ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் சிபிஐ இயக்குனராகவே இருந்தால் என்ன? அலோக் வர்மா அவ்ளோதான்..! அதிரடி காட்டிய மோடி!

aloke varma vs rakesh asthana - 2026

புது தில்லி: ஊழல் கறை சிறிதும் படியாமல் ஆட்சியை ஐந்து ஆண்டுகளுக்கும் நிறைவு செய்வது என்பதில் குறியாக இருக்கும் பிரதமர் மோடி, பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டைக் கூறி மோதலில் ஈடுபட்ட சிபிஐ., இயக்குனர் அலோக் வர்மாவை அதிரடியாக நீக்கினார். அவர் நீதிமன்றம் சென்று தனது நீக்கத்துக்கு தடை பெற்றபோதும், மோடி அலோக் வர்மாவை நீக்கி, வேறு பொறுப்புக்கு மாற்றிவிட்டார். பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட தேர்வுக்குழு இந்த நடவடிக்கையை இன்று எடுத்துள்ளது.

சி.பி.ஐ., இயக்குனர் அலோக் குமார் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, இருவரும், பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினர். இதையடுத்து, மத்திய அரசு, இருவரது அதிகாரங்களையும் பறித்து, கட்டாய விடுப்பில் அனுப்பியது.

தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து அலோக் வர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தது. அத்துடன் சி.பி.ஐ., தலைவராக அலோக் வர்மா தொடரலாம் என தெரிவித்திருந்தது. இதனையடுத்து 77 நாட்களுக்கு பிறகு சி.பி.ஐ., தலைவராக அவர் நேற்று (ஜன.,9) பொறுப்பேற்றார்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் நீதிபதி சிக்ரி அடங்கிய நியமன குழு ஆலோசனை நடத்தியது. ஆலோசனையின் முடிவில் அலோக் வர்மாவை சி.பி.ஐ., இயக்குனர் பொறுப்பிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட உள்ளார். வரும் ஜன.,31ஆம் தேதியுடன் அலோக் வர்மா பணி ஓய்வு பெறும் நிலையில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து அலோக் வர்மாவு சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, தீயணைப்புத் துறை இயக்குநராக நியமிக்கப் பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories