February 10, 2025, 9:07 AM
27.3 C
Chennai

பிரதமருக்காக போயிங் விமானம்! வசதியும் பாதுகாப்பும் உள்ளடங்கியது!

இந்தியப் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு போன்ற மிக முக்கிய தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக, போயிங் B747-400 ஜம்போ ரக விமானங்கள்தான் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

20 வருடங்களாக இந்தியத் தலைவர்கள் இந்த விமானங்களையே பயன்படுத்தி வருகின்றனர். நன்கு பயிற்சி பெற்ற விமானிகள் மட்டுமே இந்த விமானங்களை இயக்க முடியும். இதன் பராமரிப்புகளை ஏர் இந்தியா நிறுவனம் கவனித்து வருகிறது. பிரதமர் போன்ற தலைவர்களின் பயணங்கள் முடிந்த பிறகு, அந்த விமானங்கள் வணிக ரீதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த 747 ரக விமானங்களில், அமெரிக்கா போன்ற நீண்ட தூர நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் போதுமான எரிபொருள் நிரப்ப முடியாது, அதனால் வளைகுடா நாடுகளில் நிறுத்தி எரிபொருள் நிரப்பி விட்டு மீண்டும் அங்கிருந்து பயணத்தைத் தொடரவேண்டும் அதனால் பிரதமர், குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு கேள்விக்குறியான ஒன்றாகயுள்ளது. மேலும் நேரமும் விரயம் ஆகிறது.

இவற்றைத் தடுக்க அதிநவீன வசதிகளுடன் கூடிய போயிங் 777 ரக விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்காக 2018-ம் ஆண்டு இரண்டு விமானங்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டன. அந்த விமானங்கள் தற்போது அமெரிக்காவின் டல்லாஸில் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் ஏர் ஃபோர்ஸ் ஒன், அதிநவீன விமானங்களும் இங்குதான் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதே இடத்தில் தற்போது இந்தியப் பிரதமரின் புதிய விமான கட்டமைப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றது.

போயிங் 777 ரக விமானங்களில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றால் எரிபொருள் நிரப்புவதற்காக வேறு இடங்களில் நிறுத்த வேண்டிய அவசியமில்லை. அந்த அளவுக்கு இதன் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இதில், ஆலோசனை கூடம், தகவல் தொடர்புகளுக்காகப் பெரிய இடம், அதிநவீன பாதுகாப்பு அறைகள், கண்காணிப்பு ரேடார்கள், ஏவுகணை தாக்குதலைக் கண்டறிந்து அதை முறியடிக்கும் வசதி போன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் ஒரு நட்சத்திர விடுதி அளவுக்கு விமானம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய விமானத்தின் பராமரிப்பு பணிகளையும் ஏர் இந்தியா நிறுவனம் தான் மேற்கொள்ளவுள்ளது. தற்போதைக்கு இந்த விமானத்தைப் பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் போன்றவர்கள் மட்டுமே பயன்படுத்தவுள்ளனர்.

மேலும், அவர்கள் பயன்படுத்திய பிறகு இது வணிக ரீதியிலான சேவைக்கு பயன்படுத்தப்படாது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விமானங்களின் மதிப்பு சுமார் 190 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் பல லட்சம் கோடி ரூபாய் ) என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரதமரின் அதிநவீன விமானங்கள் வரும் 2020- ம் ஆண்டுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Ind Vs Eng ODI: ரோஹித் சர்மா அதிரடியில் இந்தியா வெற்றி!

ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா!

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா

பஞ்சாங்கம் பிப்.09 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அங்கீகாரம் பெறாமல் போலி ஹால் டிக்கெட்? : மாணவிகள் தர்ணா!

மேலும் கட்டிய பணத்தை திரும்ப வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Topics

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Ind Vs Eng ODI: ரோஹித் சர்மா அதிரடியில் இந்தியா வெற்றி!

ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா!

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா

பஞ்சாங்கம் பிப்.09 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அங்கீகாரம் பெறாமல் போலி ஹால் டிக்கெட்? : மாணவிகள் தர்ணா!

மேலும் கட்டிய பணத்தை திரும்ப வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா!

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பூக்குழி திருவிழா!

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories