தஞ்சாவூர்ல எல்லோருக்கும் 2 பெண்டாட்டிதான்: அவமதித்த வனிதாவின் மீது புகார்!

28a2cf9f2bf9d06cd5f39a37d05380ac - 2026

பெண்களை, அவமதிக்கும் நோக்கத்தில் பேசியுள்ள வனிதா மன்னிப்பு கூறவேண்டும்

நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் அணைத்து ஊரடங்களிலும் அதிகம் பேசப்படும் ஒரு ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. உலகில் ஆயிரம் விஷயம் நடந்து வருகிறது, கொரோனாவால் 100 க்கணக்கான உயிர்கள் போகிறது, அதையெல்லாம் பற்றி பேசாதவர்கள் இப்போது வனிதாவின் பிரச்னையை ஆன்லைன் மூலம் கூடி விவாதித்து வருகிறார்கள்.

மேலும் வனிதாவும், முறையாக விவாகரத்து வாங்காத ஒருவரை திருமணம் செய்தது தவறு என்று கூட உணராமல் பல்வேறு காரணம் கூறி வருகிறார்.

குறிப்பாக இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தஞ்சாவூர் மக்களை விமர்சிக்கும் விதமாக, சர்ச்சையாக பேசினார்.

தன்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூர் தான் என்றும், அங்கு இரண்டு மனைவிகள் இல்லாத வீடே கிடையாது. தன்னுடைய தந்தைக்கு கூட இரண்டு மனைவிகள் தான் என கூறினார்.

அதே போல், இதனை அங்கு இருப்பவர்களிடம் கூறினால் இதெல்லாம் ஒரு விஷயமா என கேட்பார்கள். இதில் என்ன தவறு உள்ளது என தன்னுடைய தவறை மறைத்து, தன்னை நியாயப்படுத்தினார்.

இவரின் இந்த கருத்துக்கு தான், பிக்பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி கூட தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம், வனிதாவுக்கே எதிராக திரும்பியுள்ளது.

வனிதா தஞ்சாவூர் மக்களை பற்றி அவதூறாக பேசியுள்ளதாக கூறி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பிஜேபி கட்சியை சேர்ந்த சிலர் வனிதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.

அதே போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களை, அவமதிக்கும் நோக்கத்தில் பேசியுள்ள வனிதா மன்னிப்பு கூறவேண்டும் என்றும், இந்த கருத்தை அவர் திரும்பபெறவில்லை என்றால் அவரை எதிர்த்து, மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories