சபரிமலை தேவசம் போர்டுக்கு சவால் விடுக்கும் ஐயப்ப பக்தர்கள்!

Published:

Devaswom Board - 2026

சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டுக்கு ஐயப்ப பக்தர்கள் விடுத்திருக்கும் சவால்கள் இவை…

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்..

1. தேவஸ்தான போர்டைச் சேர்ந்த எந்த ஒரு கோவில் உண்டியலிலும் உங்கள் காணிக்கையை செலுத்தாதீர்கள். அதற்கு பதிலாக பந்தளத்தில் வைக்கப்பட்டுள்ள திருவாபரணத்தின் முன்பு போட்டால், அவர்கள் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உபயோகிப்பார்கள்.

2. சபரிமலையில் தயாரிக்கப்படும் அப்பமும், அரவணையும் ஐயப்பன் பிரசாதம் இல்லை. இவை ஐயப்பனுக்கு படைக்கப் படுபவையும் இல்லை.  இவை தேவஸ்தானத்தால் தயாரிக்கப் பட்டு வியாபாரம் செய்யப்படுபவை. ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள் அவருக்கு நெய் அபிஷேகம் செய்து, அதை மட்டுமே எடுத்துச் செல்லுங்கள். அதற்கு மீறிய பிரசாதம் வேறு ஒன்று இல்லை.

3.உங்கள் உடல் நிலை ஒத்துழைக்கும் என்றால் முடிந்த வரை கேரள அரசின் பேருந்துகளை உபயோகிக்காதீர்கள். பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கும், நிலக்கல்லில் இருந்து பந்தளத்திற்கும் நடந்து செல்வோம்.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

அனைத்து ஐயப்ப பக்தர்களும் இதற்கு அதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம். இவை சபரிமலை கோவிலின் நம்பிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்காக வரிந்து கட்டி ஆதரவு அளித்து செயல்படுத்தத் துடிக்கும், மற்றும் இந்தத் தீர்ப்பைப் பெறுவதற்காக மிகவும் முயன்ற கேரள அரசுக்கும் தேவசம் போர்டுக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாம் காட்டும் ஒற்றுமைப் போராட்டம். சபரிமலை தேவஸ்தானம் நம்மிடம் பணம் சம்பாதித்து நமது கலாசாரத்தையும் நம்பிக்கையும் கெடுப்பதற்காகவே என்பது இப்போது நன்றாக வெளித் தெரிந்திருக்கிறது.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img