தாமிரபரணித் தாய்! மகாபுஷ்கர நாயகி!

tamirabarani thai - 2026
நெல்லையப்பர் ஆலயத்தில் உள்ள தாமிரபரணி தாய் திருவுலாத் திருமேனி

தாமிரபரணித் தாய்”
( கவிஞர் மீ.விசுவநாதன் )

காப்பு
ஆனை முகனி(ன்) அருளோடு தென்பொதிகை
ஆனை முனியாம் அகத்திய தேவனின்
செல்ல மகளாய்ப் பிறப்பெடுத்த நற்புகழாள்
நல்ல பொருநை நதி. (1)

நதியான தாமி ரபரணித் தாயை
கதியாகப் போற்றக் கவலை கரையும் ;
மதிநுட்பம் ஓங்கி வளர்கவிதை வாழ்த்த
விதிநுட்பம் வெற்றிதரும் வித்து. (2)

வித்து முளைத்து விரிவான் தொடவுயரும்
சத்து மிகக்கொண்ட தாமிர சக்தியால்
மொத்த உயிரினமும் முன்னேறி மேன்மைபெற
நித்தமும் ஊறிவரும் நீர். (3)

நீர்”பொருநை”ப் பேரோடு நீண்டநாள் வற்றாமல்
ஊர்செழிக்கப் பாய்ந்தே உயிர்ப்பாலாய் வேரிறங்க
ஆன்றோரும் சான்றோரும் ஆசார்ய யோகிகளும்
தோன்றிங்கே செய்கின்றார் தொண்டு. (4)

தொண்டு பலசெய்யத் தோள்வலியும், செல்வத்தைக்
கொண்டு குவிக்கும் குணவள்ளல் ஆள்பலமும்,
அண்டம் தினம்வணங்கும் ஆசார்ய உத்தமரும்
கண்ட பொருநைநதிக் கா.. (5)

காக்கு மெனநம்பி காடுவயல் எங்கெங்கும்
தேக்குடனே நெற்பயிரும் தேன்சொரியும் பூக்களுமாய்
ஆக்கிவைத்த அத்துணைக்கும் அன்னை “பொருநை”யவள்
நீக்கமற உள்ளாள் நிசம் . (6)

நிசமான தெய்வம் நிதம்காண வேண்டி
வசமான நல்வரத்தால் மக்கள் தசைநரம்புள்
தாமி ரபரணிநீர் தப்பாமல் பக்தியினால்
சாமி உணர்த்துகிற சத்து. (7)

சத்தை அனைவர்க்கும் தட்டாமல் தந்திடுவாள்
முத்தைக் கொடுப்பாள் ; முகமலர்ந்த சித்தனைப்போல்
பூங்குளத்தில் ஊற்றெடுத்துப் புன்னைக்கா ஊர்க்கடலில்
பாங்குடனே போய்க்கலப்பாள் பார். (8)

பார்த்தும் குளித்தும் பளிச்சென நீரணிந்து
கூர்த்தவிழி மூடிக் குவலயம் காக்கும்மா
தேவனை உள்ளுக்குள் தேடும் பணிசெய்வோர்
மாவினை தீர்க்கும் மருந்து. (9)

மருந்தின்றி வாழலாம் ; வற்றா பொருநை
அருந்தி வருவோர்க்கே அன்பு பெருகும் ;
விருந்தோம்பல் பண்பு விரியும்; இனிதாம்
கரும்புநீர் காணுமோ கல். (10)

“கல்யா ணபுரி” கலைமிகுந்த ஊரினுக்கு
எல்லாப் புகழுமே இப்பொருநை பல்லாண்டு
காலமாய்ப் பாய்ந்து கலந்திருப்ப தாலென்று
நாலுபேர் போற்றும் நதி. (11)

(தாமிரபரணி மகாபுஷ்கரத்திற்காக எழுதியது)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories