சமூகப் பதற்றத்தையே உருவாக்கி இருக்கிறார்கள்…!

Published:

06 July17 Supreme Court - 2026

சபரிமலைக்கு பெண்கள் அனைவரும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆன்மீக நம்பிக்கையுள்ள எந்த பெண்களும் சபரிமலைக்கு போக துடித்து கொண்டிருக்கவில்லை ..

இந்த நாட்டில் என்னவிதமான பாரம்பரிய நம்பிக்கை உள்ளதோ அதையே சாதாரண ஆன்மீக நம்பிக்கை உள்ள பெண்கள் கடைபிடிப்பார்கள்…

இந்து மதம் எப்பொழுதும் தேவைக்கும் காலத்திற்கும் தேவையான மாற்றங்களை செய்து கொண்டே, ஏற்றுக் கொண்டே வந்திருக்கிறது. அது தான் ஹிந்து மதத்தின் பலம்..

ஆனால் மாற்றங்கள் திணிப்பினால் வந்ததல்ல … இயல்பாக மாறி இருக்கிறது…

திணிப்பை ஹிந்து மதம் ஏற்றுக் கொண்டதே இல்லை.. திணிப்பு தோற்றுத் தான் போயிருக்கிறது… திணித்தவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.

இந்த மாற்றம் தேவையானால் காலப்போக்கில் அதுவாகவே நடக்கும் … ஆனால் எந்த சட்டத்தின் மூலமும் திணிக்க முடியாது ..
திணிப்பை ஏற்றுக் கொள்ளாது…

இந்த முட்டாள்தனமான தீர்ப்பின் மூலம் தேவையில்லாத ஒரு சர்ச்சையையும் சமூகப் பதட்டத்தையும் மட்டுமே நீதிமன்றம் உருவாக்கியுள்ளது.!

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

Related articles

Recent articles

spot_img