சோழவந்தான் துணை சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்யுங்க!

madurai chozhavanthan sugathara nilayam

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே துணை சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்ய கிராம பொதுமக்கள் கோரிக்கை!

.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக துணை சுகாதார நிலையம் ஏற்படுத்தியுள்ளனர்.

இங்கு மகப்பேறு பரிசோதனை மகப்பேறு கவனிப்பு பார்ப்பதற்கான மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான வசதிகளும் அவர்கள் பரிசோதனை செய்வதற்காக பெட் வசதிகள் மற்றும் மருத்துவ உதவியாளர் தங்குவதற்கு குடியிருக்கும் குடியிருப்புகள் உள்ளிட்டவை இணைந்து உள்ளது.

இந்த கிராமத்தைச்சுற்றியுள்ள எட்டு கிராமத்தைச்சேர்ந்த கிராமமக்கள் இந்த துணைசுகாதார நிலையத்தை பயன்படுத்திவந்தனர். தற்போது சுமார் இருபது ஆண்டு காலமாக இந்த துணை சுகாதார நிலையத்திற்கு கிராம மக்கள் வருவதைத் தவிர்த்தனர்.

ஏனென்றால் இந்த சுகாதார சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாததால் ஒரே ஒரு செவிலியர் மற்றும் வந்திருந்து முதலுதவி செய்து வருகிறார்.இதனால் இப்பகுதி கிராம மக்கள் இந்த துணை சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்து டாக்டர் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

.இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது எங்கள் கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு துணை சுகாதார நிலையம் ஆரம்பித்தனர்.இங்கே எங்கள்கிராமம் உட்பட சுற்றியுள்ள எட்டு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இந்த துணை சுகாதார நிலையத்தை பயன்படுத்தி வந்தனர்

ஆனால் கடந்த .20 ஆண்டுகாலமாக துணை சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் வருகை குறைந்தது.இதனால் இங்கு மருத்துவ உதவியாளர்கள் தங்குவது இல்லை. காலப்போக்கில் இங்குள்ள கட்டிடம் இடிந்து பெயரளவில் உள்ளது.

மேலும் இந்தப் பகுதியில் அதிக அளவு விவசாயம் செய்வதால் . விவசாய வேலைகள் செய்யும் போது திடீரென்று பூச்சிக்கடி ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு செல்வதற்கு சோழவந்தான் அல்லது மதுரை செல்ல வேண்டி இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்

ஆகையால் இந்த துணை சுகாதார நிலையத்தை பராமரித்து மருத்துவர்கள் செவிலியர்கள் உதவியாளர்கள் உட்பட அனைவரும் இங்கு தங்கி பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories