உனக்கு பேட்டிலாம் கொடுக்க முடியாது.. பேட்டியிலிருந்து வெளியேறிய இரண்டாம்குத்து இயக்குனர்….

Published:

231d45176b4d82918dff25b83ccc52be - 2026

கௌதம் கார்த்திக், யாஷிகா சோப்ரா உள்ளிட்ட சிலர் நடித்து 2018ம் ஆண்டு  வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. இப்படத்தை சந்தோஷ் குமார் இயக்கியிருந்தார். இப்படம் முழுவதும் ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால், இளசுகள் கூட்டம் கூட்டமாக இப்படத்தை பார்த்தால் இப்படம் வெற்றி அடைந்தது.

தற்போது அதன் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சந்தோஷ் குமார் மற்றும் டேனியல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான போஸ்டர் மற்றும் டீசர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி கடும் கண்டனத்திற்கு உள்ளானது. மேலும், இப்படத்தில் இடம் பெற்ற ‘பூம் பூம்’ பாடல் வரிகள் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.இந்த பாடலில் ஏகப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றுள்ளது. இப்படம் தீபாவளி விருந்தாக தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் சந்தோஷ்குமார் ஒரு இணையதளத்திற்கு பேட்டி கொடுக்க சென்ற போது, அந்த பெண் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வியால் கோபமடைந்து எழுந்து சென்றுவிடும் வீடியோவை அந்த பத்திரிக்கையாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 
Source: Vellithirai News

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img