கொஞ்சம் அவகாசம் கொடுத்தாலும் மிச்சமிருக்கற சிலைங்களையும் கடத்திடுவீங்களே! ‘குட்டு’ வைத்த நீதிமன்றம்!

Madras High Court in Chennai - 2026

சென்னை: கோயில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் கட்ட 2021 வரை அவகாசம் அளிக்க முடியாது என்றும்,  2021 ஆம் ஆண்டு வரை அவகாசம் தந்தால் எஞ்சியுள்ள சிலைகளும் திருடப்படும் என்றும், காவல்துறையுடன் ஆலோசித்து பாதுகாப்பு அறைகளை விரைவாக கட்டி முடிப்பது பற்றி அறிக்கை வேண்டும் என்றும் சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் அரசுக்கு ‘குட்டு’ வைத்தார்.

சிலைக் கடத்தல் வழக்கில், தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சிலைகள் கடத்தப்படுவதை தடுக்க கோயில்களில் பாதுகாப்பு அறை அமைக்கப்படுவது தொடர்பான வழக்கில், தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது. அதில், கோயில்களில் 3,000 பாதுகாப்பு அறைகள் அமைக்க வேண்டியுள்ளது. 2021க்குள் பாதுகாப்பு அறை அமைக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இதற்கு அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், கோயில்களில் சிலை பாதுகாப்பு அறை அமைக்க 2021 வரை அவகாசம் அளிக்க முடியாது. 100 அடி கொண்ட பாதுகாப்பு அறை அமைக்க 2021 வரை அவகாசம் தேவையா? நீண்ட காலம் அவகாசம் எடுத்துக் கொண்டால், சிலை கடத்தப்படுவது தொடரும். பாதுகாப்பு அறை அமைப்பதில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது. இது தொடர்ந்தால் தலைமைச் செயலரை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட நேரிடும் என்று கூறி, இந்த வழக்கை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories