“வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் ” –பெரியவா

246400 479182102136836 1433845875 n 2 - 2026

“வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் ” –பெரியவா

(கண் தெரியாத சங்கரனுக்காக காஷ்டமௌனம் கைவிட்ட பெரியவா)—–( நீங்கள்
எல்லோரும் விடியற் காலையில் என்னைக் கண்டு சந்தோஷப்படுகிறீர்கள் ஆனால் கண்
தெரியாத சங்கரனுக்கு எப்படி
சந்தோஷம் ஏற்படும்? அதனால்தான் என் குரலைக் கேட்டாவது சந்தோஷப்படட்டுமென்று
பேசினேன்” என்றார்கள்)

சொன்னவர்-திருவாடானை ‘வன்தொண்டர்’ சங்கர அய்யர்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

புதுக்கோட்டையில் ஆறாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது ‘வெள்ளையனே
வெளியேறு’ போராட்டத்தில் கலந்து கொண்டு துப்பாக்கிச் சூட்டினால் அவருடைய
கண்கள் பாதிக்கப்பட்டன. முதுமலையில் தலைமறைவாக இரண்டு வருஷம் இருந்தார்.
இரண்டு கண்களும் முழுதும் குருடாய் விட்டன.சொல்ல முடியாத துக்கத்துடன் தேவகோட்டை
ஜமீந்தார் என்று பிரசித்தி பெற்ற
கொடை வள்ளலான நாட்டுக்கோட்டை செட்டியாருடன் 1950-ல் முதல் முதலில் ஸ்ரீபெரியவாளை
தரிசனம் செய்தார். அதுவே அவர் வாழ்க்கையில் திருப்புமுனை.

ஸ்ரீபெரியவாள், “சங்கரா, நீ தொண்டு செய்வதற்காகவே உன்னைக் கடவுள் இப்படி
சோதனைக்குட்படுத்தியிருக்கிறார். ஒரு குறைவும் வராது. தொண்டு செய்து கொண்டே
இரு” என்று ஆசீர்வாதம் செய்த உடனேயே பல வருடங்களாக அனுபவித்த துக்கம் இருந்த
இடம் தெரியாமல் மனது இலேசாகி விட்டது.

பிறகு,தமிழை நன்றாகக் கற்று சைவ,வைணவ நூல்களை,முழுவதும் மனப்பாடம்
செய்யும் அளவிற்குத்
தேர்ச்சி பெற்று,குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.
அருணகிரிநாதரின் கந்தரனுபூதி இவருக்குப் பிரியமான நூல். இவருடைய சொந்தக்காரப்
பெண் ஒருத்தி தானாக முன் வந்து விவாஹம் செய்து கொண்டாள். சங்கர அய்யர் ஊர்
ஊராகச் சென்று
பையன்கள்,பெண்களுடன் பஜனை செய்வது வழக்கம்.நாடகமும் நடத்துவார்.
குழந்தைகளுக்கு பரீக்ஷை வைத்து பரிசுகள் கொடுப்பார். இதில் கிருஸ்தவ,முஸ்லீம்
மாணவர்கள் கூட சேருவதுண்டு

இவர் செய்யும் தமிழ் சேவையைப் பாராட்டி கிருபானந்தவாரியார் இவருக்கு
‘வன்தொண்டர்’ என்று பட்டம் சூட்டினார்.

ஸ்ரீபெரியவாளை தரிசனம் செய்யும் போதெல்லாம் தேவாரம்,திருவாசகம்,திருக்குறள்
முதலியவைகளைப்பற்றித்தான் பேச்சு. ஸ்ரீபெரியவாளைப் பற்றிக்கூறினாலே கண்ணீர்
பெருகும். ‘அவர்களைப் போல்தமிழறிந்தவர்கள் வேறு யார் உளர்?’ என்ற வியப்பு.

இப்பொழுது அவருக்கு வயது எழுபத்தாறு. (கட்டுரை வெளியான ஆண்டு 2005) அவருடைய எழுபது
வயதில், இப்போது முன்னேற்றமடைந்த கண் சிகிச்சையினால் கண்பார்வை திரும்பக்
கிடைக்கும்
என்று நண்பர்கள் விளக்கிய போது அவர் “ஸ்ரீபெரியவாள் அனுக்ரஹத்தினால் கண்
தெரியாமலேயே
சந்தோஷமாயிருக்கிறேன்.இனிமேல் கண் பார்வை பெற்று என்ன ஆக வேண்டியிருக்கிறது?”
என்று மறுத்து விட்டார்.

1958ம் வருஷம் ஸ்ரீபெரியவாள் சென்னை சம்ஸ்கிருத கலாசாலையில் முகாமிட்டிருந்த
போது விடியற்காலையில் விஸ்வரூப தரிசனத்திற்காக தேவகோட்டை ஜமீந்தாருடன்
சென்றிருந்தார்.
அப்பொழுதெல்லாம் பெரியவாள் காலை வேளையில் காஷ்ட மௌனமாக இருப்பது வழக்கம்.
ஆனால் இவர்கள் இருவரும் வந்ததும் பெரியவாள், “வா, சங்கரா, இப்படி வந்து
உட்கார் ” என்று
சொன்னதும் எல்லோருக்கும் ஆச்சர்யம்.

சாயங்காலம் தீப நமஸ்காரம் ஆன பின்பு ஸ்ரீபெரியவாள்,”இன்று காலையில்
மௌனத்தை விட்டுப்
பேசியது உங்கள் எல்லோருக்கும் ஆச்சர்யம். ஆனால் ஒருவருக்கும் காரணம் தெரியவில்லை.
நீங்கள் எல்லோரும் விடியற் காலையில் என்னைக் கண்டு சந்தோஷப்படுகிறீர்கள் ஆனால்
கண் தெரியாத சங்கரனுக்கு எப்படி சந்தோஷம் ஏற்படும்? அதனால்தான் என்
குரலைக் கேட்டாவது
சந்தோஷப்படட்டுமென்று பேசினேன்” என்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories