மின்கம்பி அறுந்து விழுந்து சோகம்; கை இழந்த இளம்பெண்! கண்டு கொள்ளாத அமைச்சர் ‘தங்கமணி’!

girl-admitting
girl-admitting

ஒரு நாள் கரண்ட் பில் லேட்டா கட்டினால் கூட அபராதம் வசூலிக்கும் மின்சாரத்துறை அமைச்சர் வீட்டின் அருகே, மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஓர் இளம்பெண் தன் கையை இழந்துள்ளார். கேட்க நாதியில்லை.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், அதாவது மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொகுதியில் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்கும் ஹேமா என்ற இளம்பெண்ணின் மீது மின் கம்பி அறுந்து விழுந்தது. இதில் அவர் வலது கை பாதிப்பு அடைந்தது. கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி கையை எடுத்துவிட்டனர்.

விஷயம் கேள்விப்பட்டும் அமைச்சர் நேரில் சென்று ஆறுதலோ நிவாரணமோ வழங்கவில்லை. பாதிப்பு அடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் சி.எஸ்.ஆர் காப்பி கூட கொடுக்க மறுக்கின்றனர்.

தொகுதியில் வலம் வந்து கொண்டிருக்கும் அமைச்சர் தங்கமணி அவர்களுக்கு வாழ்க்கையையே தொலைத்து நிற்கும் பெண்ணைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. இதுவே, ஒரு சிறுபான்மை இனத்தவருக்கோ, பட்டியல் இனத்தவருக்கோ நிகழ்ந்திருந்தால், ஓட்டு வங்கியை மனதில் வைத்து, கட்சி முழுவதும் விழுந்து அடித்து பல லட்சங்கள் நிவாரணமும், அரசு வேலையும் கொடுத்திருப்பார்கள். இது ஓபிசி இனம் தானே? கேட்க நாதியில்லை.

girl-admitting1
girl-admitting1

மின்சாரத் துறையினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அவர்களின் சொந்தத் தொகுதியிலேயே கூட நிவாரணம் கொடுக்க நேரமில்லையா இல்லை விருப்பம் இல்லையா? என்று தொகுதி மக்கள் கொந்தளித்து போய் இருக்கின்றனர்.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வரும் தேர்தலிலும் குமாரபாளையம் தொகுதியிலேயே போட்டியிடக் காத்திருக்கும் அமைச்சர் தங்கமணிக்கு சரியான பாடம் புகட்டுவோம் என்று தொகுதிவாசிகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

1. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை ஏற்று, சி.எஸ்.ஆர். காப்பி கொடுக்க வேண்டும்.
2. பாதிக்கப்பட்ட ஹேமாவிற்கு மருத்துவச் செலவு உட்பட நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
3. வாழ்க்கையை இழந்து நிற்கும் பெண்ணுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கையை வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கக் காத்திருக்கின்றனர்.

  • ஆனந்தன் அமிர்தன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Entertainment News

Popular Categories