தமிழா உன் போராட்டம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? #மாத்தியோசி

Published:

trichy dmk rally - 2026

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் பல இடங்களில் நடைபெற்று வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அதன் தாக்கம் அதிகம் எதிரொலிக்கிறது. பெரும்பாலானவர்கள் தமிழகத்தில் அணைகள் கட்டப்படவில்லை, மணல் கொள்ளை, அதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது, தண்ணீர் கடைமடைப் பகுதிகள் வரை நின்று நிதானித்துச் செல்லாமல், கடலில் கலப்பது என்று தங்கள் கருத்துகளைச் சொல்லி, இதுவரை ஆண்ட தமிழக அரசுகளின் மீது குறைகளைச் சொல்லுகின்றனர்.

இவற்றில் ஒரு கருத்தாக, தமிழா உன் போராட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறி வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வலம் வரும் கருத்து இது…

தமிழா! ஏன் உன் போராட்டம் இப்படி இருக்க கூடாது..?
தமிழக அரசே ஆந்திர அரசு போல நதிகளை இணை!!!
தமிழக அரசே குஜராத் அரசு போல தடுப்பணைகள் கட்டு
தமிழக அரசே கர்நாடக அரசு போல அணைகள் கட்டு!!
தமிழக அரசே கேரளா போல மணல் அள்ளுவதற்கு தடை விதி !!!
தமிழக அரசே உத்திரப்பிரதேச அரசு போல விவசாயிகளுக்கு சாண உரம் மற்றும் பால் மூலம் மாற்று வருவாய் வழங்கும் பசுக்கள் வதையை தடை செய் !!!
தமிழக அரசே ராஜஸ்தான் அரசு போல சொட்டு நீர் பாசனத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர் !!!
தமிழக அரசே மத்திய பிரதேச அரசு போல மண் பரிசோதனையை விவசாயிகளுக்கு வழங்கு !!!
தமிழக அரசே மகாராஷ்டிரா அரசு போல வறட்சியில் காப்பீடு பெறும் திட்டத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்!!!
தமிழக அரசே சிக்கிம் அரசு போல ஆர்கானிக் விவசாயத்திற்கு ஆதரவு கொடு !!!
தமிழக அரசே சட்டிஸ்கர் அரசு போல ஆன்லைன் சந்தையை விவசாயிகளுக்குக் கொடுத்து அதிக லாபம் பெற வழி செய் !!!
தமிழக அரசே வங்காளத்தை போல செயற்கை நீர் நிலைகளை உருவாக்கி அதில் விவசாயிகள் மீன் வளர்ப்பதை ஊக்குவி !!!

இப்படியும் ஆக்கபூர்வமாகப் போராடலாமே… #மாத்தியோசி

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img