பிரஜா சங்கல்ப பாத யாத்திரையை திருமலை திருப்பதியில் நிறைவு செய்த ஜெகன் மோகன் ரெட்டி!

jaganmohanreddy - 2026

திருப்பதி: 3648 கிலோ மீட்டர் பிரஜா சங்கல்ப பாத யாத்திரை நிறைவை தொடர்ந்து திருப்பதியில் இருந்து திருமலைக்கு மலையேறி சென்று தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திரா முழுவதும் கடந்த 14 மாதங்களாக பிரஜா சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் சுமார் 3648 கிலோ மீட்டர் பாத யாத்திரையாகச் சென்று மக்களை சந்தித்து வந்தார் ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி.. இந்நிலையில் இன்று திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்து மலையேறி சென்று இலவச தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார்.

ஆந்திர எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பிரஜா சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் நடத்திய யாத்திரை கடந்த 14 மாதங்கள் ஆக ஆந்திரா முழுவதும் நடைபெற்று நேற்று முன்தினம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இச்சாபுரத்தில் நிறைவடைந்தது

இந்த நிலையில் இச்சாபுரத்தில் இருந்து ரயில் மூலம் இன்று காலை ரேணிகுண்டா ரயில் நிலையம் வந்தடைந்த ஜெகன்மோகன் ரெட்டியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் வரவேற்று திருப்பதி வரை ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

தொடர்ந்து திருப்பதி மலை அடிவாரத்துக்கு சென்ற ஜெகன்மோகன் ரெட்டி ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் ஆகியோருடன் திருப்பதி மலைக்கு நடந்து மலை ஏறிச் சென்றார்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

இடையில் திவ்ய தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசிப்பதற்காக வழங்கப்படும் இலவச தரிசனம் டோக்கனை ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவருடைய கட்சியினர் வாங்கினர்.
தொடர்ந்து மலையேறி சென்ற ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் பக்தர்களோடு பக்தர்களாக இலவச திவ்ய தரிசனத்தில் வரிசையில் சென்று ஏழுமலையானை தரிசித்தனர்.

ஜெகன்மோகன் ரெட்டி வருகையை முன்னிட்டு ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருப்பதி மலை வரை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
பிரஜா சங்கல்ப யாத்திரை என்ற பெயரிலான பாத யாத்திரையை துவங்குவதற்கு முன்னதாக ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானை தரிசித்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories