வீட்டுக்கு திரும்பி வந்த மகன்! மகிழ்ச்சியில் விஜய் குடும்பம்!

Published:

vijay-and-his-son
  • அப்பாடா…! பல மாதங்களுக்குப் பிறகு ஹீரோ விஜய்யின் மகன் ஜாஸோன் சஞ்சய் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
  • அதனால் ஹீரோ குடும்பத்தில் திருவிழாக் கோலம்.

பல மாதங்களுக்கு பிறகு விஜய்யின் மகன் ஜாஸோன் சஞ்சய் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்த தோடு சிறியதாக ஒரு ஃபங்ஷன் கூட கொண்டாடினார்கள்.

மேல்படிப்புக்காக கனடாவுக்குச் சென்ற ஜாஸோன் சஞ்சய் கொரோனா பரவலால் இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டார். எங்கும் லாக்டௌன் விதித்ததால் வெளிநாடுகளிலிருந்து விமானங்களை நிறுத்தி வைத்திருந்ததால் அங்கேயே இருக்கும்படி ஆயிற்று. அதனால் விஜய் அவரைப் பற்றிய கவலையில் இருந்ததாக அப்போது செய்திகள் வந்தன.

லாக்டௌன் தளர்த்தியதில் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் அண்மையில் நம் நாட்டுக்கு திரும்பியபோது ஜாஸோன் கூட வந்தார். ஆனால் அரசாங்க நிபந்தனைகளின்படி 14 நாட்கள் ஒரு ஹோட்டலில் குவாரன்டைனில் இருந்தார். அது பூர்த்தியானவுடன் ஜாஸோன் அண்மையில் வீட்டுக்கு திரும்பி வந்தார். இதனால் விஜய் குடும்பம் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img