அரசுத் திட்டங்களை விமர்சித்த ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்குப் பதிவு!

Published:

ar murugadoss - 2026

சென்னை: சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சித்ததற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னையில் 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விஜய் நடித்த சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் பலர் இதற்காக வரிந்து கட்டிக் கொண்டு விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நெருக்குதல் எழுந்த நிலையில், இயக்குனர் முருகதாஸ் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

இதனிடையே, சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் கொடுத்த புகார் மனுவின் கீழ் முருகதாஸ் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img