அவன் பூணூலை எடுத்த போது… வேடிக்கை பார்த்தாய்! இன்று… உன் நெற்றி பாழானது!

destroying hindu identity
destroying hindu identity

இராமலிங்கப்பெருமானார் ஆன வள்ளல் அடிகளுக்கு விபூதி பூசக்கூடாது என ஒரு கும்பல் கிளம்யிருக்கிறது.
ஏழெட்டு வருடங்களாக இந்த கும்பல் இப்படி செய்துவந்தாலும் சமீபகாலமாக வடலூர் நிலையங்களை கைப்பற்றிக்கொண்ட இந்த கும்பல்

வள்ளல் அடிகளுக்கு திருநீறு முதலிய சிவசின்னங்கள் ஏதுமிலாத படத்தை வெளியிட்டு வருகிறது.

கேட்டால் அடிகள் உருவ வழிபாட்டை எதிர்த்தார், திருநீறு அணியக்கூடாது என சொன்னார் என்கிறதுகள்.

உருவ வழிபாடு கூடாது என்றால் இதுகள் எதுக்கு வடலூரிலேயே படம் போட்டு பிரிண்ட் செய்து பிரேம் போட்டு தருகிறதுகள்?

ஞான சபையிலே ஜோதி வழிபாடு மட்டும் தான் தகும் என்றால் இதுகள் ஜோதியை மட்டும் படமாக அச்சிட்டு வெளியிடவேண்டியது தானே?

எதுக்கு திருநீறு பூசாமல் பாழ் நெற்றியோடு இருக்கும் அடிகள் படித்து அச்சிட்டு வெளியிடுகிறதுகள்?

அடிகள் அருளிய நித்திய கரும விதி களிலே முதல் விதியே எழுந்தவுடன் நீறு தரிக்கவேண்டும் என்பது தான்.

சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து, விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும்.

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

காலையில் இளம் வெய்யில் தேகத்திற் படாதபடி, பொழுது விடிந்து 5 நாழிகை பரியந்தம் உடம்பைப் போர்வையோடு காத்தல் வேண்டும். பின்பு வெய்யிலில் நெடுநேரம் தேகமெலிவு வரத்தக்க உழைப்பையெடுத்துக் கொள்ளாமல், இலேசான முயற்சியில் சிறிது வருத்தந்தோன்ற முயலுதல் வேண்டும். பின் இளம் வெந்நீரில் குளித்தல் வேண்டும். விபூதி தரித்துச் சிவசிந்தனையோடு சிறிது நேரம் இருத்தல் வேண்டும்.

இராத்திரி முன் பங்கில் தேகசுத்தி செய்து, விபூதி தரித்துச் சிவத்தியானஞ் செய்தல், தோத்திரஞ் செய்தல், சாத்திரம் வாசித்தல், உலகியல் விவகாரஞ் செய்தல் – இவை முதலியவை கூடும். பின் போஜனஞ் செய்தல் வேண்டும். இராப் போஜனம் பகற் போஜனத்தைப் பார்க்கிலும் அற்பமாகப் புசித்தல் வேண்டும்.

  1. சிறப்பு விதி
  2. நித்தியம் சூரியோதயமாக 5 நாழிகைக்கு முன்னே நித்திரை நீங்கி எழுந்திருத்தல்.
  3. எழுந்தவுடன் விபூதி தரித்துச் சற்றுநேரம் செவ்வையாக உட்கார்ந்து, கடவுளை ஊன்றி நினைத்து எழுதல்.

இப்படி கரும விதிகளிலே முதல் விதியாக காலை எழுந்தவுடனே நீறு பூசும் படி பணித்திருக்கும் அடிகள் நீறை விட்டாராம்.

இதிலே அரசியல் வேறு.

இன்னும் கொஞ்ச நாள் போனால் வள்ளல் அடிகள் சிவனை வழிபடவில்லை அவரு வழிபட்டது ஏதோ ஒரு சாமி அது உருவ வழிபாடு இல்லாத அந்த குறிப்பிட்ட மதம் தான் என முடிச்சிடுவானுகளோ?

ALSO READ:  விஜயின் வெற்றி - அதிர்ஷ்டமா? ஆளுமையா?

வழக்கம்போல தமிழக அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்ட படம் என சொல்லிடலாம்.

திருவொற்றியூர் தியாகேசப்பெருமானை குறித்து எழுத்தறியும் பெருமான் மாலை பாடியிருக்கிறார். நாளைக்கு அதையும் அழித்துவிடும்களோ?

இப்படியாக ஒவ்வொருவராக இந்து இல்லை என பிரிக்குதுகளாம்.
சைவம் இந்து இல்லை வைணவம் இந்து இல்லை அப்புறம் சைவமே சைவம் இல்லைன்னு போவுமாம்.

நடத்துங்க நடத்துங்க

ஒல்லையே நஞ்சனைத்தும் உண்ட தயாநிதிநீ
அல்லையோ நின்றிங் கயர்வேன்முன் வந்தொருசொல்
சொல்லையோ ஒற்றியூர்த் தூயதிருக் கோயிலுள்நீ
இல்லையோ ஐயா எழுத்தறியும் பெருமானே.

ஈசனே நீயும் கோவிலுக்குள்ளே இல்லாமல் போனாயோ என அடிகள் அன்று அரற்றி அழுததை எம்மீசன் கேட்காமலா போய்விடுவான்?

~ ராஜா சங்கர்


vallalar
vallalar

வீபூதியை அழிப்பதால் ஹிந்துமதத்தை அழித்துவிடப்போவதாக நினைத்து குதுகலிக்கும் நாளை அழியவிருக்கும் கூட்டம்.

வள்ளுவருக்கு அழித்தார்கள் அது கற்பனை ஓவியம் என்றனர். ஒழிந்து போகட்டும் என்றுவாளாவியிருந்தோம்…

நீறில்லா நெற்றி பாழ் என்ற ஔவைக்கு அழித்தனர்…

எப்போதும் குங்குமப் பொட்டுடன் விளங்கிய சாக்தன் பாரதிக்கும் அழித்தனர்.

திருநீறு அணியும் முறை காலம் அனைத்தையும் எழுதிய இராமலிங்க அடிகளாருக்கும் அழித்தனர்.

ALSO READ:  கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

செக்யூலர் என்பது அரசாட்சியுடன் இருக்க வேண்டும். மதத்தில் புகுந்தால் மண்டையில் போட வேண்டும். புத்திக்கெட்ட பதர்களாய் தமிழன் இருக்கும் வரை இவர்கள் அராஜகம் தொடரும்.

இந்த இழிந்த. குணமுடைய மூடர்களை வாக்கு கேட்டு வரும் போது துரத்தி அடிக்க வேண்டாமா? அதைச் செய்யாமல் விட்டால் உன் நெற்றியில் கை வைக்க அதிக நாள் ஆகாது.

முதலில் உனக்கு சொரணை வேண்டும். நெற்றியில் நீறோ, திருமண்ணோ , சந்தனமோ வைத்தால் கேலி பேசுபவனிடம் கேள் அவன் தரிக்கும் அடையாளங்களை ஏன் என்று.

இவர்கள் இங்கு இந்துத்வாவை இன்ஸ்டால் செய்யாமல் விடமாட்டார்கள் .

~ வாசு ராமதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories