மின்கம்பி அறுந்து விழுந்து சோகம்; கை இழந்த இளம்பெண்! கண்டு கொள்ளாத அமைச்சர் ‘தங்கமணி’!

girl-admitting
girl-admitting

ஒரு நாள் கரண்ட் பில் லேட்டா கட்டினால் கூட அபராதம் வசூலிக்கும் மின்சாரத்துறை அமைச்சர் வீட்டின் அருகே, மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஓர் இளம்பெண் தன் கையை இழந்துள்ளார். கேட்க நாதியில்லை.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், அதாவது மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொகுதியில் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்கும் ஹேமா என்ற இளம்பெண்ணின் மீது மின் கம்பி அறுந்து விழுந்தது. இதில் அவர் வலது கை பாதிப்பு அடைந்தது. கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி கையை எடுத்துவிட்டனர்.

விஷயம் கேள்விப்பட்டும் அமைச்சர் நேரில் சென்று ஆறுதலோ நிவாரணமோ வழங்கவில்லை. பாதிப்பு அடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் சி.எஸ்.ஆர் காப்பி கூட கொடுக்க மறுக்கின்றனர்.

தொகுதியில் வலம் வந்து கொண்டிருக்கும் அமைச்சர் தங்கமணி அவர்களுக்கு வாழ்க்கையையே தொலைத்து நிற்கும் பெண்ணைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. இதுவே, ஒரு சிறுபான்மை இனத்தவருக்கோ, பட்டியல் இனத்தவருக்கோ நிகழ்ந்திருந்தால், ஓட்டு வங்கியை மனதில் வைத்து, கட்சி முழுவதும் விழுந்து அடித்து பல லட்சங்கள் நிவாரணமும், அரசு வேலையும் கொடுத்திருப்பார்கள். இது ஓபிசி இனம் தானே? கேட்க நாதியில்லை.

girl-admitting1
girl-admitting1

மின்சாரத் துறையினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அவர்களின் சொந்தத் தொகுதியிலேயே கூட நிவாரணம் கொடுக்க நேரமில்லையா இல்லை விருப்பம் இல்லையா? என்று தொகுதி மக்கள் கொந்தளித்து போய் இருக்கின்றனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

வரும் தேர்தலிலும் குமாரபாளையம் தொகுதியிலேயே போட்டியிடக் காத்திருக்கும் அமைச்சர் தங்கமணிக்கு சரியான பாடம் புகட்டுவோம் என்று தொகுதிவாசிகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

1. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை ஏற்று, சி.எஸ்.ஆர். காப்பி கொடுக்க வேண்டும்.
2. பாதிக்கப்பட்ட ஹேமாவிற்கு மருத்துவச் செலவு உட்பட நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
3. வாழ்க்கையை இழந்து நிற்கும் பெண்ணுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கையை வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கக் காத்திருக்கின்றனர்.

  • ஆனந்தன் அமிர்தன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories