பாரியூர் காளியம்மன் கோயில் தீக்குண்டத்தில் இறங்கிய… சத்தியபாமா எம்.பி.,!

Published:

thiruppur mp sathyabama in kaliamman temple3 - 2026

இன்று ஜன.10 வியாழன் அன்று பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருவிழாவில், பக்தர்களுடன் பக்தராக – குண்டம் இறங்கினார் திருப்பூர் எம்.பி சத்தியபாமா.

ஈரோடு மாவட்டம் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பக்தர்களுடன் எம்.பி சத்தியபாமாவும் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.

கோபி அருகே உள்ள பாரியூரில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர்த் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

thiruppur mp sathyabama in kaliamman temple - 2026

இந்த ஆண்டு கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இன்று காலையில் குண்டம் திருவிழா தொடங்கியது. பூச்சாட்டுதலில் இருந்து 15 நாட்கள் விரதமிருந்து, குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோபி மட்டுமின்றி, ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர்.

இன்று காலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து நந்தா தீபமும், திருக்கோடியும் ஏற்றப்பட்ட பின்னர் தலைமை பூசாரி குண்டத்திற்கு சிறப்பு பூஜை செய்து முதலில் குண்டம் இறங்கினார். அதைத் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!
thiruppur mp sathyabama in kaliamman temple2 - 2026

இன்று அதிகாலை திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்தியபாமா தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார். அரசு உயர் அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் தீக்குண்டம் இறங்கினர்.

thiruppur mp sathyabama in kaliamman temple1 - 2026

தமிழகத்திலிருந்து மட்டுமின்றி கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர்.

thiruppur mp sathyabama in kaliamman temple4 - 2026

கொண்டத்துக் காளியம்மனை வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினால் பக்தர்கள் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை!

Related articles

Recent articles

spot_img