக, போயிங் B747-400 ஜம்போ ரக விமானங்கள்தான் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

20 வருடங்களாக இந்தியத் தலைவர்கள் இந்த விமானங்களையே பயன்படுத்தி வருகின்றனர். நன்கு பயிற்சி பெற்ற விமானிகள் மட்டுமே இந்த விமானங்களை இயக்க முடியும். இதன் பராமரிப்புகளை ஏர் இந்தியா நிறுவனம் கவனித்து வருகிறது. பிரதமர் போன்ற தலைவர்களின் பயணங்கள் முடிந்த பிறகு, அந்த விமானங்கள் வணிக ரீதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த 747 ரக விமானங்களில், அமெரிக்கா போன்ற நீண்ட தூர நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் போதுமான எரிபொருள் நிரப்ப முடியாது, அதனால் வளைகுடா நாடுகளில் நிறுத்தி எரிபொருள் நிரப்பி விட்டு மீண்டும் அங்கிருந்து பயணத்தைத் தொடரவேண்டும் அதனால் பிரதமர், குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு கேள்விக்குறியான ஒன்றாகயுள்ளது. மேலும் நேரமும் விரயம் ஆகிறது.

இவற்றைத் தடுக்க அதிநவீன வசதிகளுடன் கூடிய போயிங் 777 ரக விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்காக 2018-ம் ஆண்டு இரண்டு விமானங்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டன. அந்த விமானங்கள் தற்போது அமெரிக்காவின் டல்லாஸில் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் ஏர் ஃபோர்ஸ் ஒன், அதிநவீன விமானங்களும் இங்குதான் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதே இடத்தில் தற்போது இந்தியப் பிரதமரின் புதிய விமான கட்டமைப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றது.

pm - 2025

போயிங் 777 ரக விமானங்களில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றால் எரிபொருள் நிரப்புவதற்காக வேறு இடங்களில் நிறுத்த வேண்டிய அவசியமில்லை. அந்த அளவுக்கு இதன் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இதில், ஆலோசனை கூடம், தகவல் தொடர்புகளுக்காகப் பெரிய இடம், அதிநவீன பாதுகாப்பு அறைகள், கண்காணிப்பு ரேடார்கள், ஏவுகணை தாக்குதலைக் கண்டறிந்து அதை முறியடிக்கும் வசதி போன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் ஒரு நட்சத்திர விடுதி அளவுக்கு விமானம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய விமானத்தின் பராமரிப்பு பணிகளையும் ஏர் இந்தியா நிறுவனம் தான் மேற்கொள்ளவுள்ளது. தற்போதைக்கு இந்த விமானத்தைப் பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் போன்றவர்கள் மட்டுமே பயன்படுத்தவுள்ளனர்.

மேலும், அவர்கள் பயன்படுத்திய பிறகு இது வணிக ரீதியிலான சேவைக்கு பயன்படுத்தப்படாது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விமானங்களின் மதிப்பு சுமார் 190 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் பல லட்சம் கோடி ரூபாய் ) என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரதமரின் அதிநவீன விமானங்கள் வரும் 2020- ம் ஆண்டுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories