தாமிரபரணித் தாய்! மகாபுஷ்கர நாயகி!

tamirabarani thai - 2026
நெல்லையப்பர் ஆலயத்தில் உள்ள தாமிரபரணி தாய் திருவுலாத் திருமேனி

தாமிரபரணித் தாய்”
( கவிஞர் மீ.விசுவநாதன் )

காப்பு
ஆனை முகனி(ன்) அருளோடு தென்பொதிகை
ஆனை முனியாம் அகத்திய தேவனின்
செல்ல மகளாய்ப் பிறப்பெடுத்த நற்புகழாள்
நல்ல பொருநை நதி. (1)

நதியான தாமி ரபரணித் தாயை
கதியாகப் போற்றக் கவலை கரையும் ;
மதிநுட்பம் ஓங்கி வளர்கவிதை வாழ்த்த
விதிநுட்பம் வெற்றிதரும் வித்து. (2)

வித்து முளைத்து விரிவான் தொடவுயரும்
சத்து மிகக்கொண்ட தாமிர சக்தியால்
மொத்த உயிரினமும் முன்னேறி மேன்மைபெற
நித்தமும் ஊறிவரும் நீர். (3)

நீர்”பொருநை”ப் பேரோடு நீண்டநாள் வற்றாமல்
ஊர்செழிக்கப் பாய்ந்தே உயிர்ப்பாலாய் வேரிறங்க
ஆன்றோரும் சான்றோரும் ஆசார்ய யோகிகளும்
தோன்றிங்கே செய்கின்றார் தொண்டு. (4)

தொண்டு பலசெய்யத் தோள்வலியும், செல்வத்தைக்
கொண்டு குவிக்கும் குணவள்ளல் ஆள்பலமும்,
அண்டம் தினம்வணங்கும் ஆசார்ய உத்தமரும்
கண்ட பொருநைநதிக் கா.. (5)

காக்கு மெனநம்பி காடுவயல் எங்கெங்கும்
தேக்குடனே நெற்பயிரும் தேன்சொரியும் பூக்களுமாய்
ஆக்கிவைத்த அத்துணைக்கும் அன்னை “பொருநை”யவள்
நீக்கமற உள்ளாள் நிசம் . (6)

நிசமான தெய்வம் நிதம்காண வேண்டி
வசமான நல்வரத்தால் மக்கள் தசைநரம்புள்
தாமி ரபரணிநீர் தப்பாமல் பக்தியினால்
சாமி உணர்த்துகிற சத்து. (7)

சத்தை அனைவர்க்கும் தட்டாமல் தந்திடுவாள்
முத்தைக் கொடுப்பாள் ; முகமலர்ந்த சித்தனைப்போல்
பூங்குளத்தில் ஊற்றெடுத்துப் புன்னைக்கா ஊர்க்கடலில்
பாங்குடனே போய்க்கலப்பாள் பார். (8)

பார்த்தும் குளித்தும் பளிச்சென நீரணிந்து
கூர்த்தவிழி மூடிக் குவலயம் காக்கும்மா
தேவனை உள்ளுக்குள் தேடும் பணிசெய்வோர்
மாவினை தீர்க்கும் மருந்து. (9)

மருந்தின்றி வாழலாம் ; வற்றா பொருநை
அருந்தி வருவோர்க்கே அன்பு பெருகும் ;
விருந்தோம்பல் பண்பு விரியும்; இனிதாம்
கரும்புநீர் காணுமோ கல். (10)

“கல்யா ணபுரி” கலைமிகுந்த ஊரினுக்கு
எல்லாப் புகழுமே இப்பொருநை பல்லாண்டு
காலமாய்ப் பாய்ந்து கலந்திருப்ப தாலென்று
நாலுபேர் போற்றும் நதி. (11)

(தாமிரபரணி மகாபுஷ்கரத்திற்காக எழுதியது)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories