April 24, 2025, 10:30 PM
30.1 C
Chennai

விநாயகர் ஆலயம் அருகே கல்லறை கட்டிய கிறிஸ்துவ வன்மம்: காவல் துறையால் அடங்கிப் போன அசம்பாவிதம்!

 

நெல்லையில், மிகவும் புகழ்பெற்ற விநாயகர் கோயில் அருகே, கிறிஸ்துவ கல்லறை கட்டும் வன்மத்தால், அந்தப் பகுதியில் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்த படங்களும் செய்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவின. இந்நிலையில், அசம்பாவிதம் நேராமல் தடுக்க நெல்லை மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு, தொடர்புடைய கட்டுமானத்தை அப்புறப்படுத்தினர்.

இருப்பினும் இது குறித்த பழைய படங்கள் தற்போதும் வாட்ஸ் அப் வாயிலாக பரப்பப் பட்டு வருகின்றன. இதனால் இதைக் காணும் பலர் கொந்தளிப்பு மன நிலைக்குச் சென்று விடுகின்றனர். கடந்த மாதமே இது குறித்த காவல் துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட விவரம், இது போன்று வாட்ஸ் அப்பில் பரப்புபவர்களுக்கு தெரியவரவில்லை.

இந்தப் பிரச்னை சற்று மோசமானதுதான்…! கடந்த மாதம், இது குறித்து காவல் துறைக்குச் சென்ற புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. பிரச்னைக்கு உள்ளான இடம், அதை ஒட்டிய கோவில், அவ்வளவு சாதாரணமானதல்ல.!

ALSO READ:  அப்பாவிகளைக் கைது செய்ய பேஸ்புக்கை மேய்ந்து கொண்டு, வேலையில் கோட்டை விடும் திமுக., போலீஸ்!

நெல்லை சந்திப்பில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது மணிமூர்த்தீஸ்வரம். இங்கே விநாயகப் பெருமானுக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் மூலவராக வீற்றிருப்பவர் விநாயகப்பெருமான். நீலசரஸ்வதியைத் தம் மடியில் அமர்த்தியபடி காட்சி தருகிறார். விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் 8வது வடிவமாகப் போற்றப்படும் உச்சிஷ்ட கணபதியாக இத்தலத்தில் விநாயகப் பெருமான் திகழ்கிறார். சுமார் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோவில், ஆசியாவிலேயே ராஜ கோபுரத்துடன் தனி மூலவராக விநாயகர் வீற்றிருக்கும் மிகச் சில ஆலயங்களில் பெரிதாகத் திகழ்கிறது.

தேவியை மடியில் அமர்த்தி, துதிக்கையை தேவியின் மீது வைத்தபடி திகழும் விநாயகரின் உச்சிஷ்ட கணபதி கோலத்தை நாம் பல ஆலயங்களில் தரிசிக்க முடியும். ஆனால், அந்த கணபதியே மூலவராக அமைந்திருக்கிற ஆலயம் என்றால், இதனைத்தான் பளிச்செனக் கூற இயலும். அந்த அளவுக்கு இந்தப் பகுதியில் புகழ்பெற்ற ஆலயமாகத் திகழ்கிறது மணிமூர்த்தீஸ்வரம்.

இங்கே ஆலயத்தின் உள்பிராகாரத்தில் மூலவரைச் சுற்றி வல்லப கணபதி, சக்தி கணபதி, ருணஹரண கணபதி, ஹரித்ரா கணபதி, சித்திபுத்தி கணபதி, சர்வசக்தி கணபதி, குஷி கணபதி, சந்தானலட்சுமி கணபதி, ஸ்வர்ண கணபதி, விஜய கணபதி, அர்க கணபதி, வீர கணபதி, சங்கட ஹர கணபதி, துர்கா கணபதி, ஹேரம்ப கணபதி, குரு கணபதி என 16 வகையான விநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.

ALSO READ:  அபகரிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்கும் மசோதா இது!

இந்தக் கோயிலுக்கு மேலும் ஒரு சிறப்பும் உண்டு. தேவியைத் தம் மடியிலே அமர்த்தி வைத்து அருள்பாலிக்கும் வடிவமுள்ள விநாயகர் திருவுருவங்கள் உள்ள வல்லப கணபதி, சக்தி கணபதி, சந்தான லட்சுமி கணபதி, சங்கடஹர கணபதி மற்றும் இரு தேவியரை மடியிலே வைத்துள்ள சித்தி புத்தி கணபதி என 5 விநாயகப் பெருமானின் திருவுருவங்களையும் நாம் இந்த ஒரே கோயிலில் காண முடியும் என்பதுதான் அந்தச் சிறப்பு.

இப்படி மிகச் சிறப்பு வாய்ந்த திருக்கோயிலுக்கு எதிரில் உள்ள இடம்தான் கிறிஸ்துவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கே கிறிஸ்துவ இடுகாடு கட்ட்டப்பட்டது. இது பெரும் பிரச்னையாக உருவெடுத்த நிலையில், மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து, பிரச்னையின் தீவிரத்தை தற்காலிகமாகக் குறைத்து வைத்தது.
#ReclaimTemples

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: ரோஹித் அதிரடியில் கைகொடுக்க மும்பை வெற்றி!

          மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர், இன்று நான்கு விக்கட்டுகள் எடுத்த ட்ரண்ட் போல்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

Topics

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: ரோஹித் அதிரடியில் கைகொடுக்க மும்பை வெற்றி!

          மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர், இன்று நான்கு விக்கட்டுகள் எடுத்த ட்ரண்ட் போல்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories