பாரியூர் காளியம்மன் கோயில் தீக்குண்டத்தில் இறங்கிய… சத்தியபாமா எம்.பி.,!

thiruppur mp sathyabama in kaliamman temple3 - 2026

இன்று ஜன.10 வியாழன் அன்று பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருவிழாவில், பக்தர்களுடன் பக்தராக – குண்டம் இறங்கினார் திருப்பூர் எம்.பி சத்தியபாமா.

ஈரோடு மாவட்டம் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பக்தர்களுடன் எம்.பி சத்தியபாமாவும் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.

கோபி அருகே உள்ள பாரியூரில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர்த் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

thiruppur mp sathyabama in kaliamman temple - 2026

இந்த ஆண்டு கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இன்று காலையில் குண்டம் திருவிழா தொடங்கியது. பூச்சாட்டுதலில் இருந்து 15 நாட்கள் விரதமிருந்து, குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோபி மட்டுமின்றி, ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர்.

இன்று காலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து நந்தா தீபமும், திருக்கோடியும் ஏற்றப்பட்ட பின்னர் தலைமை பூசாரி குண்டத்திற்கு சிறப்பு பூஜை செய்து முதலில் குண்டம் இறங்கினார். அதைத் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.

thiruppur mp sathyabama in kaliamman temple2 - 2026

இன்று அதிகாலை திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்தியபாமா தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார். அரசு உயர் அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் தீக்குண்டம் இறங்கினர்.

thiruppur mp sathyabama in kaliamman temple1 - 2026

தமிழகத்திலிருந்து மட்டுமின்றி கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர்.

thiruppur mp sathyabama in kaliamman temple4 - 2026

கொண்டத்துக் காளியம்மனை வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினால் பக்தர்கள் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories