மாம்பழ சங்கம்
இன்று 237 வது
கிறிஸ்தவ தோத்திர பண்டிகை
என்னது மாம்பழ சங்கம் கிறிஸ்தவ தோத்திர பண்டிகையா ? என ஆச்சர்யமா இருக்கா
?
ஆமாங்க திருநெல்வேலி டயோசீசனில் நடக்கும் பண்டிகை இது ?
வாடிகனில் போய் இதை கேட்டால்
வாட் மாம்பழம் வாட் தோத்திரம் என்பார் போப்பாண்டவர்
பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி அருகிலுள்ள நூற்றாண்டு மண்டபத்தில்
நடைபெறும்
அந்த பகுதி முழுவதும் பிச்சைகாரர்கள் கூட்டமாக. (நெசமா தாங்க) ஜே ஜே என
இருக்கும்
கிறிஸ்தவ பள்ளிகளுக்கு விடுமுறை
237 வது ஆண்டு பண்டிகை
ஆணி மாதம் கடைசி செவ்வாய் மாலை துவங்கி மறுநாள் புதன்கிழமை நிறைவு பெறும்
என்னப்பா கிறிஸ்து தோன்றி கிறிஸ்தவ விழாக்கள் தோன்றி 2000 வருஷமாச்சே
இது மட்டும் என்ன 237 வருஷம் என கேட்கிறீர்களா
அமெரிக்க , ஐரோப்பா போன்ற கிறிஸ்தவ நாடுகளில் தெரியாத விழா
அவ்வளவு ஏன் மதுரை சென்னை நாகபட்டினம் வேளாங்கண்ணியில் கூட நடைபெறாத விழா
திருநெல்வேலியில் மட்டும் ஏன் ?
அதுவும் தமிழ் மாதங்களை புறந்தள்ளி கிறிஸ்தவ ஆங்கில தேதிகளில் இந்துக்களே
பிறந்தநாள் கொண்டாடும் நிலையில்
ஆணி மாதம் கடைசி செவ்வாய் நாளை கணக்கிட்டு கிறிஸ்தவ விழா வா? என ஆச்சரியமா
இருக்கா ?
இந்த பண்டிகையின் நோக்கம் என்ன?
உலங்கெங்கிலும் கிறிஸ்தவத்திற்கும் இந்த பண்டிகைக்கும் என்ன தொடர்பு?
பைபிளில் மாம்பழசங்கம் பற்றி எங்குள்ளது
என கிறிஸ்தவர்களிடம் கேளுங்கள்
தெரியாது என்பர்.
தெரிந்தாலும் விழா பிண்ணனியை சொல்ல மாட்டார்கள்
இந்த விழாவின் பிண்ணணி தெரிந்தால் இன்னும் ஆச்சரியத்தில் வாயடைத்து போவீர்கள்.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் (மூன்று சிறு ஆறுகள் சங்கமிக்கும்)
தாமிரபரணி கரையில் அமைந்துள்ள கோவில்
அருள்மிகு முத்துமாலையம்மன் கோவில்
இம்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இக்கோவில் கொடை விழா மிகவும் சிறப்பு
வாய்ந்தது
அனைத்து சமுதாயத்தினரும் வழிபடும் கோவில் என்றாலும் கூட
இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட திருக்கோவில் ஆகும்.
அவர்கள் பல்லாண்டுகளாக கொடை விழாவை சிறப்பாக நடத்துகின்றனர்.
(தற்போது அதில் அறமில்லா நிலைய துறை தலையிட்டு கெடுபிடி செய்து வருதும் இந்து
இயக்கங்கள் போராடி வருவது ஒரு பக்கம்)
இந்த கொடைவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நெல்லை மாவட்டத்தின் பல்வேறு
பகுதிகளில் உள்ள இந்துக்கள் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள் மாட்டு
வண்டியிலும் பாதயாத்திரையாகவும் தற்காலங்களில் ஆட்டோவிலும் வேணிலும்
குடும்பத்தோடு வந்து கிடாய் வெட்டி பொங்கலிட்டு சாப்பிட்டு மிதமுள்ள கறியை
வண்டியின் உச்சியில் காய வைத்து தொங்கவிட்டு மறுநாள் புதன்கிழமை மதியத்திற்கு
மேல் ஊருக்கு திரும்புவார்கள்.
இந்த கொடை விழா நடைபெறுவது ஆனி கடைசி செவ்வாய்க்கிழமை
நெல்லை மாவட்ட நாடார் சமுகத்தினர் பலர் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்ட
பின்னரும் பாரம்பரியமான இந்த பழக்கத்திலிருந்து மாறாமல் முத்துமாலையம்மன்
கோவில் கொடைக்கு சென்று வழிபட்டு வந்தனர்.
இதை தடுத்து முத்துமாலையம்மனை மறக்கடிக்க செய்து கிறிஸ்தவத்திலேயே அவர்களை
தக்க வைத்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட விழா தான்
அதே போல ஆனி கடைசி செவ்வாய் மாலை துவங்கி மறுநாள் புதன்கிழமை மாலை முடிவடையும்
மாம்பழ சங்கம் தோத்திர பண்டிகை 237து ஆண்டு
வாடிக்கையாளரை கவர்ந்திழுக்க உலகிலேயே ஆடி கழிவு முறையை (RMKV) உருவாக்கிய
திருநெல்வேலி மண்ணுக்கு இது புதிதல்ல
அதே முறை தான்
எங்கே மதம் மாறிய கிறிஸ்தவர்கள் முத்துமாலையம்மன் கொடைக்கு சென்று மீண்டும்
இந்துவாகி விடுவார்களோ என்ற அச்சத்தில்
அவர்களை அங்கு போக விடாமல் தடுத்து திசைதிருப்ப
அதே ஆனி கடைசி செவ்வாயில் கொண்டாடப்படும் விழா தான் இந்த மாம்பழசங்கம்



