ஹிந்து மதத்தினரை மட்டும் நீதிமன்றங்கள் குறிவைப்பது ஏன்?!

Published:

judgement - 2026

ஹிந்து மதத்தினரை மட்டும் இந்திய நீதிமன்றங்கள் ஏன் குறிவைத்துத் தாக்குகின்றன?! இது நீதிமன்றங்களின் தன்மையா அல்லது இந்திய சட்டங்களின் குளறுபடியா என்று பாமர இந்துக்கள் இப்போது கேட்டு வருகின்றனர்!

நம் நாடு சுதந்திரம் பெறும் முன்னர், கிறிஸ்துவ மதத்துக்கு ஆதரவான நிலைப்பாடு நீதிபதிகள் மட்டத்தில் இருந்தது. அதற்குக் காரணம், இயற்றப்பட்ட சட்டதிட்டங்கள் அப்படி! ஆனால், சுதந்திர இந்தியாவிலும் அத்தகைய போக்குதான் தொடர்கிறதே என்று வேதனை தெரிவிக்கிறார்கள் பாமர இந்துக்கள்!

எனவேதான், கிறிஸ்துவ திராவிட ஆதரவாளர்கள் நீதிமன்றங்களில் கோலொச்சுகின்றனர் என்ற குற்றச்சாட்டை சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக விவாதித்து வருகின்றனர். இது குறித்த வைரல் பதிவு இது…

???? கருணாநிதியை புதைக்கும் இடத்தை தீர்மானிக்க நடைபெற்ற வழக்கு விசாரணை தீர்ப்பு நடந்தது அன்றே இரவு 1 மணிக்கு .

திமுக வுக்கு சாதகமான தீர்ப்பு.

???? திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்த வழக்கு போட்ட அன்றே விசாரணை – தீர்ப்பு.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

திமுக வுக்கு சாதகமான தீர்ப்பு

???? இந்துக்களின் பொங்கல் திருநாள் பணம் 1000 வழங்க தடை. வழக்கு போட்ட அன்றே விசாரணை – தீர்ப்பு.

திமுக வுக்கு சாதகமான தீர்ப்பு. இந்துக்களுக்கு எதிரான தீர்ப்பு.

???? தீபாவளி திருநாளில் வெடி வெடிக்க தடை. வழக்கு போட்ட அன்றே விசாரணை – தீர்ப்பு.

இந்துக்களுக்கு எதிரான தீர்ப்பு. திமுக வுக்கு ஆதரவான தீர்ப்பு.

???? சபரிமலையில் ஆச்சாரத்தை மீறி 10 – 50 வயது பெண்கள் செல்ல அனுமதி. மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க 3 மாதம் அவகாசம் . அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு.

???? ஒரு பாமர மனிதன் நான். இந்த நிகழ்வுகள் என்னிடம் என்ன மாதிரியான சிந்தனையை உருவாக்கும்.

(நான் 3 மாசம் கழிச்சி விசாரணைக்கு எடுத்துக்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்துல மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலம் வருது. அதிக நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். நீ எப்படியாவது என்ன தகிடுதத்தம் பண்ணியாவது 100 பெண்களை கோவில்ல சாமி கும்புட வச்சிடு. நான் அதையே உறுதி செஞ்சிடுறேன்)

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

அப்பிடித்தானே.

???? ஒரு பாமர மனிதன் நான். இந்த நிகழ்வுகள் என்னிடம் என்ன மாதிரியான சிந்தனையை உருவாக்கும்.

கோர்ட் ஒரு சார்பாக செயல்படுகின்றன என்று சிந்திக்க வைக்காதா?

மதச்சார்பின்மை என்பது இந்துக்களுக்கு மட்டும்தானா ?

சட்டப்படி சரியா நடந்தால் யாராவது ஏதாவது பேசுவாங்களா?

ஒரு சார்பாக நடந்தால் பேசத்தானே செய்வான்.

அது எப்படி அவமதிப்பு ஆகும்.

???? இந்துக்களே விழித்திடுங்கள்.????

???? இப்போது இல்லையென்றால் இனி எப்போதும் இல்லை ????

Related articles

Recent articles

spot_img