அண்மைக் காலத்தில் பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கப் பட வேண்டிய செய்தி எது என்றால், கிறிஸ்துவ சேவை அமைப்பின் குழந்தைகள் விற்பனை செய்திதான். 3 குழந்தைகளை விலைக்கு விற்று, ஒரு குழந்தையை இலவசமாகக் கொடுத்ததாக இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கன்யாஸ்த்ரி ஒப்புக் கொண்டுள்ளார். இந்த ஆடியோ பதிவு போலீஸாரால் வெளியிடப் பட்டுள்ளது.
ஆனால், எத்தனையோ கிறிஸ்துவ அமைப்புகள் இது போல் வெளித்தெரியாத அண்டர்க்ரவுண்ட் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, தங்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பார்களோ என்ற அச்சத்தில் இப்போது அவை ஊடக கைக்கூலிகளின் துணை கொண்டு திசை திருப்பும் வேலையில் இறங்கியிருக்கின்றன.
நாங்கள் மட்டும் இதைச் செய்யவில்லை, முஸ்லிம், இந்து அமைப்புகளும்தான் செய்கின்றன என்ற ரீதியில் விஷயத்தை திசை திருப்ப, பல்வேறு புனை கதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அதன் ஒரு சாராம்சமான செய்தி இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் வெளிவந்திருக்கிறது.
மதரஸா மற்றும் வேதபாட சாலைகள் வாயிலாக குழந்தைகள் கடத்தல் என்று செய்தி!
மதரஸா குறித்து விவரங்கள் உள்ளது. ஆனால் வேத பாடசாலை குறித்து எதுவும் இல்லை! இருப்பினும் வேத பாட சாலை என்ற ஒரு வார்த்தையை மட்டும் செய்தியில் வலியத் திணித்து, பரபரப்பை ஏற்படுத்த முனைகிறார்கள்.
குழந்தைகளைக் கடத்தும் கிறிஸ்தவ நிறுவனங்களின் ஊழலை திசை திருப்ப ஹிந்து நிறுவனம் குற்றவாளியாக்கப் படுகிறது! இதைத்தான் கிறிஸ்தவ, இஸ்லாமிய சதிக் கும்பல்களுக்கு விலை போகும் ஊடக வேசித்தனம் என்று நாம் அடித்துக் கூறுகிறோம்…!


