The vaccine war: விமரிசனம்!

the vaccine war - 2026
#image_title

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டிருந்தது உலகம்.

தடுப்பூசி தயாரிக்க வேண்டும் எனப் பிரயத்தனப்பட்ட நேரத்தில் ஐந்து நாடுகள் மட்டுமே வைரஸைப் பிரித்தெடுத்தெடுப்பதில் வெற்றி கண்டு தடுப்பூசிகள் தயாரித்தன. நம் பாரதமும் அதில் ஒன்று.

ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய உள்ள வெளி நாட்டு மருந்துகளை நம் நாட்டில் சந்தைப்படுத்த, குறிப்பாக pfizer-Moderna ஊடகங்களைக் கைகொண்டு நம் நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி பலவீனமானது, தடுப்புச்சக்தி குறைந்தது என்றும் தவறான செய்திகளைப் பரப்பி பொதுமக்களிடையே பீதியை உண்டாக்கியது.

சில அரசியல் கட்சிகளும், பிரபலங்களும் இதற்கு இரையானதுதான் சோகம். ஆனால் மனவுறுதியுடன் போராடி, உலக சுகாதார நிறுவனத்தை நம் தடுப்பூசியை ஏற்க வைத்ததுதான் ICMR மற்றும் நம் அரசின் வலிமையும் வெற்றியும்.

இறுதியில் நம் தயாரிப்பு வலிமையானதும், பின்விளைவுகள் மிகச் சொற்பமானது என்றும் அதற்கும் மேலாக, பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததும்தான் உச்சம்.
இதை இப்படத்தில் அழகாக படிப்படியாக படமாக்கி நமக்குப் படைத்த படக்குழுவைப் பாராட்டியே ஆக வேண்டும்.

தகுந்த உற்சாகமும் வாய்ப்பும் அளிக்கப்பட்டால் நம் நாட்டு விஞ்ஞானிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல; மிஞ்சியவர்கள் என நிரூபித்தது தடுப்பூசியும், பின்னர் இஸ்ரோவின் சந்திராயன் வெற்றியும்.

கொரோனா பெருந்தொற்றின் விளைவுகளை எப்படி மருத்துவ உலகம் எதிர்கொண்டு தியாகங்கள் பல புரிந்து நாட்டு மக்களைக் காப்பாற்றியதோ, அதே அளவு தடுப்பூசி தயாரிக்க நம் நாட்டு விஞ்ஞானிகள் மிகக்குறைந்த கால அவகாசத்தில் அசாத்திய அர்ப்பணிப்பும் தியாகமும் செய்து வெற்றி பெற்ற வரலாற்றை விளக்கும் இப்படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்கள் பாத்திரத்தின் தன்மை உணர்ந்து சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்.

சற்றே பிசகினாலும் அரசியல் சாயம் பூசப்படும் அபாயம் இருந்தும்,அதில் மாட்டிக் கொள்ளாமல் விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய படக்குழுவினருக்கும், நடிகர்களுக்கும் பாராட்டுகள்.

நம் தேசத்தின் மீது மேலும் ஒருபடி பற்றை இறுக்கும் இப்படத்தை நம் தேசத்தை நேசிப்போர் அனைவரும், குறிப்பாக இளைய சமுதாயம் அவசியம் காண வேண்டும். ஜெய்ஹிந்த்! வந்தேமாதரம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories